ETV Bharat / state

டிஎன்பிஎஸ்சி முறைகேட்டைக் கண்டித்து இளைஞர் பெரு மன்றத்தினர் ஆர்ப்பாட்டம்!

author img

By

Published : Feb 9, 2020, 3:28 PM IST

சேலம்: அரசு தேர்வாணையத்தில் நடைபெற்று வரும் முறைகேட்டைக் கண்டித்து, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அனைத்திந்திய இளைஞர் பெரு மன்றத்தைச் சேர்ந்த முப்பதுக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம் நடத்திய அனைத்திந்திய இளைஞர் பெரு மன்றத்தினர்
ஆர்ப்பாட்டம் நடத்திய அனைத்திந்திய இளைஞர் பெரு மன்றத்தினர்


கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற அனைத்திந்திய இளைஞர் பெரு மன்றத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் எடுத்த முடிவின்படி, டிஎன்பிஎஸ்சி தேர்வில் நடைபெற்று வரும் முறைகேடுகளைக் கண்டித்து, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த அனைத்திந்திய இளைஞர் பெரு மன்றத்தினர் காவல் துறையினரிடம் அனுமதி கோரியிருந்தனர்.

செய்தியாளர்களைச் சந்தித்த அமைப்பின் மாநிலச் செயலாளர் பாரதி

இந்நிலையில் நேற்று இரவு போராட்டத்திற்கு அனுமதி மறுப்பதாக காவல் துறையினர் தெரிவித்ததையடுத்து, காவல் துறையினரின் தடையையும் மீறி, அந்த அமைப்பின் மாநிலச் செயலாளர் பாரதி தலைமையில் திரண்ட முப்பதுக்கும் மேற்பட்டவர்கள், டிஎன்பிஎஸ்சியில் நடைபெற்றுள்ள முறைகேடுகளைக் கண்டித்தும், முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டம் நடத்திய அனைத்திந்திய இளைஞர் பெரு மன்றத்தினர்

தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட முப்பதுக்கும் மேற்பட்ட இளைஞர் பெரு மன்றத்தினரைக் காவல் துறையினர் கைது செய்ய முற்பட்ட போது, இரு தரப்பினரிடையே லேசான தள்ளு முள்ளு ஏற்பட்டது.

இதனையடுத்து அனைவரும் கைதாகி, தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதையும் படிங்க: டிஎன்பிஎஸ்சி விவகாரம்... ஸ்டாலின் மீது வழக்கு தொடரப்படும்: அமைச்சர்


கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற அனைத்திந்திய இளைஞர் பெரு மன்றத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் எடுத்த முடிவின்படி, டிஎன்பிஎஸ்சி தேர்வில் நடைபெற்று வரும் முறைகேடுகளைக் கண்டித்து, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த அனைத்திந்திய இளைஞர் பெரு மன்றத்தினர் காவல் துறையினரிடம் அனுமதி கோரியிருந்தனர்.

செய்தியாளர்களைச் சந்தித்த அமைப்பின் மாநிலச் செயலாளர் பாரதி

இந்நிலையில் நேற்று இரவு போராட்டத்திற்கு அனுமதி மறுப்பதாக காவல் துறையினர் தெரிவித்ததையடுத்து, காவல் துறையினரின் தடையையும் மீறி, அந்த அமைப்பின் மாநிலச் செயலாளர் பாரதி தலைமையில் திரண்ட முப்பதுக்கும் மேற்பட்டவர்கள், டிஎன்பிஎஸ்சியில் நடைபெற்றுள்ள முறைகேடுகளைக் கண்டித்தும், முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டம் நடத்திய அனைத்திந்திய இளைஞர் பெரு மன்றத்தினர்

தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட முப்பதுக்கும் மேற்பட்ட இளைஞர் பெரு மன்றத்தினரைக் காவல் துறையினர் கைது செய்ய முற்பட்ட போது, இரு தரப்பினரிடையே லேசான தள்ளு முள்ளு ஏற்பட்டது.

இதனையடுத்து அனைவரும் கைதாகி, தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதையும் படிங்க: டிஎன்பிஎஸ்சி விவகாரம்... ஸ்டாலின் மீது வழக்கு தொடரப்படும்: அமைச்சர்

Intro:அரசு தேர்வாணையத்தில் நடைபெற்று வரும் முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்திட வலியுறுத்தி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்திந்திய இளைஞர் பெரு மன்றத்தை சேர்ந்த முப்பதுக்கும் மேற்பட்டோர் கைது....

முறைகேடு தொடர்பாக ஆர்ப்பாட்டம் நடத்திட காவல்துறை அனுமதி மறுத்ததால் மறியலில் ஈடுபட்ட இளைஞர் பெரு மன்றத்தினர் முறைகேட்டிற்கு பொறுப்பேற்று முதல்வர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தல்..Body:கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற அனைத்திந்திய இளைஞர் பெரு மன்றத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் எடுத்த முடிவின்படி, டிஎன்பிசி தேர்வில் நடைபெற்று வரும் முறைகேடுகளை கண்டித்தும், இந்த முறைகேடு தொடர்பாக உயர்நீதி மன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்திட வேண்டும் அல்லது சிபிஐ விசாரனைக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த அனைத்திந்திய இளைஞர் பெரு மன்றத்தினர் காவல்துறையினரிடம் அனுமதி கோரி இருந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு போராட்டத்திற்கு அனுமதி மறுப்பதாக காவல்துறையினர் தெரிவித்ததையடுத்து, காவல்துறையினரின் தடையும் மீறி, அந்த அமைப்பின் மாநில செயலாளர் பாரதி தலைமையில் திரண்ட முப்பதுக்கும் மேற்பட்டவர்கள், டிஎன்பிசியில் நடைபெற்றுள்ள முறைகேடுகளை கண்டித்தும், முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட முப்பதுக்கும் மேற்பட்ட இளைஞர் பெரு மன்றத்தினரை காவல்துறையினர் கைது செய்ய முற்பட்ட போது, இரு தரப்பினரிடையே லேசான தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து அனைவரும் கைது செய்து தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.

பேட்டி – பாரதி – மாநில செயலாளர் – அனைத்திந்திய இளைஞர் பெரு மன்றம்.

visual send mojo Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.