ETV Bharat / state

CCTV: வழி விடச் சொன்ன இளைஞர்கள் மீது சரமாரி தாக்குதல்

சேலத்தில் இருசக்கர வாகனத்திற்கு வழி விட சொன்ன இளைஞர்கள் மீது நான்கு பேர் சரமாரியாக தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

author img

By

Published : Jan 20, 2023, 5:44 PM IST

Etv Bharat இளைஞரை தாக்கிய கும்பல்
Etv Bharat இளைஞரை தாக்கிய கும்பல்
இளைஞரை தாக்கிய கும்பல்

சேலம் புட்டா நாயக்கர் தெருவில் வசித்து வருபவர் ஆனந்த். இவர், நேற்றிரவு (ஜன.19) தனது வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது புட்டா நாயக்கர் தெருவில் நான்கு பேர் நின்று பேசிக் கொண்டிருந்தனர். இதனைக் கண்ட ஆனந்த், பாதையை விட்டு ஓரமாக நின்று பேசுங்கள் எனக் கூறியுள்ளார். இதனால், இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த நான்கு பேர் ஆனந்தை சரமாரியாக தாக்கினர். இதையறிந்த ஆனந்தின் சகோதரர் கார்த்திக் மற்றும் முரளி ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று, தாக்குதல் நடத்திய நபர்களிடம் கேள்வி கேட்டுள்ளனர். அப்போதும் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனையடுத்து நான்கு இளைஞர்களின் நண்பர்கள் பத்துக்கும் மேற்பட்டோரை அழைத்து வந்து, கார்த்திக் மற்றும் முரளியை பயங்கர ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதனையடுத்து கார்த்தி மற்றும் முரளி ஆகியோர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இது குறித்து அம்மாபேட்டை காவல் துறையினர் கொலை வெறி தாக்குதல் நடத்திய 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: CCTV:தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த திருடர்கள் கைது

இளைஞரை தாக்கிய கும்பல்

சேலம் புட்டா நாயக்கர் தெருவில் வசித்து வருபவர் ஆனந்த். இவர், நேற்றிரவு (ஜன.19) தனது வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது புட்டா நாயக்கர் தெருவில் நான்கு பேர் நின்று பேசிக் கொண்டிருந்தனர். இதனைக் கண்ட ஆனந்த், பாதையை விட்டு ஓரமாக நின்று பேசுங்கள் எனக் கூறியுள்ளார். இதனால், இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த நான்கு பேர் ஆனந்தை சரமாரியாக தாக்கினர். இதையறிந்த ஆனந்தின் சகோதரர் கார்த்திக் மற்றும் முரளி ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று, தாக்குதல் நடத்திய நபர்களிடம் கேள்வி கேட்டுள்ளனர். அப்போதும் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனையடுத்து நான்கு இளைஞர்களின் நண்பர்கள் பத்துக்கும் மேற்பட்டோரை அழைத்து வந்து, கார்த்திக் மற்றும் முரளியை பயங்கர ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதனையடுத்து கார்த்தி மற்றும் முரளி ஆகியோர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இது குறித்து அம்மாபேட்டை காவல் துறையினர் கொலை வெறி தாக்குதல் நடத்திய 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: CCTV:தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த திருடர்கள் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.