ETV Bharat / state

திமுக மீதான அதிருப்திதான் அதிமுக வெற்றிக்கு காரணம்!

author img

By

Published : Oct 24, 2019, 9:32 PM IST

சேலம்: நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளின் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றிபெற்றதற்கு, திமுக மீதான பொதுமக்களின் அதிருப்தியே காரணம் என பாஜக செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

இல.கணேசன் செய்தியாளர் சந்திப்பு

சேலம் மாவட்டத்தில் பாஜக சார்பில் நடைபெற்ற காந்தியடிகளின் 150ஆவது பிறந்தநாள் பாதயாத்திரையில் பாஜக செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இடைத்தேர்தலில் இரண்டு தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நாடாளுமன்றத் தேர்தலில் இருந்த அரசியல் சூழல் வேறு. அரசியல் சார்பில்லா ஒரு சில பேர் தவறுதலாக பரப்புரை மேற்கொண்டதால் அந்த தேர்தலில் பாஜக, அதிமுக கூட்டணிக்கு தோல்வி ஏற்பட்டது.

இல.கணேசன் செய்தியாளர் சந்திப்பு

இந்தியா முழுவதும் பாஜகவிற்கு மக்கள் வாக்களித்த நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் மாற்றி வாக்களித்துவிட்டோம் என்ற மனநிலை மக்கள் மனதில் இருந்த காரணத்தினால்தான் அதிமுக இந்த இடைத்தேர்தலில் வெற்றிபெற்றுள்ளது. காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டது, மோடி மாமல்லபுரம் வந்தது, திமுக மீதுள்ள அதிருப்தி ஆகிய காரணங்களால்தான் மக்கள் அதிமுகவை அமோக வெற்றி பெற செய்துள்ளனர். மேலும் சாவர்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: கொடுத்த பணத்தைக் கேட்டது குற்றமா? மாணவனை தாக்கிய திமுக வட்டச் செயலாளர்!

சேலம் மாவட்டத்தில் பாஜக சார்பில் நடைபெற்ற காந்தியடிகளின் 150ஆவது பிறந்தநாள் பாதயாத்திரையில் பாஜக செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இடைத்தேர்தலில் இரண்டு தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நாடாளுமன்றத் தேர்தலில் இருந்த அரசியல் சூழல் வேறு. அரசியல் சார்பில்லா ஒரு சில பேர் தவறுதலாக பரப்புரை மேற்கொண்டதால் அந்த தேர்தலில் பாஜக, அதிமுக கூட்டணிக்கு தோல்வி ஏற்பட்டது.

இல.கணேசன் செய்தியாளர் சந்திப்பு

இந்தியா முழுவதும் பாஜகவிற்கு மக்கள் வாக்களித்த நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் மாற்றி வாக்களித்துவிட்டோம் என்ற மனநிலை மக்கள் மனதில் இருந்த காரணத்தினால்தான் அதிமுக இந்த இடைத்தேர்தலில் வெற்றிபெற்றுள்ளது. காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டது, மோடி மாமல்லபுரம் வந்தது, திமுக மீதுள்ள அதிருப்தி ஆகிய காரணங்களால்தான் மக்கள் அதிமுகவை அமோக வெற்றி பெற செய்துள்ளனர். மேலும் சாவர்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: கொடுத்த பணத்தைக் கேட்டது குற்றமா? மாணவனை தாக்கிய திமுக வட்டச் செயலாளர்!

Intro:தமிழகத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாகவும்,திமுகவின் மீதுள்ள அதிர்ப்தியின் காரணமாகவே அதிமுக அமோக வெற்றி பெற்றுள்ளதாகவும், பாஜக செயற்குழு உறுப்பினர் இல. கணேசன் தெரிவித்துள்ளார்.Body:

சேலத்தில் பாஜக சார்பில் நடைபெற்ற காந்தியடிகளின் 150 வது பிறந்த நாள் பாதயாத்திரையில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் அதிமுக இடைத்தேர்தலில் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றதற்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாக தெரிவித்த அவர் நாடாளுமன்ற தேர்தலில் இருந்த அரசியல் சூழல் வேறு அரசியல் சார்பில்லா ஒரு சில பேர் தவறுதலாக பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டதால் தோல்வி ஏற்பட்டது என கூறினார். மேலும் இந்தியா முழுவதும் பாஜகவிற்கு மக்கள் வாக்களித்த நிலையில் தமிழகத்தில் மட்டும் மாற்றி வாக்களித்துவிட்டோம் என்ற மனநிலை மக்கள் மனதில் இருந்த காரணத்தில்தான் அதிமுகவிற்கு மக்கள் வாக்களித்து இடைத்தேர்தலில் வெற்றி பெற செய்துள்ளதாகவும், 370 பிரிவு சட்டம் நீக்கப்பட்டதன் காரணமாகவும்,மோடி மாமல்ல புரம் வந்த பிறகு மக்கள் மனநிலை மாறியுள்ளதன் காரணமாகவும், திமுகவின் மீதுள்ள அதிர்ப்தியின் காரணமாகவே தான் மக்கள் அதிமுகவை அமோக வெற்றி பெற செய்துள்ளதாக தெரிவித்தார். மேலும் வெற்றியின் மூலம் அதிமுகவிற்கு கூடுதல் பலம் கிடைத்துள்ளதாகவும்,
அப்பழுக்கற்ற சாவர்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

பேட்டி - இல. கணேசன் (பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் )

visual send mojo Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.