இது குறித்து மாவட்ட ஆட்சியர் ராமன் கூறுகையில்," இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகத்தின் பங்களிப்பில் இந்தியா முழுவதுமாக மாவட்டத்திற்கு ஒன்று என வேளாண்மை அறிவியல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இவை மாநில வேளாண்மைப் பல்கலைக்கழகங்கள், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், மத்திய அரசு ஆராய்ச்சி நிறுவனங்கள், அரசு துறைகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் மூலமாக மாவட்டத்திற்கு ஒன்று என்ற வகையில் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.
க்ருஷி விக்யான் கேந்திரா (கே.வி.கே) என்று அழைக்கப்படும் இத்தகைய வேளாண்மை அறிவியல் நிலையங்கள் விவசாயிகளுக்கு பல்வேறு விவசாயம், கால்நடை - சார்பு தொழில்நுட்பங்களை விரிவாக்கம் செய்து வருகின்றன.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் சார்பாக 14, தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தின் சார்பாக 4, தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத்தின் சார்பாக 1, நிகர் நிலை பல்கலைக்கழகங்கள் சார்பாக 2 மற்றும் தொண்டு நிறுவனங்களின் சார்பாக 11, வேளாண்மை அறிவியல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கே.வி.கே என்கின்ற வேளாண்மை அறிவியல் நிலையங்களின் சுருக்கப் பெயரில் க்ருஷி விகாஸ் கேந்திரா, கே.வி.கே, கே.எஸ்.பி.கே முதலான பல்வேறு பெயர்களில் போலி வேளாண்மை அறிவியல் நிலையங்கள் தமிழ்நாட்டில் வேளாண் பெருமக்களை குழப்பமடையச் செய்து ஏமாற்றும் நோக்கில் செயல்பட்டு வருகின்றன.
இத்தகைய போலி நிறுவனங்கள் விவசாயிகளை அணுகி மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் மற்றும் மானியங்களை பெற்றுத்தருவதாக கூறி ஆயிரக்கணக்கில் பண மோசடி செய்து வருவதாகத் தெரியவந்துள்ளது.
இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக்கழகத்தின் கீழ் இயங்கிவரும் எந்த ஒரு தகுதிவாய்ந்த வேளாண்மை அறிவியல் நிலையமும் (கே.வி.கே) இத்தகைய செயல்களில் ஈடுபடாது. எனவே, வேளாண் பெருமக்கள் விழிப்புணர்வோடு இருக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
வேளாண்மை அறிவியல் நிலையங்களுக்கு கிளைகள் என்று எவையும் கிடையாது. இவ்வாறு கிளை நிறுவனங்கள் என்று கூறிக்கொண்டு கே.வி.கே என்று கூறிக்கொள்ளும் யாராவது தங்களை அணுகினால் உடனடியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலோ அல்லது அருகிலுள்ள சந்தியூர் வேளாண்மை அறிவியல் நிலையத்திலோ வேளாண் பெருமக்கள் புகார் தெரிவிக்க வேண்டும்.
சேலம் மாவட்டத்தில் மல்லூர் அருகில் உள்ள சந்தியூர் கிராமத்தில் இருக்கும் வேளாண்மை அறிவியல் நிலையம் தவிர மாவட்டத்தில் வேறு எந்த முகவரியிலும் வேளாண்மை அறிவியல் நிலையங்களோ, கிளை நிறுவனங்களோ இல்லை" என அவர் தெரிவித்துள்ளார்.
வேளாண்மை அறிவியல் நிலையங்களுக்கு கிளைகள் கிடையாது - மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல் - கே வி கே
சேலம்: கே.வி.கே என்பவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என ஆட்சியர் ராமன் அறிவுறுத்தி உள்ளார்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் ராமன் கூறுகையில்," இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகத்தின் பங்களிப்பில் இந்தியா முழுவதுமாக மாவட்டத்திற்கு ஒன்று என வேளாண்மை அறிவியல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இவை மாநில வேளாண்மைப் பல்கலைக்கழகங்கள், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், மத்திய அரசு ஆராய்ச்சி நிறுவனங்கள், அரசு துறைகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் மூலமாக மாவட்டத்திற்கு ஒன்று என்ற வகையில் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.
க்ருஷி விக்யான் கேந்திரா (கே.வி.கே) என்று அழைக்கப்படும் இத்தகைய வேளாண்மை அறிவியல் நிலையங்கள் விவசாயிகளுக்கு பல்வேறு விவசாயம், கால்நடை - சார்பு தொழில்நுட்பங்களை விரிவாக்கம் செய்து வருகின்றன.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் சார்பாக 14, தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தின் சார்பாக 4, தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத்தின் சார்பாக 1, நிகர் நிலை பல்கலைக்கழகங்கள் சார்பாக 2 மற்றும் தொண்டு நிறுவனங்களின் சார்பாக 11, வேளாண்மை அறிவியல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கே.வி.கே என்கின்ற வேளாண்மை அறிவியல் நிலையங்களின் சுருக்கப் பெயரில் க்ருஷி விகாஸ் கேந்திரா, கே.வி.கே, கே.எஸ்.பி.கே முதலான பல்வேறு பெயர்களில் போலி வேளாண்மை அறிவியல் நிலையங்கள் தமிழ்நாட்டில் வேளாண் பெருமக்களை குழப்பமடையச் செய்து ஏமாற்றும் நோக்கில் செயல்பட்டு வருகின்றன.
இத்தகைய போலி நிறுவனங்கள் விவசாயிகளை அணுகி மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் மற்றும் மானியங்களை பெற்றுத்தருவதாக கூறி ஆயிரக்கணக்கில் பண மோசடி செய்து வருவதாகத் தெரியவந்துள்ளது.
இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக்கழகத்தின் கீழ் இயங்கிவரும் எந்த ஒரு தகுதிவாய்ந்த வேளாண்மை அறிவியல் நிலையமும் (கே.வி.கே) இத்தகைய செயல்களில் ஈடுபடாது. எனவே, வேளாண் பெருமக்கள் விழிப்புணர்வோடு இருக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
வேளாண்மை அறிவியல் நிலையங்களுக்கு கிளைகள் என்று எவையும் கிடையாது. இவ்வாறு கிளை நிறுவனங்கள் என்று கூறிக்கொண்டு கே.வி.கே என்று கூறிக்கொள்ளும் யாராவது தங்களை அணுகினால் உடனடியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலோ அல்லது அருகிலுள்ள சந்தியூர் வேளாண்மை அறிவியல் நிலையத்திலோ வேளாண் பெருமக்கள் புகார் தெரிவிக்க வேண்டும்.
சேலம் மாவட்டத்தில் மல்லூர் அருகில் உள்ள சந்தியூர் கிராமத்தில் இருக்கும் வேளாண்மை அறிவியல் நிலையம் தவிர மாவட்டத்தில் வேறு எந்த முகவரியிலும் வேளாண்மை அறிவியல் நிலையங்களோ, கிளை நிறுவனங்களோ இல்லை" என அவர் தெரிவித்துள்ளார்.