ETV Bharat / state

பெரியார் பல்கலைக்கழக விடுதியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை - பெரியார் பல்கலைக்கழக விடுதியில் தற்கொலை

சேலம்: பெரியார் பல்கலைக்கழகத்தில் படித்துவந்த மாணவி, தங்கும் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

periyar university
periyar university
author img

By

Published : Jan 11, 2020, 11:12 PM IST

Updated : Jan 11, 2020, 11:44 PM IST

சேலம் அருகே கருப்பூரில் பெரியார் பல்கலைக்கழகம் இயங்கிவருகிறது. இந்தப் பல்கலைக்கழக வளாகத்தின் உள்ளயே மாணவியர் தங்கும் விடுதி ஒன்றும் செயல்பட்டுவருகிறது. விடுதியில் தங்கியிருந்த தாவரவியல் முதுநிலை இரண்டாமாண்டு மேற்படிப்பு படித்த மாணவி நிவேதா இன்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து தகவலறிந்த மாணவிகள் சிலர் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து கருப்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சூரமங்கலம் உதவி ஆணையர் மற்றும் போலீசார் விரைந்து வந்து மாணவியின் இறப்பு குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறந்த மாணவி தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் வசிக்கும் சர்க்கரை ஆலை ஊழியர் திருமலை என்பவரின் மகள் நிவேதா என்பது தெரியவந்துள்ளது.

பெரியார் பல்கலைக்கழக விடுதியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை
பெரியார் பல்கலைக்கழக விடுதியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை
கடந்த சில நாள்களுக்கு முன்பு பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர், மாணவி ஒருவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் அது தொடர்பாக அந்த மாணவி பல்கலைக்கழக பதிவாளரிடம் புகார் அளித்ததாகவும் செய்திகள் வெளியாகியன. இதைத்தொடர்ந்து பதிவாளர் புகாரளித்த மாணவியையும் பேராசிரியரையும் நேரில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து வைத்ததாகவும் கூறப்படுகிறது .

இந்த விவகாரத்தில் மனமுடைந்த மாணவி, தனது பெற்றோருடன் காவல் நிலையம் சென்று புகாரளிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், மாணவி நிவேதா விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

நிவேதா மரணம் குறித்து தகவலறிந்த மாணவ, மாணவிகள் பல்கலைக்கழக வளாகத்தில் குவிந்துவருகின்றனர். மாணவி நிவேதா ஏன் தற்கொலை செய்துகொண்டார் என்பது குறித்து, பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால், பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்புக்காக ஏராளமான காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: 18 சவரன் கொள்ளைச் சம்பவம்: சிசிடிவியில் சிக்கிய ரவுடி

சேலம் அருகே கருப்பூரில் பெரியார் பல்கலைக்கழகம் இயங்கிவருகிறது. இந்தப் பல்கலைக்கழக வளாகத்தின் உள்ளயே மாணவியர் தங்கும் விடுதி ஒன்றும் செயல்பட்டுவருகிறது. விடுதியில் தங்கியிருந்த தாவரவியல் முதுநிலை இரண்டாமாண்டு மேற்படிப்பு படித்த மாணவி நிவேதா இன்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து தகவலறிந்த மாணவிகள் சிலர் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து கருப்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சூரமங்கலம் உதவி ஆணையர் மற்றும் போலீசார் விரைந்து வந்து மாணவியின் இறப்பு குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறந்த மாணவி தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் வசிக்கும் சர்க்கரை ஆலை ஊழியர் திருமலை என்பவரின் மகள் நிவேதா என்பது தெரியவந்துள்ளது.

பெரியார் பல்கலைக்கழக விடுதியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை
பெரியார் பல்கலைக்கழக விடுதியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை
கடந்த சில நாள்களுக்கு முன்பு பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர், மாணவி ஒருவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் அது தொடர்பாக அந்த மாணவி பல்கலைக்கழக பதிவாளரிடம் புகார் அளித்ததாகவும் செய்திகள் வெளியாகியன. இதைத்தொடர்ந்து பதிவாளர் புகாரளித்த மாணவியையும் பேராசிரியரையும் நேரில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து வைத்ததாகவும் கூறப்படுகிறது .

இந்த விவகாரத்தில் மனமுடைந்த மாணவி, தனது பெற்றோருடன் காவல் நிலையம் சென்று புகாரளிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், மாணவி நிவேதா விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

நிவேதா மரணம் குறித்து தகவலறிந்த மாணவ, மாணவிகள் பல்கலைக்கழக வளாகத்தில் குவிந்துவருகின்றனர். மாணவி நிவேதா ஏன் தற்கொலை செய்துகொண்டார் என்பது குறித்து, பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால், பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்புக்காக ஏராளமான காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: 18 சவரன் கொள்ளைச் சம்பவம்: சிசிடிவியில் சிக்கிய ரவுடி

Intro:

பெரியார் பல்கலைக்கழக விடுதியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை

சேலம் அடுத்த கருப்பு ஊரில் பெரியார் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது.

இந்த பல்கலைக்கழக வளாகத்தில் மாணவியர் தங்கும் விடுதி செயல்பட்டு வருகிறது .

அதில் இன்று மாலை தாவரவியல் முதுகலை பட்ட மேற்படிப்பு படித்த மாணவி நிவேதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர் அதே பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த மாணவி ஒருவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தாகவும் அது தொடர்பாக அந்த மாணவி மனமுடைந்த நிலையில் பல்கலைக்கழக பதிவாளரிடம் புகார் அளித்ததாகவும் செய்திகள் வெளியாகியது.

இதைத்தொடர்ந்து பதிவாளர் புகார் அளித்த மாணவியையும் பேராசிரியரையும் நேரில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து வைத்ததாகவும் கூறப்படுகிறது .

இந்த விவகாரத்தில் மனமுடைந்த மாணவி தனது பெற்றோருடன் காவல்நிலையம் சென்று புகார் அளிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின .



Body:
இந்த நிலையில் இன்று தாவரவியல் துறையைச் சேர்ந்த மாணவி நிவேதா விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது .Conclusion:
மாணவி தற்கொலை செய்து கொண்ட தகவல் அறிந்த கருப்பூர் காவல்துறையினர் பெரியார் பல்கலைக்கழக வளாகம் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
Last Updated : Jan 11, 2020, 11:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.