ETV Bharat / state

தமிழ்நாட்டில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் ஊடுருவத் திட்டம்: கண்காணிப்புகள் தீவிரம்! - NIA Information to salem police on IS terrorist

சேலம்: ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருக்கும் இளைஞர்கள் குறித்து தகவல் கிடைத்ததையடுத்து ரயில் நிலையங்களில் காவல் துறையினர் கண்காணிப்பைத் தீவிரப் படுத்தியுள்ளனர்.

NIA Information to salem police on IS terrorist infiltration
NIA Information to salem police on IS terrorist infiltration
author img

By

Published : Dec 21, 2019, 5:25 AM IST

கேரள மாநிலத்தில் ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருக்கும் இளைஞர்களை தேசிய புலனாய்வு முகமையைச் சேர்ந்த அலுவலர்கள் தீவிரமாகக் கண்காணித்துவருகின்றனர்.

மேலும் பயங்கரவாதிகள் சிலர் கேரளாவில் பதுங்கியிருக்கலாம் எனவும் தெரிய வந்ததையடுத்து தேசிய புலனாய்வு முகமை அலுவலர்கள் கேரளா, தமிழ்நாடு எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பை பலப்படுத்திவருகிறார்கள்.

விசாரணையில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சையத் அலி நிவாஸ், அப்துல் சமீம், பரங்கிப்பேட்டையைச் சேர்ந்த அப்துல் சமது, காஜா முகைதீன் ஆகிய நான்கு பேர் கேரள மாநிலத்தில் பதுங்கியிருந்து பின்னர் கன்னியாகுமரி வழியாகத் தமிழ்நாட்டிற்குள் ஊடுருவ உள்ளதாக தேசிய புலனாய்வு முகமை அலுவலர்களுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இந்த நான்கு பேரும் இந்து தலைவர்களை கொலை செய்ய சதி திட்டம் தீட்டி இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து தேசிய புலனாய்வு முகமை அலுவலர்கள், தமிழ்நாடு காவல்துறை உயர் அலுவலர்கள், ரயில்வே காவல் துறையினர், ரயில்வே பாதுகாப்புப் படை காவல் துறையினருக்குத் பயங்கரவாதிகளின் புகைப்படங்களை அனுப்பி கண்காணிக்க அறிவுறுத்தினர்.

இந்த நால்வரும் சேலம் வந்து ரயில்களில் தப்பிச் செல்லலாம், எனவே இவர்களை கைது செய்யுமாறு தேசிய புலனாய்வு முகமை அலுவலர்கள் காவல் துறையினரிடம் கேட்டுக்கொண்டனர்.

இதனையடுத்து சேலம் ஜங்சன் ரயில் நிலையம் வழியே செல்லும் அனைத்து ரயில்களிலும் ரயில்வே காவல் துறையினர், ரயில்வே பாதுகாப்புப் படை காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

கண்காணிப்பு தீவிரம்

இது தவிர நான்கு பேரின் புகைப்படங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களைப் பயணிகளுக்கு வழங்கி நான்கு பேர் குறித்து தகவல் தெரிந்தால் உடனே 1512 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தெரிவிக்குமாறும் கேட்டுக்கொண்டனர்.

இதையும் படிங்க: சமூக வலைதளங்களில் வைரலாகிவரும் வனக்காப்பாளரின் இளையராஜா பாடல்

கேரள மாநிலத்தில் ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருக்கும் இளைஞர்களை தேசிய புலனாய்வு முகமையைச் சேர்ந்த அலுவலர்கள் தீவிரமாகக் கண்காணித்துவருகின்றனர்.

மேலும் பயங்கரவாதிகள் சிலர் கேரளாவில் பதுங்கியிருக்கலாம் எனவும் தெரிய வந்ததையடுத்து தேசிய புலனாய்வு முகமை அலுவலர்கள் கேரளா, தமிழ்நாடு எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பை பலப்படுத்திவருகிறார்கள்.

விசாரணையில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சையத் அலி நிவாஸ், அப்துல் சமீம், பரங்கிப்பேட்டையைச் சேர்ந்த அப்துல் சமது, காஜா முகைதீன் ஆகிய நான்கு பேர் கேரள மாநிலத்தில் பதுங்கியிருந்து பின்னர் கன்னியாகுமரி வழியாகத் தமிழ்நாட்டிற்குள் ஊடுருவ உள்ளதாக தேசிய புலனாய்வு முகமை அலுவலர்களுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இந்த நான்கு பேரும் இந்து தலைவர்களை கொலை செய்ய சதி திட்டம் தீட்டி இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து தேசிய புலனாய்வு முகமை அலுவலர்கள், தமிழ்நாடு காவல்துறை உயர் அலுவலர்கள், ரயில்வே காவல் துறையினர், ரயில்வே பாதுகாப்புப் படை காவல் துறையினருக்குத் பயங்கரவாதிகளின் புகைப்படங்களை அனுப்பி கண்காணிக்க அறிவுறுத்தினர்.

இந்த நால்வரும் சேலம் வந்து ரயில்களில் தப்பிச் செல்லலாம், எனவே இவர்களை கைது செய்யுமாறு தேசிய புலனாய்வு முகமை அலுவலர்கள் காவல் துறையினரிடம் கேட்டுக்கொண்டனர்.

இதனையடுத்து சேலம் ஜங்சன் ரயில் நிலையம் வழியே செல்லும் அனைத்து ரயில்களிலும் ரயில்வே காவல் துறையினர், ரயில்வே பாதுகாப்புப் படை காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

கண்காணிப்பு தீவிரம்

இது தவிர நான்கு பேரின் புகைப்படங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களைப் பயணிகளுக்கு வழங்கி நான்கு பேர் குறித்து தகவல் தெரிந்தால் உடனே 1512 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தெரிவிக்குமாறும் கேட்டுக்கொண்டனர்.

இதையும் படிங்க: சமூக வலைதளங்களில் வைரலாகிவரும் வனக்காப்பாளரின் இளையராஜா பாடல்

Intro:ரயில் நிலையங்களில் காவல்துறையினர் கண்காணிப்பு தீவிரம்.நான்கு தீவிரவாதிகளின் புகைப்படங்களை பயணிகளிடம் வழங்கி தகவல் தெரிவிக்க கூறினர்.Body:
கேரள மாநிலத்தில் ஐஎஸ் தீவிரவாதி களுடன் தொடர்பில் இருக்கும் இளைஞர்களை என்.ஐ.யே அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

தீவிரவாதிகள் சிலர் கேரள மாநிலத்தில் பதுங்கியிருக்கலாம் என தெரிய வந்ததையடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் கேரள மாநிலம் மற்றும் தமிழக எல்லைப் பகுதிகளில் கண்காணித்து வருகிறார்கள். இவர்களது விசாரணையில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த சையத்அலிநிவாஸ் மற்றும் அப்துல் சமீம் ,
பரங்கிப்பேட்டையை சேர்ந்த அப்துல் சமது மற்றும் காஜா முகைதீன் ஆகிய நான்குபேர்
கேரள மாநிலத்தில் பதுங்கியிருந்து பின்னர் கன்னியாகுமரி வழியாக தமிழகத்திற்கு ஊடுருவி உள்ளதாக என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இந்த 4 பேரும் இந்து தலைவர்களை கொலை செய்ய சதி திட்டம் தீட்டி இருப்பதாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து
என். ஐ. ஏ அதிகாரிகள் தமிழக காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு தீவிரவாதிகள் புகைப்படங்களை அனுப்பி வைத்து
கண்காணிக்க கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்த 4 பேரும் சேலம் வந்து ரெயில்களில் தப்பிச் செல்லலாம்.இதனால் இவர்களை கைது செய்யுமாறு
என் .ஐ .ஏ.
அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர் .
இதனையடுத்து சேலம் ஜங்சன் ரெயில் நிலையம் வழியே செல்லும் ரயில்களில் ரெயில்வே போலீசாரும், ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாரும் கண்காணித்து வருகிறார்கள் .
இது தவிர நான்கு பேரின் புகைப்படங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களைபயணிகளுக்கு வழங்கி நான்கு பேர் பற்றி தகவல் தெரிந்தால் உடனே 1512 என்ற இலவச தொலைபேசியில் தெரிவிக்குமாறும் கேட்டுகொண்டனர்.

visual send mojo Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.