ETV Bharat / state

ஈடிவி பாரத் செய்தி எதிரொலி: மாற்றுத் திறனாளிகளுக்கு கிடைத்த பாதை.!

author img

By

Published : Jan 30, 2020, 6:17 PM IST

சேலம்: ஈடிவி பாரத் செய்தி எதிரொலி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் அகற்றி நாற்காலிகள் அமைக்கப்பட்டு மாற்றுத்திறனாளிகள் அமரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்ட ஆட்சியர் பார்க்கிங் பிரச்சனை ஈடிவி பாரத் எதிரொலி மாவட்ட ஆட்சியர் பார்க்கிங் பிரச்சனை தீர்வு வட்ட ஆட்சியர் பார்க்கிங் பிரச்சனை தீர்வு Salem disabled office parking issue Salem Collector Office Disabled Parking Issue ETV Bharat Reflection Collector Office Disabled Parking Issue
Salem Collector Office Disabled Parking Issue

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தரைத்தளத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறை அலுவலகம் இயங்கிவருகிறது. இந்த அலுவலகத்திற்கு வாரநாள்களில் நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்து தங்களுக்குத் தேவையான உதவிகளைக் கேட்டுப் பெற்றுவருகின்றனர்.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மூன்று சக்கர வாகனங்கள், ஊன்று கோல்கள், செயற்கை கால்கள், பேட்டரி வாகனங்கள் என்று பல்வேறு வகையிலான உதவிகள் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டுவருகிறது.

இந்நிலையில், கடந்த பல மாதங்களாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலகத்தின் நுழைவுவாயில் பகுதி, இருசக்கர வாகனங்கள் ஆக்ரமிக்கப்பட்டு நிறுத்துமிடமாக மாறி மாற்றுத்திறனாளிகள் வந்து செல்வதில் கடும் அவதிப்பட்டுவந்தனர். கண் பார்வைத் திறன் குறைந்தவர்கள், நடக்க இயலாத மாற்றுத் திறனாளிகள் எனப் பலவகை மாற்றுத்திறனாளிகள் அலுவலக நுழைவு வாயிலின் வழியாக உள்ளே செல்ல இயலாமல் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களில் இடித்துக்கொள்வதால் காயமேற்பட்டு அவதிப்பட்டுவந்தனர்.

இது தொடர்பாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், மாற்றுத் திறனாளிகள் படும் அவஸ்தை குறித்து நமது ஈடிவி பாரத் செய்தி தளத்தில் கடந்த 13ஆம் தேதி செய்தி வெளியிடப்பட்டது. அந்த செய்தியின் மூலம் விவரம் அறிந்த மாவட்ட ஆட்சியர் உடனடியாக இருசக்கர வாகனங்களை அகற்றவும் மாற்றுத்திறனாளிகள் அமரும் வண்ணம் நாற்காலிகள் அமைக்கவும் உத்தரவிட்டார்.

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

இதனையடுத்து அப்பகுதியில் ஆக்ரமித்திருந்த இருசக்கர வாகனங்கள் அகற்றப்பட்டு நாற்காலிகள் அமைக்கப்பட்டுள்ளது. நீண்ட வரிசையில் நிற்க இயலாமல் தவிக்கும் மாற்றுத்திறனாளிகள் தற்போது நாற்காலிகளில் அமர்ந்து பொறுமையாக அலுவலர்களை சந்தித்து தங்களுக்குத் தேவையான கோரிக்கைகளை மனுவாக அளித்து அவற்றின் மீது தீர்வு பெற்று மகிழ்ச்சியுடன் செல்கின்றனர். மேலும் செய்தி வெளியிட்ட ஈடிவி பாரத் செய்தி தளத்திற்கு நன்றி தெரிவித்தனர்

இதையும் படிங்க:

லக்னோவில் பரவும் பன்றிக்காய்ச்சல்: ஒருவர் உயிரிழப்பு

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தரைத்தளத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறை அலுவலகம் இயங்கிவருகிறது. இந்த அலுவலகத்திற்கு வாரநாள்களில் நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்து தங்களுக்குத் தேவையான உதவிகளைக் கேட்டுப் பெற்றுவருகின்றனர்.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மூன்று சக்கர வாகனங்கள், ஊன்று கோல்கள், செயற்கை கால்கள், பேட்டரி வாகனங்கள் என்று பல்வேறு வகையிலான உதவிகள் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டுவருகிறது.

இந்நிலையில், கடந்த பல மாதங்களாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலகத்தின் நுழைவுவாயில் பகுதி, இருசக்கர வாகனங்கள் ஆக்ரமிக்கப்பட்டு நிறுத்துமிடமாக மாறி மாற்றுத்திறனாளிகள் வந்து செல்வதில் கடும் அவதிப்பட்டுவந்தனர். கண் பார்வைத் திறன் குறைந்தவர்கள், நடக்க இயலாத மாற்றுத் திறனாளிகள் எனப் பலவகை மாற்றுத்திறனாளிகள் அலுவலக நுழைவு வாயிலின் வழியாக உள்ளே செல்ல இயலாமல் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களில் இடித்துக்கொள்வதால் காயமேற்பட்டு அவதிப்பட்டுவந்தனர்.

இது தொடர்பாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், மாற்றுத் திறனாளிகள் படும் அவஸ்தை குறித்து நமது ஈடிவி பாரத் செய்தி தளத்தில் கடந்த 13ஆம் தேதி செய்தி வெளியிடப்பட்டது. அந்த செய்தியின் மூலம் விவரம் அறிந்த மாவட்ட ஆட்சியர் உடனடியாக இருசக்கர வாகனங்களை அகற்றவும் மாற்றுத்திறனாளிகள் அமரும் வண்ணம் நாற்காலிகள் அமைக்கவும் உத்தரவிட்டார்.

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

இதனையடுத்து அப்பகுதியில் ஆக்ரமித்திருந்த இருசக்கர வாகனங்கள் அகற்றப்பட்டு நாற்காலிகள் அமைக்கப்பட்டுள்ளது. நீண்ட வரிசையில் நிற்க இயலாமல் தவிக்கும் மாற்றுத்திறனாளிகள் தற்போது நாற்காலிகளில் அமர்ந்து பொறுமையாக அலுவலர்களை சந்தித்து தங்களுக்குத் தேவையான கோரிக்கைகளை மனுவாக அளித்து அவற்றின் மீது தீர்வு பெற்று மகிழ்ச்சியுடன் செல்கின்றனர். மேலும் செய்தி வெளியிட்ட ஈடிவி பாரத் செய்தி தளத்திற்கு நன்றி தெரிவித்தனர்

இதையும் படிங்க:

லக்னோவில் பரவும் பன்றிக்காய்ச்சல்: ஒருவர் உயிரிழப்பு

Intro:சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் மாற்றுத் திறனாளிகள் நல அலுவலக நுழைவு வாயில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடமாக செயல்பட்டு வந்தது குறித்தும் அதனால் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திற்கு வரும் மாற்றுத்திறனாளிகள் படும் அவதிகள் குறித்தும் இடிவி பாரத் கடந்த 13ஆம் தேதி செய்தி வெளியிட்டு இருந்தது.

இதன் எதிரொலியாக தற்போது அந்தப் பகுதியில் இருந்த அதிகாரிகளின் இருசக்கர வாகனங்கள் அகற்றப்பட்டு சாய்வு நாற்காலிகள் பெஞ்சுகள் அமைக்கப்பட்டு மாற்றுத்திறனாளிகள் அமரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Body:சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தரைத்தளத்தில் மாற்றுத்திறனாளிகள் நல துறை அலுவலகம் இயங்கி வருகிறது.

இந்த அலுவலகத்திற்கு வாரநாட்களில் நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்து தங்களுக்கு தேவையான உதவிகளை கேட்டு பெற்றுவருகின்றனர்.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மூன்று சக்கர வாகனங்கள், ஊன்று கோல்கள், செயற்கை கால்கள், பேட்டரி வாகனங்கள் என்று பல்வேறு வகையிலான உதவிகள் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மாற்றுத்திறனாளிகள் நல துறை அலுவலகத்தின் நுழைவு வாயில் பகுதி இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாற்றப்பட்டு கடந்த பல மாதங்களாக மாற்றுத்திறனாளிகள் கடும் அவதிப்பட்டு வந்தனர்.

கண் பார்வைத் திறன் குறைந்தவர்கள் நடக்க இயலாத மாற்றுத் திறனாளிகள் என பல்வகை மாற்றுத்திறனாளிகள் அலுவலக நுழைவு வாயிலின் வழியாக உள்ளே செல்ல இயலாமல் நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்களில் மோதி அவதிப்பட்டு வந்தனர்.

இதுதொடர்பாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலரிடமும் அதிகாரிகளிடமும் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தது .

இந்த நிலையில் மாற்றுத்திறனாளிகள் படும் அவஸ்தை குறித்து இடிவி பாரத் தமிழ் இணைய தள பக்கத்தில் கடந்த 13ம் தேதி செய்தி வெளியிடப்பட்டது.

அந்த செய்தியை அறிந்த மாவட்ட ஆட்சியர் உடனடியாக இருசக்கர வாகனங்களை அகற்றவும் மாற்றுத்திறனாளிகள் அமரும் வண்ணம் பெஞ்சுகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.


Conclusion:இதனையடுத்து உடனடியாக இருசக்கர வாகனங்கள் அகற்றப்பட்டு பெஞ்சுகள் அமைக்கப்பட்டுள்ளது.

நீண்ட வரிசையில் நிற்க இயலாமல் தவிக்கும் மாற்றுத்திறனாளிகள் தற்போது நீளமான பெஞ்சுகளில் அமர்ந்து பொறுமையாக அதிகாரியை சந்தித்து தங்களுக்கு தேவையான கோரிக்கைகளை மனுவாக எழுதி அழித்து அவற்றின் மீது தீர்வு பெற்று மகிழ்ச்சியுடன் செல்கின்றனர்.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.