ETV Bharat / state

சேலத்தில் கனமழை - இடிந்து விழுந்த வீடுகள்

சேலம் அடுத்த ஏற்காடு மலை அடிவாரத்தில் நேற்று பெய்த கனமழையால் 10-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதமடைந்தன.

author img

By

Published : Nov 5, 2021, 12:52 PM IST

heavy rain  heavy rain fall  rain  heavy rain fall in salem  heavy rain in salem  building Dilapidated because of heavy rain fall in salem  salem news  salem latest news  சேலம் செய்திகள்  கனமழை  சேலத்தில் கனமழை  சேலத்தில் கனமழையால் வீடுகள் இடிந்து விழுந்தன  இடிந்து விழுந்த வீடுகள்  மழையால் இடிந்து விழுந்த வீடுகள்  மண் சரிவு
இடிந்து விழுந்த வீடுகள்

சேலம்: வட தமிழ்நாட்டை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நேற்று (நவ.4) இரவு, சேலம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் டி.பெருமாபாளையம் பகுதியில் உள்ள காரைக்காடு ஏரி நிரம்பி உடைப்பு ஏற்பட்டது.

அப்போது அங்கிருந்து வெளியேறிய வெள்ள நீர் முழுவதும் குடியிருப்புக்குள் புகுந்தது. இதில் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் மழைநீர் வெள்ளத்தில் மிதந்தன. மேலும் 10-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்தது. அப்போது வீடுகளுக்குள் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

வீடுகளை இழந்து தவிக்கும் மக்கள்

இதில் வீடுகளில் வைக்கப்பட்டிருந்த உணவு, உடை உள்ளிட்ட அனைத்து பொருட்களும் நீரில் அடித்துச் செல்லப்பட்டன. உடைமைகள் நாசமானது. மக்கள் தங்கள் வீடுகளில் வளர்த்து வந்த கால்நடைகள் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அவற்றை அருகில் உள்ள கிராமங்களில் நீர் வழி செல்லும் பகுதிகளில் தேடி வருகின்றனர்.

இது குறித்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகையில், “இங்கு உள்ள ஏரியின் உடைப்பை அலுவலர்கள் சரி செய்தாலே, இது போன்ற பெரும் சேதம் தவிர்க்கப்படும். ஒவ்வொரு முறையும் மழை பெய்யும் போது இதுபோன்ற பாதிப்பு அதிகரித்து வருகிறது.

வீடுகளை இழந்து உணவின்றி, நாங்கள் சாலையில் தங்கியுள்ள நிலையில், அலுவலர்கள் இதுவரை வரவில்லை. இந்த ஏரியை சரிசெய்ய ஊராட்சி சார்பில் நடவடிக்கை எடுத்த போதிலும், அரசு அலுவலர்கள் முட்டுக்கட்டையாக இருந்து எந்த ஒரு பராமரிப்பு பணியும் மேற்கொள்ள விடாமல் இடையூறு செய்கின்றனர்" என தெரிவித்தனர்.

சேலத்தில் கனமழை

மண் சரிவு

இதனிடையே குப்பனூர் வழியாக ஏற்காடு செல்லும் மலைப்பாதையின் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் அவ்வழியே போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. மண் சரிவு ஏற்பட்ட பகுதிகளை சேலம் மாவட்ட ஆட்சியர் செ. கார்மேகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, மண் சரிவை சீரமைக்கும் பணியை துரிதப்படுத்த உத்தரவிட்டுள்ளார்.

குப்பனூர் வழியாக செல்லும் வாகனங்கள் சேலம் வழியாக ஏற்காடு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் குப்பனூர் அடிவார பகுதியில் உள்ள விளை நிலங்களிலும் அதிக அளவில் நீர் புகுந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: 50 ஆண்டுகளுக்கு மேல் தீபாவளி கொண்டாட்டம் இல்லாத கிராமங்கள்

சேலம்: வட தமிழ்நாட்டை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நேற்று (நவ.4) இரவு, சேலம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் டி.பெருமாபாளையம் பகுதியில் உள்ள காரைக்காடு ஏரி நிரம்பி உடைப்பு ஏற்பட்டது.

அப்போது அங்கிருந்து வெளியேறிய வெள்ள நீர் முழுவதும் குடியிருப்புக்குள் புகுந்தது. இதில் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் மழைநீர் வெள்ளத்தில் மிதந்தன. மேலும் 10-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்தது. அப்போது வீடுகளுக்குள் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

வீடுகளை இழந்து தவிக்கும் மக்கள்

இதில் வீடுகளில் வைக்கப்பட்டிருந்த உணவு, உடை உள்ளிட்ட அனைத்து பொருட்களும் நீரில் அடித்துச் செல்லப்பட்டன. உடைமைகள் நாசமானது. மக்கள் தங்கள் வீடுகளில் வளர்த்து வந்த கால்நடைகள் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அவற்றை அருகில் உள்ள கிராமங்களில் நீர் வழி செல்லும் பகுதிகளில் தேடி வருகின்றனர்.

இது குறித்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகையில், “இங்கு உள்ள ஏரியின் உடைப்பை அலுவலர்கள் சரி செய்தாலே, இது போன்ற பெரும் சேதம் தவிர்க்கப்படும். ஒவ்வொரு முறையும் மழை பெய்யும் போது இதுபோன்ற பாதிப்பு அதிகரித்து வருகிறது.

வீடுகளை இழந்து உணவின்றி, நாங்கள் சாலையில் தங்கியுள்ள நிலையில், அலுவலர்கள் இதுவரை வரவில்லை. இந்த ஏரியை சரிசெய்ய ஊராட்சி சார்பில் நடவடிக்கை எடுத்த போதிலும், அரசு அலுவலர்கள் முட்டுக்கட்டையாக இருந்து எந்த ஒரு பராமரிப்பு பணியும் மேற்கொள்ள விடாமல் இடையூறு செய்கின்றனர்" என தெரிவித்தனர்.

சேலத்தில் கனமழை

மண் சரிவு

இதனிடையே குப்பனூர் வழியாக ஏற்காடு செல்லும் மலைப்பாதையின் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் அவ்வழியே போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. மண் சரிவு ஏற்பட்ட பகுதிகளை சேலம் மாவட்ட ஆட்சியர் செ. கார்மேகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, மண் சரிவை சீரமைக்கும் பணியை துரிதப்படுத்த உத்தரவிட்டுள்ளார்.

குப்பனூர் வழியாக செல்லும் வாகனங்கள் சேலம் வழியாக ஏற்காடு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் குப்பனூர் அடிவார பகுதியில் உள்ள விளை நிலங்களிலும் அதிக அளவில் நீர் புகுந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: 50 ஆண்டுகளுக்கு மேல் தீபாவளி கொண்டாட்டம் இல்லாத கிராமங்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.