ETV Bharat / state

விநாயகர் சிலையைக் கரைக்க வந்த லாரி விபத்து: ஒருவர் உயிரிழப்பு; 40க்கும் மேற்பட்டோர் காயம்

author img

By

Published : Sep 4, 2019, 8:54 PM IST

சேலம்: எடப்பாடி அடுத்த கல்வடங்கம் காவிரி ஆற்றில் விநாயகர் சிலைகளை, கரைக்க வந்தவர்களின் லாரி எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கியதில் 40 பேர் படுகாயம் அடைந்தனர்.

accident-near-edappadi-one-person-died

சேலம் மாவட்டம் எடப்பாடியில் விநாயகர் சதுர்த்தி வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. விநாயகர் சதுர்த்தியன்று வைக்கப்பட்ட சிலைகளை கல்வடங்கம் காவிரி ஆற்றில் கரைப்பது அப்பகுதி மக்களின் வழக்கம். அந்த வகையில் இன்று சேலம் எடப்பாடி,கொங்கணாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 500க்கும் மேற்பட்டோர் வந்து காவிரி ஆற்றில் நீராடி விநாயகர் சிலைகளை கரைத்துச் சென்றனர்.

அப்படி விநாயகர் சிலைகளை கரைக்க, சேலம் அன்னதானம்பட்டி பகுதியில் இருந்து வந்தவர்களின் லாரி எதிர்பாராதவிதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் லாரியின் அடியில் சிக்கிய ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்தார். மேலும் காயமடைந்த 40க்கும் மேற்பட்டோர் எடப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது

விநாயகர் சிலை கரைக்கும் நிகழ்விற்கு வந்தவர்கள் விபத்துக்குள்ளானது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் எடப்பாடியில் விநாயகர் சதுர்த்தி வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. விநாயகர் சதுர்த்தியன்று வைக்கப்பட்ட சிலைகளை கல்வடங்கம் காவிரி ஆற்றில் கரைப்பது அப்பகுதி மக்களின் வழக்கம். அந்த வகையில் இன்று சேலம் எடப்பாடி,கொங்கணாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 500க்கும் மேற்பட்டோர் வந்து காவிரி ஆற்றில் நீராடி விநாயகர் சிலைகளை கரைத்துச் சென்றனர்.

அப்படி விநாயகர் சிலைகளை கரைக்க, சேலம் அன்னதானம்பட்டி பகுதியில் இருந்து வந்தவர்களின் லாரி எதிர்பாராதவிதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் லாரியின் அடியில் சிக்கிய ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்தார். மேலும் காயமடைந்த 40க்கும் மேற்பட்டோர் எடப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது

விநாயகர் சிலை கரைக்கும் நிகழ்விற்கு வந்தவர்கள் விபத்துக்குள்ளானது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Intro:சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த கல்வடங்கம் காவிரி ஆற்றில் வினாயகர் சிலைகளை, கரைக்க வந்தவர்களின் லாரி எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கியதில் 40 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த விபத்துச் சம்பவம் சேலம் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.Body:

விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இதனையடுத்து, இன்று விநாயகர் சிலைகளை கல்வடங்கம் காவிரி ஆற்றில் ச கரைக்க வந்த சேலம் அன்னதானப்பட்டி பகுதியை சேர்ந்தவர்கள் லாரிகளில் வந்தனர்.

அப்போது எதிர்பாராவிதமாக லாரி கவிழ்ந்ததில், லாரி அடியில் சிக்கி ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார் .

மேலும் 40-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் எடப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்ட பின்னர், விநாயகர் சிலைகளை கல்வடங்கம் காவிரி ஆற்றில் நீராடி, சிலையைக் கரைத்து மகிழ்வது எடப்பாடி வட்டார பொது மக்களின் வழக்கம்.

அதேபோல இன்று , சேலம் எடப்பாடி கொங்கணாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, சுமார் 500 மேற்பட்ட பொதுமக்கள் கல்வடங்கம் காவிரி ஆற்றில் புனித நீராடி , விநாயகர் சிலைகளை கரைத்து சென்றனர்.
Conclusion:இந்த நிலையில் இன்று மாலை கல்வடங்கம் காவிரி ஆற்றில்
விநாயகர் சிலையை கரைக்க சென்ற இடத்தில் எதிர்பாராத விபத்து நடந்தது கல்வடங்கம், கோனேரிப்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.