ETV Bharat / state

சேலத்தில் மனித உரிமைகள், ஏழ்மை ஒழிப்பிற்கான சட்ட விழிப்புணர்வு முகாம்! - சர்வதேச மனித உரிமைகள்

சேலம்: மனித உரிமைகளை மதித்து அனைவரும் சமூகத்தில் அமைதி காத்து வாழ வேண்டும் என்று, ஜலகண்டாபுரத்தில் நடைபெற்ற ஏழ்மை ஒழிப்பிற்கான சட்ட விழிப்புணர்வு முகாமில் பங்கேற்ற சார்பு நீதிபதி சக்திவேல் வலியுறுத்தினார்.

Salem
Salem
author img

By

Published : Dec 11, 2019, 9:32 AM IST

சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுரு தலைமையில் மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு, மனித உரிமைகள், ஏழ்மை ஒழிப்பிற்கான சட்ட விழிப்புணர்வு முகாம் நேற்று நடைபெற்றது. இதில் சார்பு நீதிபதி சக்திவேல் கலந்துகொண்டு சட்ட விழிப்புணர்வு பற்றி சிறப்புரையாற்றினார்.

அப்போது, அறநெறிகளின் அடிப்படையில் பின்பற்றப்படும் உரிமைகள் காலம்தோறும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. சமுதாயத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒழுக்கங்களுக்கும், உரிமைகளுக்கும் சட்டப் பின்னணி கிடையாது. இவை சட்டத்தால் காக்கப்படுபவை அல்ல. குழந்தைகளின் உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும் என்பதை அனைத்து சமுதாயமும் ஏற்றுக் கொள்கிறது.

மனித உரிமைகள், ஏழ்மை ஒழிப்பிற்கான சட்ட விழிப்புணர்வு முகாம்

எனவே மனித உரிமைகளை மதித்து அனைத்து தரப்பினரும் சமூகத்தில் அமைதி காத்து வாழ வழிவகுக்க வேண்டும் என்றார். முகாமில் எடப்பாடி சார்பு நீதிமன்ற வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: பெண்களுக்கு எதிரான வன்முறை அடிப்படை உரிமைகளின் தோல்வி - குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுரு தலைமையில் மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு, மனித உரிமைகள், ஏழ்மை ஒழிப்பிற்கான சட்ட விழிப்புணர்வு முகாம் நேற்று நடைபெற்றது. இதில் சார்பு நீதிபதி சக்திவேல் கலந்துகொண்டு சட்ட விழிப்புணர்வு பற்றி சிறப்புரையாற்றினார்.

அப்போது, அறநெறிகளின் அடிப்படையில் பின்பற்றப்படும் உரிமைகள் காலம்தோறும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. சமுதாயத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒழுக்கங்களுக்கும், உரிமைகளுக்கும் சட்டப் பின்னணி கிடையாது. இவை சட்டத்தால் காக்கப்படுபவை அல்ல. குழந்தைகளின் உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும் என்பதை அனைத்து சமுதாயமும் ஏற்றுக் கொள்கிறது.

மனித உரிமைகள், ஏழ்மை ஒழிப்பிற்கான சட்ட விழிப்புணர்வு முகாம்

எனவே மனித உரிமைகளை மதித்து அனைத்து தரப்பினரும் சமூகத்தில் அமைதி காத்து வாழ வழிவகுக்க வேண்டும் என்றார். முகாமில் எடப்பாடி சார்பு நீதிமன்ற வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: பெண்களுக்கு எதிரான வன்முறை அடிப்படை உரிமைகளின் தோல்வி - குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

Intro:சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தில் மனித உரிமைகள் மற்றும் ஏழ்மை ஒளிப்பிற்கான சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்ற்றது.Body:
ஐக்கிய நாடுகள் 1948 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் நாள் உலக மனித உரிமைகள் தினம்
என உலக மக்கள் அனைவருக்குமான வாழ்வுரிமைகளை பிரகடனப்படுத்தியது.

அந்த நாளைக் குறிக்கும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் 10 ஆம் தேதி உலக நாடுகளில் ”மனித உரிமை நாள்” கொண்டாடப்படுகிறது.

அந்த வகையில் இன்று ஜலகண்டாபுரத்தில், குமரகுரு முதன்மை மாவட்ட நீதிபதி அவர்கள் தலைமையில் மனித உரிமைகள் தினம் கொண்டாடப்பட்டது.

இதில் சார்பு நீதிபதி சக்தி வேல் கலந்துகொண்டு சட்ட விழிப்புணர்வு பற்றி சிறப்புரை ஆற்றினார்.

சமூகத்தில் அற நெறி தவறாது வாழ்ந்த பெரிய மனிதர்கள் சுட்டிக்காட்டிய அறநெறிகள் அடிப்படையில் பின்பற்றப்படும் உரிமைகள் அறநெறி உரிமைகள் என்று காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

அதாவது சமுதாயத்தால் அங்ககீகரிக்கப்பட்ட ஒழுக்கங்கள் உரிமைகளுக்கு சட்டப் பிண்ணனி கிடையாது. சட்டத்தால் காக்கப்படுபவை அல்ல. எந்த நீதிமன்றத்தாலும் இவ்வுரிமைகளைக் கட்டுப்படுத்த இயலாது.

எடுத்துக்காட்டாக குழந்தைகளின் உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும் என்பதை எல்லா சமுதாயமும் ஏற்றுக் கொள்கிறது. ஆனால் ஒருவேளை குழந்தைகள் நலனில் பெற்றோர் அக்கறை எடுத்துக்கொள்ளவில்லை என்றாலும் கூட அவர்களை எந்த நீதிமன்றமும் தண்டிக்க முடியாது.

அதாவது அறநெறி உரிமை என்பது தார்மீகத் தன்மையைச் சார்ந்ததாகும். எனவே மனித உரிமைகளை மதித்து அனைத்து தரப்பினரும் சமூக அமைதி காத்து வாழ வேண்டும் என்று சக்திவேல் கேட்டுக்கொண்டார்.Conclusion:இந்த விழாவில் எடப்பாடி சார்பு நீதிமன்ற வழக்கறிஞர்கள் சமூக ஆர்வலர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.