சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள ராமநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த விவசாயி பொன்னுசாமி தனது நிலத்தின் ஒரு பகுதியை கால்நடை மருத்துவமனைக்கு பாதை அமைக்க எழுதிக் கொடுத்துள்ளார்.
ஆனால் அந்த நிலத்தை ஆத்தூர் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் சின்னதம்பி வீட்டுமனை அமைத்து நிலத்தை விற்பனை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த விவசாயி நிலத்தை வழங்க மறுத்து நிலத்திற்கு பாதுகாப்பு வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது தகவல் அறிந்து அப்பகுதிக்கு வந்த எம்எல்ஏ சின்னதம்பி தகாத வார்த்தைகளால் விவசாயியை திட்டியதுடன் அவரது குடும்பத்தை மிரட்டியுள்ளார்.
இதுதொடர்பான வீடியோ வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க:”கொலை மிரட்டல் விடுத்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” - மாணிக்கம் தாகூர்