ETV Bharat / state

SALEM - ரூ.34 ஆயிரம் மதிப்புள்ள கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்!

author img

By

Published : Jul 28, 2023, 10:05 PM IST

Updated : Jul 29, 2023, 11:57 AM IST

சேலத்தில் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வரும் இறைச்சி கடைகளில் வாடிக்கையாளர்களுக்காக விற்பனை செய்ய வைக்கப்பட்டிருந்த ரூ.34,000 மதிப்புள்ள கெட்டுப்போன ஆட்டிறைச்சியை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

உணவு பாதுகாப்பு துறையினரின் அதிரடி சோதனை
உணவு பாதுகாப்பு துறையினரின் அதிரடி சோதனை

சேலம்: உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் கதிரவன் தலைமையிலான குழு இறைச்சி கடைகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இது தொடர்பாக உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் கதிரவன் கூறுகையில், "சேலம் மாவட்ட ஆட்சியர் அவர்களின் அறிவுறுத்தலின் பெயரில் எனது தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சுருளி, ஆரோக்கியபிரபு, ரவி, சிவலிங்கம், புஷ்பராஜ், குமரகுருபரன், ரமேஷ், முத்துசாமி, கண்ணன் ஆகியோர் அடங்கிய குழு சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள இறைச்சிக் கடைகளில் ஆய்வு மேற்கொண்டோம்.

அஸ்தம்பட்டி, கன்னங்குறிச்சி, குரங்கு சாவடி, ரயில்வே ஜங்ஷன், வஉசி மார்க்கெட் , சின்ன கடைவீதி போன்ற பகுதிகளில் உள்ள 54 கடைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. ஆய்வில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நெகிழி பைகள் 5.8 கிலோ, சுகாதாரமற்ற முறையில் சேமிக்கப்பட்ட பழைய மீன் இறைச்சி 50 கிலோ, பழைய கெட்டுப்போன ஆட்டிறைச்சி 17 கிலோ ஆகியவற்றைப் பறிமுதல் செய்து அங்கேயே கொட்டி அழிக்கப்பட்டது.

மேலும் இறைச்சிக் கடைகளில் விற்கப்படும் விவரம் குறிப்பிடாத மசாலா பாக்கெட்டுகள் 18 கிலோ ஆகியவையின் மாதிரி சேகரிக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட உணவுப் பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் 34,000 ரூபாய் ஆகும். மேலும் பிளாஸ்டிக் கவர் பயன்படுத்திய எட்டு உணவு வணிக நிறுவனங்களுக்குத் தலா 2,000 ரூபாய் வீதம் 16,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 2 மாதம் காத்திருக்க முடியாதா?; நெற்பயிர்கள் அழிப்பதை பார்த்து கண்ணீர் வந்துவிட்டது: என்.எல்.சி நிர்வாகத்தை கண்டித்த நீதிபதி!

மேலும் சுகாதாரமற்ற முறையில் இறைச்சி பயன்படுத்திய 3 உணவு வணிக நிறுவனங்களிடம் விளக்கம் கேட்டு அறிவிப்பு நோட்டீஸும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஆட்டு இறைச்சி, கோழி இறைச்சி போன்றவற்றை மாட்டுவதற்கு துருப்பிடிக்காத ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கம்பிகளே பயன்படுத்த வேண்டும் என்றும்;

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிகளை பயன்படுத்தக்கூடாது என்றும், இறைச்சிகளை வெளியில் தூசு படியும்படி தொங்கவிடப்படக்கூடாது என்றும், உணவுப் பாதுகாப்பு உரிமம் பெறுதல் குறித்தும், துருப்பிடிக்காத கத்திகளைப் பயன்படுத்த வேண்டும் என்றும், கடைகளில் உற்பத்தியாகும் கழிவுகளை சுகாதாரமான முறையில் கையாள வேண்டும் என்றும் கடைகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

மேலும் இது போன்ற நடவடிக்கைகள் மேலும் தொடரும் என்று உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் கதிரவன் தெரிவித்தார். இறைச்சிக் கடைகளில் கெட்டுப்போன ஆடு மற்றும் மீன் இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டது சேலம் இறைச்சி பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: கரை ஒதுங்கிய குட்டி நீலத்திமிங்கலம்: தொட்டுப் பார்த்து பிரமித்த மீனவ மக்கள்!

சேலம்: உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் கதிரவன் தலைமையிலான குழு இறைச்சி கடைகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இது தொடர்பாக உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் கதிரவன் கூறுகையில், "சேலம் மாவட்ட ஆட்சியர் அவர்களின் அறிவுறுத்தலின் பெயரில் எனது தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சுருளி, ஆரோக்கியபிரபு, ரவி, சிவலிங்கம், புஷ்பராஜ், குமரகுருபரன், ரமேஷ், முத்துசாமி, கண்ணன் ஆகியோர் அடங்கிய குழு சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள இறைச்சிக் கடைகளில் ஆய்வு மேற்கொண்டோம்.

அஸ்தம்பட்டி, கன்னங்குறிச்சி, குரங்கு சாவடி, ரயில்வே ஜங்ஷன், வஉசி மார்க்கெட் , சின்ன கடைவீதி போன்ற பகுதிகளில் உள்ள 54 கடைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. ஆய்வில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நெகிழி பைகள் 5.8 கிலோ, சுகாதாரமற்ற முறையில் சேமிக்கப்பட்ட பழைய மீன் இறைச்சி 50 கிலோ, பழைய கெட்டுப்போன ஆட்டிறைச்சி 17 கிலோ ஆகியவற்றைப் பறிமுதல் செய்து அங்கேயே கொட்டி அழிக்கப்பட்டது.

மேலும் இறைச்சிக் கடைகளில் விற்கப்படும் விவரம் குறிப்பிடாத மசாலா பாக்கெட்டுகள் 18 கிலோ ஆகியவையின் மாதிரி சேகரிக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட உணவுப் பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் 34,000 ரூபாய் ஆகும். மேலும் பிளாஸ்டிக் கவர் பயன்படுத்திய எட்டு உணவு வணிக நிறுவனங்களுக்குத் தலா 2,000 ரூபாய் வீதம் 16,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 2 மாதம் காத்திருக்க முடியாதா?; நெற்பயிர்கள் அழிப்பதை பார்த்து கண்ணீர் வந்துவிட்டது: என்.எல்.சி நிர்வாகத்தை கண்டித்த நீதிபதி!

மேலும் சுகாதாரமற்ற முறையில் இறைச்சி பயன்படுத்திய 3 உணவு வணிக நிறுவனங்களிடம் விளக்கம் கேட்டு அறிவிப்பு நோட்டீஸும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஆட்டு இறைச்சி, கோழி இறைச்சி போன்றவற்றை மாட்டுவதற்கு துருப்பிடிக்காத ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கம்பிகளே பயன்படுத்த வேண்டும் என்றும்;

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிகளை பயன்படுத்தக்கூடாது என்றும், இறைச்சிகளை வெளியில் தூசு படியும்படி தொங்கவிடப்படக்கூடாது என்றும், உணவுப் பாதுகாப்பு உரிமம் பெறுதல் குறித்தும், துருப்பிடிக்காத கத்திகளைப் பயன்படுத்த வேண்டும் என்றும், கடைகளில் உற்பத்தியாகும் கழிவுகளை சுகாதாரமான முறையில் கையாள வேண்டும் என்றும் கடைகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

மேலும் இது போன்ற நடவடிக்கைகள் மேலும் தொடரும் என்று உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் கதிரவன் தெரிவித்தார். இறைச்சிக் கடைகளில் கெட்டுப்போன ஆடு மற்றும் மீன் இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டது சேலம் இறைச்சி பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: கரை ஒதுங்கிய குட்டி நீலத்திமிங்கலம்: தொட்டுப் பார்த்து பிரமித்த மீனவ மக்கள்!

Last Updated : Jul 29, 2023, 11:57 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.