ETV Bharat / state

பஞ்சு குடோனில் தீ விபத்து: பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசம்!

author img

By

Published : Nov 12, 2020, 4:53 PM IST

சேலம்: லீ பஜார் பகுதியிலுள்ள பழைய பஞ்சு குடோனில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான துணிகள், இயந்திரங்கள் எரிந்து நாசமாகின.

பஞ்சு குடோனில் தீ விபத்து
பஞ்சு குடோனில் தீ விபத்து

சேலம் மாவட்டம் லீ பஜார் பகுதியில் பிரபு ராகவன் என்பவருக்குச் சொந்தமான, பழைய காட்டன் துணிகளை அரைத்து, பஞ்சு தயாரிக்கும் ஆலை இயங்கி வருகிறது. இதில் 20க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று (நவ.12) வழக்கம்போல ஊழியர்கள் பணிகளை மேற்கொண்ட போது, திடீரென ஆலையிலுள்ள குடோனில் தீ பற்றியது. தீயை அணைக்க ஊழியர்கள் முற்பட்டபோது மளமளவென தீ குடோன் முழுவதும் பரவத் தொடங்கியது. இதனால், அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் அனைவரும் குடோனை விட்டு வெளியேறினர். பின்னர், இது குறித்து பள்ளப்பட்டி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த திடீர் தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான துணிகள், இயந்திரங்கள் எரிந்து நாசமாகின. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.

இதையும் படிங்க: பெங்களூரு ரசாயன கிடங்கில் தீ விபத்து!

சேலம் மாவட்டம் லீ பஜார் பகுதியில் பிரபு ராகவன் என்பவருக்குச் சொந்தமான, பழைய காட்டன் துணிகளை அரைத்து, பஞ்சு தயாரிக்கும் ஆலை இயங்கி வருகிறது. இதில் 20க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று (நவ.12) வழக்கம்போல ஊழியர்கள் பணிகளை மேற்கொண்ட போது, திடீரென ஆலையிலுள்ள குடோனில் தீ பற்றியது. தீயை அணைக்க ஊழியர்கள் முற்பட்டபோது மளமளவென தீ குடோன் முழுவதும் பரவத் தொடங்கியது. இதனால், அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் அனைவரும் குடோனை விட்டு வெளியேறினர். பின்னர், இது குறித்து பள்ளப்பட்டி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த திடீர் தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான துணிகள், இயந்திரங்கள் எரிந்து நாசமாகின. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.

இதையும் படிங்க: பெங்களூரு ரசாயன கிடங்கில் தீ விபத்து!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.