ETV Bharat / state

கரோனா வாரியர்ஸ்க்கு உணவு வழங்கிய சிற்பக் கலைஞர்!

சேலம்: கரோனா வைரஸ் தடுப்புப் பணியில், அயராது உழைத்து வரும் காவல் துறையினர், தூய்மைப் பணியாளர் உள்ளிட்டோருக்கு சிற்பக் கலைஞர் ஒருவர் தினமும் மதிய உணவு வழங்கி வருகிறார்.

author img

By

Published : Apr 9, 2020, 10:50 PM IST

Updated : Apr 9, 2020, 10:57 PM IST

workers
workers

கரோனோ வைரஸ் நோய்த் தொற்று சமூகப் பரவலாக மாறிவிடக் கூடாது என்பதில் மத்திய, மாநில அரசுகள் முனைப்புடன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ள சூழலில் காவலர்கள், சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்கள், மின்வாரியப் பணியாளர்கள் என அரசு ஊழியர்கள் அனைவரும் தொடர்ந்து இரவுபகலாக தங்களது பணியைச் செய்து வருகின்றனர்.

உழியர்களுக்கு உணவளிக்கும் காவலர்கள்
உழியர்களுக்கு உணவளிக்கும் காவலர்கள்

இந்த நெருக்கடியான நிலையில், பணியாற்றும் அலுவலர்களுக்கு முறையாக உணவு கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனையறிந்த தன்னார்வலர்கள் ஆங்காங்கே தங்களது இல்லங்களில் உணவு சமைத்து பொட்டலமாக எடுத்து வந்து பணியாளர்களுக்கு வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில் சேலம் கன்னங்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் சிற்பக்கலைஞர் ராஜா ஸ்தபதி. இவர், கடந்த 16 நாள்களாகத் தொடர்ந்து மதிய உணவு தயாரித்து கன்னங்குறிச்சி பகுதியில் பணியாற்றும் காவலர்கள், பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள், மின்வாரிய ஊழியர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு உணவுகளை வழங்கி வருகிறார்.

இதுகுறித்து சிற்பக்கலைஞர் ராஜா கூறுகையில், "கரோனோ நோய்த் தொற்றை முழுமையாக நாட்டை விட்டு அகற்ற வேண்டும் என்பதற்காக மத்திய, மாநில அரசுகள் செயல்படுகின்றன. அவர்களுக்கு எங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். பொதுமக்களைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வரும் காவலர்கள் உள்ளிட்டோருக்கு மதிய உணவு வழங்கி வருகிறோம்.

கடந்த இரு வாரமாக இதைத் தொடர்ந்து செய்து வருகிறோம், மேலும் செய்வோம். இந்த நேரத்தில் பொதுமக்கள் ஊரடங்கு உத்தரவை முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும்" என்றார்.

துப்புரவு பணியாளர்களுக்கு உணவு வழங்கும் சிற்பக்கலைஞர் ராஜா

இதையும் படிங்க: ’காய்கறி கடைக்கான அனுமதி சீட்டு அலுவலர்களிடம் கிடைக்கும்’

கரோனோ வைரஸ் நோய்த் தொற்று சமூகப் பரவலாக மாறிவிடக் கூடாது என்பதில் மத்திய, மாநில அரசுகள் முனைப்புடன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ள சூழலில் காவலர்கள், சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்கள், மின்வாரியப் பணியாளர்கள் என அரசு ஊழியர்கள் அனைவரும் தொடர்ந்து இரவுபகலாக தங்களது பணியைச் செய்து வருகின்றனர்.

உழியர்களுக்கு உணவளிக்கும் காவலர்கள்
உழியர்களுக்கு உணவளிக்கும் காவலர்கள்

இந்த நெருக்கடியான நிலையில், பணியாற்றும் அலுவலர்களுக்கு முறையாக உணவு கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனையறிந்த தன்னார்வலர்கள் ஆங்காங்கே தங்களது இல்லங்களில் உணவு சமைத்து பொட்டலமாக எடுத்து வந்து பணியாளர்களுக்கு வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில் சேலம் கன்னங்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் சிற்பக்கலைஞர் ராஜா ஸ்தபதி. இவர், கடந்த 16 நாள்களாகத் தொடர்ந்து மதிய உணவு தயாரித்து கன்னங்குறிச்சி பகுதியில் பணியாற்றும் காவலர்கள், பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள், மின்வாரிய ஊழியர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு உணவுகளை வழங்கி வருகிறார்.

இதுகுறித்து சிற்பக்கலைஞர் ராஜா கூறுகையில், "கரோனோ நோய்த் தொற்றை முழுமையாக நாட்டை விட்டு அகற்ற வேண்டும் என்பதற்காக மத்திய, மாநில அரசுகள் செயல்படுகின்றன. அவர்களுக்கு எங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். பொதுமக்களைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வரும் காவலர்கள் உள்ளிட்டோருக்கு மதிய உணவு வழங்கி வருகிறோம்.

கடந்த இரு வாரமாக இதைத் தொடர்ந்து செய்து வருகிறோம், மேலும் செய்வோம். இந்த நேரத்தில் பொதுமக்கள் ஊரடங்கு உத்தரவை முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும்" என்றார்.

துப்புரவு பணியாளர்களுக்கு உணவு வழங்கும் சிற்பக்கலைஞர் ராஜா

இதையும் படிங்க: ’காய்கறி கடைக்கான அனுமதி சீட்டு அலுவலர்களிடம் கிடைக்கும்’

Last Updated : Apr 9, 2020, 10:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.