ETV Bharat / state

சேலம் சீர்மிகு நகரம் திட்டப்பணிகளை ஆய்வுசெய்த மாநகராட்சி ஆணையாளர்!

author img

By

Published : Nov 4, 2020, 10:12 PM IST

சேலம்: சீர்மிகு நகரம் திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்டுள்ள பல்வேறு வசதிகளுடன் கூடிய நவீன பல்நோக்கு அரங்குகளை மாநகராட்சி ஆணையாளர் ரெ. சதீஷ் ஆய்வுசெய்தார்.

சேலம் சீர் மிகு நகர திட்டப்பணிகளை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்!
சேலம் சீர் மிகு நகர திட்டப்பணிகளை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்!

சேலத்தில், சீர்மிகு நகரம் திட்டத்தின்கீழ் 10 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தொங்கும் பூங்கா வளாகம், ஐந்து கோடியே 85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கோட்டை ஆகிய இரண்டு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள பல்வேறு வசதிகளுடன் கூடிய நவீன பல்நோக்கு அரங்குகளை மாநகராட்சி ஆணையாளர் ரெ. சதீஷ் இன்று ஆய்வுசெய்தார்.

இது தொடர்பாக ஆணையாளர் கூறுகையில், "சேலம் மாநகராட்சி நான்கு மண்டலங்களுக்குள்பட்ட பகுதிகளில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. மேலும், சீர்மிகு நகரம் திட்டத்தின்கீழ் மாநகரப் பகுதிகளில் பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ள விரிவான திட்ட அறிக்கைகள் தயார் செய்து, அரசின் அனுமதி பெற்று, இத்திட்டத்தின்கீழ் 965 கோடியே 87 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 81 பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

அதனடிப்படையில், அஸ்தம்பட்டி மண்டலத்திற்குள்பட்ட கோட்டம் எண்.14 தொங்கும் பூங்கா வளாகத்தில் 10 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பல்நோக்கு அரங்கில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இப்பல்நோக்கு அரங்கில் 1000 நபர்கள் அமரக்கூடிய வகையில் முற்றிலும் குளிரூட்டப்பட்ட விழா நிகழ்வு அரங்கம் 440 நபர்கள் ஒரே நேரத்தில் உணவருந்தும் வகையில் குளிர்சாதன வசதிகளுடன் கூடிய உணவருந்தும் அரங்கம் உள்ளிட்ட வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், இப்பல்நோக்கு அரங்கு வளாகத்தில் சீர்மிகு நகரம் திட்டத்தின்கீழ் 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 100 எண்ணிக்கையிலான நான்கு சக்கர வாகன நிறுத்தும் வகையில், முற்றிலும் தானியங்கி இயந்திரமயமாக்கப்பட்ட நவீன பல்லடுக்கு வாகன நிறுத்தம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன" எனத் தெரிவித்தார்.

இதுபோன்ற பல்வேறு வசதிகளுடன் கூடிய அஸ்தம்பட்டி மண்டலம் கோட்டம் எண்.31இல் கோட்டைப் பகுதியில் சீர்மிகு நகரம் திட்டத்தின்கீழ் ஐந்து கோடியே 85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பல்நோக்கு அரங்கினையும் ஆணையாளர் ஆய்வுசெய்தார்.

சேலத்தில், சீர்மிகு நகரம் திட்டத்தின்கீழ் 10 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தொங்கும் பூங்கா வளாகம், ஐந்து கோடியே 85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கோட்டை ஆகிய இரண்டு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள பல்வேறு வசதிகளுடன் கூடிய நவீன பல்நோக்கு அரங்குகளை மாநகராட்சி ஆணையாளர் ரெ. சதீஷ் இன்று ஆய்வுசெய்தார்.

இது தொடர்பாக ஆணையாளர் கூறுகையில், "சேலம் மாநகராட்சி நான்கு மண்டலங்களுக்குள்பட்ட பகுதிகளில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. மேலும், சீர்மிகு நகரம் திட்டத்தின்கீழ் மாநகரப் பகுதிகளில் பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ள விரிவான திட்ட அறிக்கைகள் தயார் செய்து, அரசின் அனுமதி பெற்று, இத்திட்டத்தின்கீழ் 965 கோடியே 87 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 81 பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

அதனடிப்படையில், அஸ்தம்பட்டி மண்டலத்திற்குள்பட்ட கோட்டம் எண்.14 தொங்கும் பூங்கா வளாகத்தில் 10 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பல்நோக்கு அரங்கில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இப்பல்நோக்கு அரங்கில் 1000 நபர்கள் அமரக்கூடிய வகையில் முற்றிலும் குளிரூட்டப்பட்ட விழா நிகழ்வு அரங்கம் 440 நபர்கள் ஒரே நேரத்தில் உணவருந்தும் வகையில் குளிர்சாதன வசதிகளுடன் கூடிய உணவருந்தும் அரங்கம் உள்ளிட்ட வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், இப்பல்நோக்கு அரங்கு வளாகத்தில் சீர்மிகு நகரம் திட்டத்தின்கீழ் 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 100 எண்ணிக்கையிலான நான்கு சக்கர வாகன நிறுத்தும் வகையில், முற்றிலும் தானியங்கி இயந்திரமயமாக்கப்பட்ட நவீன பல்லடுக்கு வாகன நிறுத்தம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன" எனத் தெரிவித்தார்.

இதுபோன்ற பல்வேறு வசதிகளுடன் கூடிய அஸ்தம்பட்டி மண்டலம் கோட்டம் எண்.31இல் கோட்டைப் பகுதியில் சீர்மிகு நகரம் திட்டத்தின்கீழ் ஐந்து கோடியே 85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பல்நோக்கு அரங்கினையும் ஆணையாளர் ஆய்வுசெய்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.