ETV Bharat / state

சேலத்தில் 140 பேருக்கு கரோனா தொற்று உறுதி

author img

By

Published : Oct 22, 2020, 11:26 PM IST

சேலம்: மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 140 பேருக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில், 200 பேர் நோய் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

COVID19- Salem
COVID19- Salem

தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மாநிலத்தில் நாள்தோறும் ஐந்தாயிரம் பேர் இந்தத் தொற்றினால் பாதிக்கப்பட்டுவந்த நிலையில், தற்போது பாதிப்பு எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளது. அதேபோல் சேலம் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று பாதிப்பு கடந்த சில நாள்களாக வெகுவாகக் குறைந்து வருவதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

கரோனா நோய் தொற்று அதிகம் காணப்படும் பகுதிகளைக் கண்டறியப்பட்டு, அப்பகுதிவாசிகள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதுபோன்ற மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கைகளால், நாள்தோறும் 300 முதல் 400 வரை இருந்த கரோனா எண்ணிக்கை தற்போது வெகுவாக குறைந்துள்ளது.

இதுதொடர்பாக, சேலம் மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர் அளித்த தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 140 பேருக்கு மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 25 ஆயிரத்து 834ஆக அதிகரித்துள்ளது. 5 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 401ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவால் சிகிச்சை பெற்று வந்தவர்களில், 200 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் கோவையில் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்து 360ஆக அதிகரித்துள்ளது. மேலும், 1,942 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மாநிலத்தில் நாள்தோறும் ஐந்தாயிரம் பேர் இந்தத் தொற்றினால் பாதிக்கப்பட்டுவந்த நிலையில், தற்போது பாதிப்பு எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளது. அதேபோல் சேலம் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று பாதிப்பு கடந்த சில நாள்களாக வெகுவாகக் குறைந்து வருவதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

கரோனா நோய் தொற்று அதிகம் காணப்படும் பகுதிகளைக் கண்டறியப்பட்டு, அப்பகுதிவாசிகள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதுபோன்ற மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கைகளால், நாள்தோறும் 300 முதல் 400 வரை இருந்த கரோனா எண்ணிக்கை தற்போது வெகுவாக குறைந்துள்ளது.

இதுதொடர்பாக, சேலம் மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர் அளித்த தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 140 பேருக்கு மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 25 ஆயிரத்து 834ஆக அதிகரித்துள்ளது. 5 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 401ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவால் சிகிச்சை பெற்று வந்தவர்களில், 200 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் கோவையில் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்து 360ஆக அதிகரித்துள்ளது. மேலும், 1,942 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.