ETV Bharat / state

தோஷம் கழிப்பதாகக் கூறி பெண்களிடம் தங்க நகைகள் திருட்டு - gold Jewellery theft from women in salem

சேலத்தில் தோஷம் கழிப்பதாகக் கூறி, வீட்டுக்குள் நுழைந்து பெண்களிடம் நகையைக் கொள்ளையடித்துச் சென்ற மந்திரவாதி வேடத்தில் வந்த திருடனை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

தோஷம் கழிப்பதாகக் கூறி பெண்களிடம் தங்க நகைகள் திருட்டு
தோஷம் கழிப்பதாகக் கூறி பெண்களிடம் தங்க நகைகள் திருட்டு
author img

By

Published : Dec 22, 2021, 10:49 PM IST

சேலம் லைன்மேடு அருகே உள்ள வடக்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர், ஆயிஷா. இவர் தனது மகளுடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் தாய்-மகள் தனியாக இருப்பதை அறிந்து கொண்ட மந்திரவாதி வேடத்தில் வந்த திருடன், உங்கள் வீட்டில் பில்லி சூனியம் வைக்கப்பட்டுள்ளது.

இதனைக் கழித்துவிடச் சிறப்புப் பூஜைகள் செய்ய வேண்டும் எனக்கூறி, தாய் மகளிடம் தெரிவித்துள்ளார். இதனை நம்பி அந்த போலி மந்திரவாதியைப் பூஜை செய்ய வீட்டிற்குள் அனுமதித்து உள்ளனர்.

இதையடுத்து, பூஜை செய்து கொண்டு இருந்தபோது மகள் அணிந்திருந்த இரண்டரை சவரன் நகைகளைக் கழற்றி மந்திரவாதி வைத்திருந்த சொம்பில் போடும்படி தெரிவித்துள்ளார்.

தோஷம் கழிப்பதாகக் கூறி பெண்களிடம் தங்க நகைகள் திருட்டு
தோஷம் கழிப்பதாகக் கூறி பெண்களிடம் தங்க நகைகள் திருட்டு
இதையடுத்து அந்தப்பெண்ணும் தான் அணிந்திருந்த நகையைக் கழற்றி சொம்பினுள் போட்டுள்ளனர். பின்னர் சிறிது நேரத்தில் மந்திரவாதி சாம்பிராணி புகைப் போட்டுள்ளார். அப்போது புகைமூட்டம் அதிகமாக இருந்த நேரத்தில், சொம்பிலிருந்த நகையை எடுத்துக்கொண்டு போலி மந்திரவாதி தப்பிச் சென்றுள்ளார்.
போலி மந்திரவாதிக்கு போலீசார் வலைவீச்சு
போலி மந்திரவாதிக்கு போலீசார் வலைவீச்சு

அதன் பின்னர் தாய், மகள் இருவரும் ஏமாற்றப்பட்டதை அறிந்து இதுகுறித்து அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்தப் புகாரின் பேரில் அன்னதானப்பட்டி காவல் துறையினர், இப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து நகையைக் கொள்ளையடித்துச் சென்ற மந்திரவாதி குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வீட்டுக்குள் நுழைந்து தோஷம் கழிப்பதாகக் கூறி, போலி மந்திரவாதி நகைத்திருட்டில் ஈடுபட்ட சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: இன்ஸ்ட்ராகிராமில் பழகி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது

சேலம் லைன்மேடு அருகே உள்ள வடக்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர், ஆயிஷா. இவர் தனது மகளுடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் தாய்-மகள் தனியாக இருப்பதை அறிந்து கொண்ட மந்திரவாதி வேடத்தில் வந்த திருடன், உங்கள் வீட்டில் பில்லி சூனியம் வைக்கப்பட்டுள்ளது.

இதனைக் கழித்துவிடச் சிறப்புப் பூஜைகள் செய்ய வேண்டும் எனக்கூறி, தாய் மகளிடம் தெரிவித்துள்ளார். இதனை நம்பி அந்த போலி மந்திரவாதியைப் பூஜை செய்ய வீட்டிற்குள் அனுமதித்து உள்ளனர்.

இதையடுத்து, பூஜை செய்து கொண்டு இருந்தபோது மகள் அணிந்திருந்த இரண்டரை சவரன் நகைகளைக் கழற்றி மந்திரவாதி வைத்திருந்த சொம்பில் போடும்படி தெரிவித்துள்ளார்.

தோஷம் கழிப்பதாகக் கூறி பெண்களிடம் தங்க நகைகள் திருட்டு
தோஷம் கழிப்பதாகக் கூறி பெண்களிடம் தங்க நகைகள் திருட்டு
இதையடுத்து அந்தப்பெண்ணும் தான் அணிந்திருந்த நகையைக் கழற்றி சொம்பினுள் போட்டுள்ளனர். பின்னர் சிறிது நேரத்தில் மந்திரவாதி சாம்பிராணி புகைப் போட்டுள்ளார். அப்போது புகைமூட்டம் அதிகமாக இருந்த நேரத்தில், சொம்பிலிருந்த நகையை எடுத்துக்கொண்டு போலி மந்திரவாதி தப்பிச் சென்றுள்ளார்.
போலி மந்திரவாதிக்கு போலீசார் வலைவீச்சு
போலி மந்திரவாதிக்கு போலீசார் வலைவீச்சு

அதன் பின்னர் தாய், மகள் இருவரும் ஏமாற்றப்பட்டதை அறிந்து இதுகுறித்து அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்தப் புகாரின் பேரில் அன்னதானப்பட்டி காவல் துறையினர், இப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து நகையைக் கொள்ளையடித்துச் சென்ற மந்திரவாதி குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வீட்டுக்குள் நுழைந்து தோஷம் கழிப்பதாகக் கூறி, போலி மந்திரவாதி நகைத்திருட்டில் ஈடுபட்ட சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: இன்ஸ்ட்ராகிராமில் பழகி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.