சேலம்: கர்நாடக மாநிலம் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையின் அளவைப் பொறுத்தும், அம்மாநில அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவைப் பொறுத்தும், சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக உள்ளது.
இந்த நிலையில், இன்று (அக்.25) காலை நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 100.080 அடியாகவும், நீர் இருப்பு 64. 844 டி.எம்.சியாகவும் உள்ளது.
மேலும், டெல்டா மாவட்ட பாசனத் தேவைக்காக விநாடிக்கு 9000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 800 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.