ETV Bharat / state

அன்புமணி கண் அசைத்தால் போதும் திமுகவினர் எங்கும் நடமாட முடியாது - பாமக நிர்வாகி மிரட்டல்

சேலம்: பாமகவின் இட ஒதுக்கீடு போராட்டத்தை கொச்சைப்படுத்தி பேசிய திமுக மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் மன்னிப்பு கேட்க வேண்டும் அக்கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் அருள் வலியுறுத்தியுள்ளார்.

author img

By

Published : Dec 22, 2020, 9:10 PM IST

pmk party
pmk party

சேலத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் அருள் செய்தியாளர்களின் சந்திப்பில் கூறியதாவது, "பாமக இட ஒதுக்கீடு போராட்டத்தை கொச்சைப்படுத்தி பேசியுள்ள திமுக மத்திய சென்னை எம்பி தயாநிதி மாறனை வன்மையாக கண்டிக்கிறோம். அவர் மன்னிப்பு கேட்கும் வரை தமிழ்நாடு முழுவதும் எங்கு சென்றாலும் அவருக்கு எதிராக பாமக சார்பில் கருப்புக் கொடி போராட்டம் நடத்தப்படும்.

ஊழலில் திளைத்த திமுக எம்பி தயாநிதி மாறன், ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸையும் பேச எந்த தகுதியும் இல்லை. முறைகேடாக தனியார் தொலைக்காட்சிக்கு தொலைத்தொடர்பு அலைக்கற்றை வழங்கி 4 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்தவர் தயாநிதிமாறன். அவர் பாமக இட ஒதுக்கீடு விவகாரத்தை பற்றி பேச எந்த ஒரு தகுதியும் இல்லை.

திமுகவினர் எங்கும் நடமாட முடியாது

அன்புமணி ராமதாஸ் கட்டளைக்காக காத்திருக்கிறோம். அவர் கண் அசைத்தால் போதும் பாமக கட்சி இளைஞர்கள் தயாநிதிமாறன், உதயநிதி ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோரை தமிழ்நாட்டில் எந்த பகுதியிலும் நடமாட முடியாத அளவுக்கு செய்துவிடுவார்கள் என மிரட்டல் விடுத்தார்.

இதையும் படிங்க: 'பாஜக அரசியல் லாபத்துக்காக, குறுகிய அரசியல் செய்கிறது'- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

சேலத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் அருள் செய்தியாளர்களின் சந்திப்பில் கூறியதாவது, "பாமக இட ஒதுக்கீடு போராட்டத்தை கொச்சைப்படுத்தி பேசியுள்ள திமுக மத்திய சென்னை எம்பி தயாநிதி மாறனை வன்மையாக கண்டிக்கிறோம். அவர் மன்னிப்பு கேட்கும் வரை தமிழ்நாடு முழுவதும் எங்கு சென்றாலும் அவருக்கு எதிராக பாமக சார்பில் கருப்புக் கொடி போராட்டம் நடத்தப்படும்.

ஊழலில் திளைத்த திமுக எம்பி தயாநிதி மாறன், ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸையும் பேச எந்த தகுதியும் இல்லை. முறைகேடாக தனியார் தொலைக்காட்சிக்கு தொலைத்தொடர்பு அலைக்கற்றை வழங்கி 4 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்தவர் தயாநிதிமாறன். அவர் பாமக இட ஒதுக்கீடு விவகாரத்தை பற்றி பேச எந்த ஒரு தகுதியும் இல்லை.

திமுகவினர் எங்கும் நடமாட முடியாது

அன்புமணி ராமதாஸ் கட்டளைக்காக காத்திருக்கிறோம். அவர் கண் அசைத்தால் போதும் பாமக கட்சி இளைஞர்கள் தயாநிதிமாறன், உதயநிதி ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோரை தமிழ்நாட்டில் எந்த பகுதியிலும் நடமாட முடியாத அளவுக்கு செய்துவிடுவார்கள் என மிரட்டல் விடுத்தார்.

இதையும் படிங்க: 'பாஜக அரசியல் லாபத்துக்காக, குறுகிய அரசியல் செய்கிறது'- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.