ETV Bharat / state

ஓமலூர் கயிறு தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து - ஓமலூர் கயிறு தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து

சேலம்: ஓமலூரில் கோழிப்பண்ணை, கயிறு தயாரிக்கும் தொழிற்சாலையில் மின்கசிவு காரணமாக நேற்றிரவு திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

omalur rope factory fire news
author img

By

Published : Sep 6, 2019, 11:38 AM IST

சேலம் மாவட்டம் ஓமலூர் செல்லப்பிள்ளை குட்டை பவானூர் கிராமத்தைச் சேர்ந்த கணேசன் கோழிப்பண்ணை, நார் மில், கயிறு தயாரிக்கும் தொழிற்சாலை வைத்து நடத்திவருகிறார். நேற்று இரவு எட்டு மணியளவில் மின்கசிவு காரணமாக இவரது கோழிப்பண்ணையில் பற்றிய தீ மளமளவென நார் மில், கயிறு தயாரிக்கும் தொழிற்சாலைக்கு பரவியது.

இதையறிந்த அக்கம்பக்கத்தினர் தீயை அணைக்க முயன்றும் முடியாததால் ஓமலூர் தீயணைப்பு துறை அலுவலர்களுக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு சேலம் மற்றும் ஓமலூரிலிருந்து வந்த தீயணைப்பு வாகனங்கள் சுமார் 4 மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். இதையடுத்து, மாவட்ட தீயணைப்பு அலுவலர் விஜயகுமார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டார்.

ஓமலூர் கயிறு தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து

இச்சம்பவம் குறித்து, ஓமலூர் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். இந்தத் தீ விபத்தில் சுமார் 20 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசமானதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சேலம் மாவட்டம் ஓமலூர் செல்லப்பிள்ளை குட்டை பவானூர் கிராமத்தைச் சேர்ந்த கணேசன் கோழிப்பண்ணை, நார் மில், கயிறு தயாரிக்கும் தொழிற்சாலை வைத்து நடத்திவருகிறார். நேற்று இரவு எட்டு மணியளவில் மின்கசிவு காரணமாக இவரது கோழிப்பண்ணையில் பற்றிய தீ மளமளவென நார் மில், கயிறு தயாரிக்கும் தொழிற்சாலைக்கு பரவியது.

இதையறிந்த அக்கம்பக்கத்தினர் தீயை அணைக்க முயன்றும் முடியாததால் ஓமலூர் தீயணைப்பு துறை அலுவலர்களுக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு சேலம் மற்றும் ஓமலூரிலிருந்து வந்த தீயணைப்பு வாகனங்கள் சுமார் 4 மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். இதையடுத்து, மாவட்ட தீயணைப்பு அலுவலர் விஜயகுமார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டார்.

ஓமலூர் கயிறு தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து

இச்சம்பவம் குறித்து, ஓமலூர் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். இந்தத் தீ விபத்தில் சுமார் 20 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசமானதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Intro:சேலம் மாவட்டம்
ஓமலூர் அருகே கோழிப்பண்ணை மற்றும் கயிறு தயாரிக்கும் தொழிற்சாலையில் மின் கசிவு காரணமாக, திடீர் தீ விபத்து ஏற்பட்டதில் 20 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது.Body:ஓமலூர் அருகே உள்ள செல்லப்பிள்ளை குட்டை பவானூர் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் .

இவர் அதே பகுதியில் கோழிப்பண்ணை மற்றும் நார் மில், கயிறு தயாரிக்கும் தொழிற்சாலை வைத்து நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் நேற்று இரவு 8 மணியளவில் மின் கசிவு காரணமாக இவரது கோழிப்பண்ணையில் பற்றிய தீ மள மளவென பரவி நார் மில், மற்றும் கயிறு தயாரிக்கும் தொழிற்சாலைக்கு பரவியது.

இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் தீணை அணைக்க முயன்றனர். தீ மேலும் பரவி கொழுந்து விட்டு எரிந்ததால் ஓமலூர் தீயணைப்புதுறை அதிகாரிகளுக்கு தகவல் கூறப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் தீயை அணைத்தனர்.

தீயை அணைக்க முடியாததால் சேலம் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர்.

இதை தொடர்ந்து சேலத்தில் இருந்து வந்த தீயணைப்பு வாகனம் மற்றும் ஓமலூர் தீயணைப்பு வாகனம் என இரண்டு வாகனங்கள் மூலம் சுமார் 4 மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட தீயணைப்பு அலுவலர் விஜயகுமார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டார்.


Conclusion:
இந்த தீ விபத்தில் சுமார் 20 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து ஓமலூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.