ETV Bharat / state

காதல் தம்பதி தற்கொலைக்கு முயற்சி: காவல் துறை விசாரணை - தீ வைத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்

சேலம்: மேட்டூர் அடுத்த கொளத்தூர் பகுதியில் காதல் திருமணமான நான்கே மாதத்தில் தம்பதியினர் இருவரும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

new married couple suicide attempt
new married couple suicide attempt
author img

By

Published : Feb 2, 2020, 8:28 AM IST

சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த கொளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பொறியியல் பட்டதாரியான தீபக் (24) அப்பகுதியிலுள்ள உரக்கடை ஒன்றில் வேலை செய்துவருகிறார். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த தனது அத்தை மகளான வேதவள்ளி என்பவரைக் காதலித்து, நான்கு மாதங்களுக்கு முன் திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல் வேதவள்ளி, தீபக்கை வேலைக்கு அனுப்பி வைத்துவிட்டு அருகிலுள்ள தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு சென்ற அவர், சிறிது நேரத்தில் அலறி சத்தம் போட்டுள்ளார்.

இதனைக்கேட்டு உள்ளே சென்ற அவரது பெற்றோர் பார்க்கையில் வேதவள்ளி தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதன்பின் உடலில் தீக்காயங்களுடன் அவரை மீட்டு அருகேவுள்ள மேட்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

அங்கு வேதவள்ளிக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, பின் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மனைவி தீக்குளித்த செய்தியறிந்த தீபக் எலி மருந்து தின்ற நிலையில், மேட்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார்.

இது குறித்து தகவலறிந்த மேட்டூர் காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில் வேதவள்ளி, சிறுநீரகத்தில் படிந்துள்ள கற்களால் ஏற்பட்ட வலி தாங்காமல் தீக்குளித்து தற்கொலை முயற்சிசெய்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

காதல் தம்பதி தற்கொலைக்கு முயற்சி

ஆனால் திருமணமான நான்கே மாதத்தில் காதல் தம்பதி தற்கொலைக்கு முயன்றதற்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து கொளத்தூர் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: இளம்பெண்ணை சீண்டிய இளைஞர் போக்சோவில் கைது!

சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த கொளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பொறியியல் பட்டதாரியான தீபக் (24) அப்பகுதியிலுள்ள உரக்கடை ஒன்றில் வேலை செய்துவருகிறார். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த தனது அத்தை மகளான வேதவள்ளி என்பவரைக் காதலித்து, நான்கு மாதங்களுக்கு முன் திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல் வேதவள்ளி, தீபக்கை வேலைக்கு அனுப்பி வைத்துவிட்டு அருகிலுள்ள தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு சென்ற அவர், சிறிது நேரத்தில் அலறி சத்தம் போட்டுள்ளார்.

இதனைக்கேட்டு உள்ளே சென்ற அவரது பெற்றோர் பார்க்கையில் வேதவள்ளி தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதன்பின் உடலில் தீக்காயங்களுடன் அவரை மீட்டு அருகேவுள்ள மேட்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

அங்கு வேதவள்ளிக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, பின் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மனைவி தீக்குளித்த செய்தியறிந்த தீபக் எலி மருந்து தின்ற நிலையில், மேட்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார்.

இது குறித்து தகவலறிந்த மேட்டூர் காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில் வேதவள்ளி, சிறுநீரகத்தில் படிந்துள்ள கற்களால் ஏற்பட்ட வலி தாங்காமல் தீக்குளித்து தற்கொலை முயற்சிசெய்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

காதல் தம்பதி தற்கொலைக்கு முயற்சி

ஆனால் திருமணமான நான்கே மாதத்தில் காதல் தம்பதி தற்கொலைக்கு முயன்றதற்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து கொளத்தூர் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: இளம்பெண்ணை சீண்டிய இளைஞர் போக்சோவில் கைது!

Intro:காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதி தற்கொலைக்கு முயற்சி: கொளத்தூர் அருகே சோகம்
Body:
சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த கொளத்தூர் ,சின்னத் தண்டா,சி.எஸ் காலனியைச் சேர்ந்த பழனியப்பன் மகன்
பொறியியல் பட்டதாரி தீபக்(24).கொளத்தூரில் உள்ள உரக்கடை வேலை செய்து வருகிறார்.

இதே பகுதியைச் சேர்ந்த சின்னராசு மகள் வேதவள்ளி (21) .பட்டதாரி பெண்.

அத்தை மகளான வேதவள்ளி,
மாமன் மகனான தீபக் ஆகிய இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்த நிலையில் இரு வீட்டார் சம்மதத்துடன் 4 மாதங்களுக்கு திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் வேதவள்ளி ,தீபக்கை கொளத்தூருக்கு வேலைக்கு அனுப்பி வைத்து விட்டு அருகிலுள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

சிறிது நேரத்தில் வீட்டிற்குள் அலறல் சத்தம் கேட்டு உள்ளே சென்று பெற்றோர் பார்க்கையில்
வேதவள்ளி தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டு உடலில் தீப்பற்றி எரிந்த நிலையில் கதறியது கண்டு பெற்றோர் அவரை மீட்டுள்ளனர்.

பின்னர்
ஆபத்தான நிலையில் மேட்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு முதலுதவி அளிக்கப் பட்டு
சேலம் அரசு மருத்துவமனைக்கு மேல்
சிகிச்சைக்காக வேதவல்லி அனுமதிக்கப் பட்டுள்ளார்.மனைவி தீக்குளித்த செய்தியறிந்த தீபக் எலி மருந்து தின்ற நிலையில்,
மேட்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் வேதவல்லி , சிறுநீரகத்தில் படிந்துள்ள கற்களால் ஏற்பட்ட வலியின் கொடுமை தாங்காமல் தீ குளித்து தற்கொலை முயற்சி செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Conclusion:
திருமணமான நான்கே மாதத்தில் தம்பதி தற்கொலைக்கு முயன்றதற்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா ? என்பது குறித்து கொளத்தூர் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.