ETV Bharat / state

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக கம்யூனிஸ்ட்டுகள் ஆர்ப்பாட்டம் - Opposition to Citizenship Amendment Act

சேலம்: குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
author img

By

Published : Dec 19, 2019, 4:58 PM IST

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா முழுவதும் பல்வேறு கட்சிகள், மாணவ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 100க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ஆர்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இதையும் படிங்க: ' மோடி ஆட்சியில் 600 இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டது' - அமித் ஷா

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா முழுவதும் பல்வேறு கட்சிகள், மாணவ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 100க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ஆர்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இதையும் படிங்க: ' மோடி ஆட்சியில் 600 இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டது' - அமித் ஷா

Intro:மத்திய அரசு கொண்டுவந்துள்ள உரிமை சட்டத் திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி சேலத்தில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட சிபிஐ மற்றும் சிபிஎம் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.


Body:மத்திய அரசு குடியுரிமை சட்டத்தை திருத்தி புதிய குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கொண்டு வந்ததற்கு பல்வேறு எதிர்க்கட்சிகள் மற்றும் மாணவ அமைப்பினர், சமூக அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசின் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி தமிழகத்திலும் பல்வேறு கட்ட தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்ற நிலையில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி சிபிஐ மற்றும் சிபிஎம் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பிய தாலும், அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்தனர்.

பேட்டி: ராமமூர்த்தி - மாவட்ட செயலாளர்,சிபிஐ


Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.