ETV Bharat / state

நகைக்கடை உரிமையாளர் வீட்டில் ஒன்றரை கிலோ தங்கம் கொள்ளை!

author img

By

Published : Dec 13, 2019, 3:41 PM IST

சேலம்: பிரபல நகைக்கடை உரிமையாளர் வீட்டில் பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Theft in Salem Jewellery shop owner
Theft in Salem Jewellery shop owner

சேலத்தின் குரங்குச்சாவடி பகுதியில் உள்ள பிரபல தனியார் கடையின் உரிமையாளர் ஸ்ரீனிவாசன். இவருக்கு சேலத்தில் மட்டும் சொந்தமாக மூன்று நகைக்கடைகள் உள்ளன. இந்நிலையில், ஸ்ரீனிவாசனின் மூன்றாவது மகனான ஸ்ரீபாஷ்யம் என்பவரின் வீட்டில் நேற்றிரவு பின்புற கதவை உடைத்து தங்க, வைர நகைகளை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இது குறித்து காவல் துறையினர் நடத்திய முதல்கட்ட விசாரணையில், ஒன்றரை கிலோ தங்கமும் ஆறு லட்சம் ரொக்கமும் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. மேலும், சில வைர நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதாகக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கொள்ளைச் சம்பவம் பற்றி தகவல் அறிந்த சூரமங்கலம் காவல் துறையினர், மோப்ப நாய்கள் உதவியுடன் நடத்திய சோதனையில், தாங்கள் வந்த வழியை கண்டுபிடிக்காமலிருக்க கொள்ளையர்கள் மிளகாய்ப் பொடியை தூவி சென்றுள்ளதும் தெரியவந்துள்ளது.

நகைக்கடை உரிமையாளர் வீட்டில் ஒன்றரை கிலோ தங்கம் கொள்ளை

மேலும், இரவு நேரத்தில் அடையாளம் தெரியாத இருவர், பின்புற தடுப்புச் சுவர் ஏறி வீட்டினுள்ளே குதித்ததைப் பார்த்த நகைக்கடை காவலாளிகள் அவர்களைப் பிடிக்க முற்பட்டதாகவும், ஆனால் அதற்குள் அவர்கள் சுவர் ஏறி குதித்து தப்பிச் சென்றதாகவும் காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.

இது குறித்து, சேலம் மாநகர காவல் துணை ஆணையாளர் செந்தில்குமார் தலைமையில் தீவிர விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. 10-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையிலும், கிலோ கணக்கிலான தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம், சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: கஞ்சா பதுக்கி வைத்த வட மாநில கும்பல் சென்னையில் கைது!

சேலத்தின் குரங்குச்சாவடி பகுதியில் உள்ள பிரபல தனியார் கடையின் உரிமையாளர் ஸ்ரீனிவாசன். இவருக்கு சேலத்தில் மட்டும் சொந்தமாக மூன்று நகைக்கடைகள் உள்ளன. இந்நிலையில், ஸ்ரீனிவாசனின் மூன்றாவது மகனான ஸ்ரீபாஷ்யம் என்பவரின் வீட்டில் நேற்றிரவு பின்புற கதவை உடைத்து தங்க, வைர நகைகளை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இது குறித்து காவல் துறையினர் நடத்திய முதல்கட்ட விசாரணையில், ஒன்றரை கிலோ தங்கமும் ஆறு லட்சம் ரொக்கமும் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. மேலும், சில வைர நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதாகக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கொள்ளைச் சம்பவம் பற்றி தகவல் அறிந்த சூரமங்கலம் காவல் துறையினர், மோப்ப நாய்கள் உதவியுடன் நடத்திய சோதனையில், தாங்கள் வந்த வழியை கண்டுபிடிக்காமலிருக்க கொள்ளையர்கள் மிளகாய்ப் பொடியை தூவி சென்றுள்ளதும் தெரியவந்துள்ளது.

நகைக்கடை உரிமையாளர் வீட்டில் ஒன்றரை கிலோ தங்கம் கொள்ளை

மேலும், இரவு நேரத்தில் அடையாளம் தெரியாத இருவர், பின்புற தடுப்புச் சுவர் ஏறி வீட்டினுள்ளே குதித்ததைப் பார்த்த நகைக்கடை காவலாளிகள் அவர்களைப் பிடிக்க முற்பட்டதாகவும், ஆனால் அதற்குள் அவர்கள் சுவர் ஏறி குதித்து தப்பிச் சென்றதாகவும் காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.

இது குறித்து, சேலம் மாநகர காவல் துணை ஆணையாளர் செந்தில்குமார் தலைமையில் தீவிர விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. 10-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையிலும், கிலோ கணக்கிலான தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம், சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: கஞ்சா பதுக்கி வைத்த வட மாநில கும்பல் சென்னையில் கைது!

Intro:சேலம் பிரபல நகைக்கடையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Body:சேலம் குரங்குசாவடி தொகுதியில் ஏ என் எஸ் திவ்யம் ஜூவல்லர்ஸ் என்ற பெயரில் பிரபல நகைக் கடை இயங்கி வருகிறது. இந்த நகை கடையின் உரிமையாளர் ஸ்ரீனிவாசன்.

நகைக் கடையின் அருகிலேயே சீனிவாசனின் பங்களா அமைந்துள்ளது சீனிவாசனுக்கு சேலத்தில் மூன்று நகைக்கடைகள் சொந்தமாக உள்ளது.

இந்த நிலையில் குரங்குசாவடி பகுதியிலுள்ள ஸ்ரீனிவாசனின் மூன்றாவது மகன் ஸ்ரீ பாஷ்யம் என்பவரின் வீட்டில் நேற்று இரவு பின்புற கதவை உடைத்து தங்க நகைகள் வைர நகைகள் மற்றும் பிளாட்டினம் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இதனை தொடர்ந்து இன்று காலையில் நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில் ஒரு கிலோ வரையிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட உள்ளதாக தகவல் கூறப்படுகிறது. மேலும் பல கிலோ அளவிலான தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட இருக்கலாம் என்றும் போலீசார் தரப்பில் தகவல் கிடைத்துள்ளது.

கொலை சம்பவம் பற்றி தகவல் அறிந்த சூரமங்கலம் போலீசார் மோப்ப நாய்கள் உதவியுடன் ஏ என் எஸ் நகை கடையின் பின்புறம் சோதனை நடத்தி வருகின்றனர்.

கொள்ளையர்கள் மோப்பநாய் கண்டுபிடிக்காத வகையில் தாங்கள் வந்த வழியில் மிளகாய் பொடியை தூவி சென்றுள்ளது தெரிய வந்துள்ளது.

மேலும் இரவு நேரத்தில் இரண்டு மர்ம நபர்கள் பின்புற காம்பவுண்ட் சுவர் ஏறி வீட்டினுள்ளே குதித்ததாகவும் அதை பார்த்த நகை கடை காவலாளிகள் சத்தமிட்டு கொண்டு அவர்களை பிடிக்க முற்பட்டதாகவும், ஆனால் அவர்கள் சுவர் ஏறி குதித்து தப்பி சென்றதாகவும் தகவல் கிடைத்துள்ளது.


Conclusion:சூரமங்கலம் போலீசார் , சேலம் மாநகர துணை காவல் ஆணையாளர் செந்தில்குமார் தலைமையில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
பத்துக்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் நகைக் கடையிலும் நகைக்கடை உரிமையாளரின் வீட்டைச் சுற்றிலும் அமைக்கப்பட்டு உள்ள நிலையிலும் , கிலோ கணக்கில் தங்க நகைகள் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது சம்பவம் சேலம் நகைக்கடை உரிமையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.