ETV Bharat / state

சேலத்தில் கஞ்சா விற்றவர் கைது! - kanja sale person arrest

சேலம்: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கஞ்சா விற்பனை செய்து வந்தவரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

kanja sale person arrest
author img

By

Published : Apr 27, 2019, 10:44 PM IST

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நகர காவல்துறையினர் ரோந்து பணி மேற்கொண்டிருந்த போது ஆட்சியர் அலுவலகத்தின் இரண்டாவது நுழைவாயில் முன்பு வயதான ஒருவர் கைப்பையில் கஞ்சா பொட்டலங்களை வைத்துக் கொண்டு, விற்பனை செய்து வந்துள்ளார்.

இதனை அறிந்த காவல்துறை அவரை கையும் களவுமாக பிடித்து, அவர் வைத்திருந்த பைகளை கைப்பற்றினர். இதுகுறித்து அவரிடம் விசாரணை செய்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில், அவர் பெயர் பாட்ஷா(70) என்பதும், மரவனேரி பகுதியை சேர்ந்தவர் என்பதும், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டோருக்கு ஒரு பொட்டலம் 100 ரூபாய் வீதம் கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரியவந்துள்ளது. மேலும் அவர் மேல் ஏற்கனவே கஞ்சா விற்பனை செய்த வழக்கு நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நகர காவல்துறையினர் ரோந்து பணி மேற்கொண்டிருந்த போது ஆட்சியர் அலுவலகத்தின் இரண்டாவது நுழைவாயில் முன்பு வயதான ஒருவர் கைப்பையில் கஞ்சா பொட்டலங்களை வைத்துக் கொண்டு, விற்பனை செய்து வந்துள்ளார்.

இதனை அறிந்த காவல்துறை அவரை கையும் களவுமாக பிடித்து, அவர் வைத்திருந்த பைகளை கைப்பற்றினர். இதுகுறித்து அவரிடம் விசாரணை செய்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில், அவர் பெயர் பாட்ஷா(70) என்பதும், மரவனேரி பகுதியை சேர்ந்தவர் என்பதும், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டோருக்கு ஒரு பொட்டலம் 100 ரூபாய் வீதம் கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரியவந்துள்ளது. மேலும் அவர் மேல் ஏற்கனவே கஞ்சா விற்பனை செய்த வழக்கு நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் அருகே கஞ்சா விற்பனை செய்துவந்தவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் அருகே நகர காவல்துறையினர் ரோந்து பணி மேற்கொண்டிருந்த போது ஆட்சியர் அலுவலகத்தின் இரண்டாவது நுழைவாயில் முன்பு வயதான ஒருவர் கைப்பையில் கஞ்சா பொட்டலங்களை வைத்துக் கொண்டு அவரை நாடி வருபவர்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளார். 

அவரை பிடித்த போலீசார் அவரிடம் இருந்த கைபையை சோதனை செய்தபோது, அதில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்த போலீசார், கஞ்சா விற்பனை செய்த ரொக்க பணத்தையும் அவரிடம் இருந்து பறிமுதல் செய்தனர். 

அவரிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அவர் பெயர் பாட்ஷா(70) என்பதும், மரவனேரி பகுதியை சேர்ந்தவர் என்பதும், கல்லூரு மாணவர்கள் உள்ளிட்டோருக்கு ஒரு பொட்டலம் 100 ரூபாய் வீதம் விற்பனை செய்து வந்ததும், ஏற்கனவே இவர்மீது கஞ்சா விற்பனை செய்த வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்துள்ளது. 

இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.