ETV Bharat / state

கரோனா எதிரொலி- ஏற்காடு மலர் கண்காட்சி இல்லை

சேலம்: ஊரடங்கு உத்தரவு காரணமாக இந்தாண்டு ஏற்காடு கோடை விழா மலர் கண்காட்சி நடைபெறாது என்று அரசு தோட்டக்கலைத் துறை அலுவலர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

கோடை விழா மலர் கண்காட்சி
கோடை விழா மலர் கண்காட்சி
author img

By

Published : Apr 20, 2020, 5:04 PM IST

கரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் மத்திய அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்காரணமாக பொதுமக்கள் தங்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் கூட்டமாக ஏற்காட்டிற்கு வருவது வழக்கம். மே மாதத்தில் கோடை விழா மலர் கண்காட்சி ஏற்காட்டில் வெகு விமரிசையாக நடத்தப்படும்.

தமிழ்நாடு அரசு தோட்டக்கலைத் துறை, தமிழ்நாடு சுற்றுலாத்துறை, சேலம் மாவட்ட நிர்வாகம் ஆகியவற்றின் சார்பில் நடத்தப்படும் கோடை விழா மலர் கண்காட்சியில், பல்வேறு கலாச்சார நடன நிகழ்ச்சிகளும், ஏற்காடு ஏரியில் படகு போட்டியும், செல்லப்பிராணிகள் கண்காட்சியும் நடைபெறும்.

மேலும் ஏற்காடு அண்ணா பூங்காவில் பல ஆயிரம் மலர்களைக் கொண்டு விதவிதமான அலங்காரங்கள் செய்யப்பட்ட காட்சி அரங்குகள் சுற்றுலாப் பயணிகளுக்காகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். கோடை விழா மலர் கண்காட்சியின்போது லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் ஏற்காட்டில் குவிவார்கள்.

ஏற்காடு கோடை விழா மலர் கண்காட்சி

கரோனா அச்சுறுத்தல் காரணமாக மே மூன்றாம் தேதி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என்பதால் இந்தாண்டு ஏற்காட்டில் கோடை விழா மலர் கண்காட்சி நடைபெறுவதற்கு வாய்ப்பு இல்லை என்று அரசு தோட்டக்கலைத் துறை அலுவலர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக ஏற்காடு தோட்டக்கலைத் துறை அலுவலர் ஒருவரிடம் விசாரித்தபோது , "சேலம் மாநகரம் முழுவதும் தடை உத்தரவால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு காய்கறிகள் பழங்கள் விற்பனை செய்யும் பணியில் அரசு தோட்டக்கலைத் துறையினர் ஈடுபட்டிருக்கிறார்கள். ஊரடங்கு உத்தரவு முடியும் வரை வேறு எந்த பணியையும் மேற்கொள்ள இயலாத நிலையுள்ளது. இதனால் இந்த ஆண்டு ஏற்காடு மலர் கண்காட்சி நடத்துவது குறித்து எந்த முடிவையும் எடுக்கவில்லை. எனவே வரும் மே மாதத்தில் ஏற்காடு கோடை விழா மலர் கண்காட்சி நடத்தப்பட வாய்ப்பு இல்லை" என்று தெரிவித்தார்.

இதையும் பார்க்க: ஊரடங்கு தளர்வை மறுபரிசீலனை செய்க- சுகாதாரத் துறை அமைச்சர்

கரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் மத்திய அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்காரணமாக பொதுமக்கள் தங்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் கூட்டமாக ஏற்காட்டிற்கு வருவது வழக்கம். மே மாதத்தில் கோடை விழா மலர் கண்காட்சி ஏற்காட்டில் வெகு விமரிசையாக நடத்தப்படும்.

தமிழ்நாடு அரசு தோட்டக்கலைத் துறை, தமிழ்நாடு சுற்றுலாத்துறை, சேலம் மாவட்ட நிர்வாகம் ஆகியவற்றின் சார்பில் நடத்தப்படும் கோடை விழா மலர் கண்காட்சியில், பல்வேறு கலாச்சார நடன நிகழ்ச்சிகளும், ஏற்காடு ஏரியில் படகு போட்டியும், செல்லப்பிராணிகள் கண்காட்சியும் நடைபெறும்.

மேலும் ஏற்காடு அண்ணா பூங்காவில் பல ஆயிரம் மலர்களைக் கொண்டு விதவிதமான அலங்காரங்கள் செய்யப்பட்ட காட்சி அரங்குகள் சுற்றுலாப் பயணிகளுக்காகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். கோடை விழா மலர் கண்காட்சியின்போது லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் ஏற்காட்டில் குவிவார்கள்.

ஏற்காடு கோடை விழா மலர் கண்காட்சி

கரோனா அச்சுறுத்தல் காரணமாக மே மூன்றாம் தேதி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என்பதால் இந்தாண்டு ஏற்காட்டில் கோடை விழா மலர் கண்காட்சி நடைபெறுவதற்கு வாய்ப்பு இல்லை என்று அரசு தோட்டக்கலைத் துறை அலுவலர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக ஏற்காடு தோட்டக்கலைத் துறை அலுவலர் ஒருவரிடம் விசாரித்தபோது , "சேலம் மாநகரம் முழுவதும் தடை உத்தரவால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு காய்கறிகள் பழங்கள் விற்பனை செய்யும் பணியில் அரசு தோட்டக்கலைத் துறையினர் ஈடுபட்டிருக்கிறார்கள். ஊரடங்கு உத்தரவு முடியும் வரை வேறு எந்த பணியையும் மேற்கொள்ள இயலாத நிலையுள்ளது. இதனால் இந்த ஆண்டு ஏற்காடு மலர் கண்காட்சி நடத்துவது குறித்து எந்த முடிவையும் எடுக்கவில்லை. எனவே வரும் மே மாதத்தில் ஏற்காடு கோடை விழா மலர் கண்காட்சி நடத்தப்பட வாய்ப்பு இல்லை" என்று தெரிவித்தார்.

இதையும் பார்க்க: ஊரடங்கு தளர்வை மறுபரிசீலனை செய்க- சுகாதாரத் துறை அமைச்சர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.