ETV Bharat / state

8 வழி சாலை திட்டம் தனி நபருக்கான திட்டம்: கே.எஸ்.அழகிரி

சேலம்: எட்டு வழி சாலை திட்டம் தனி ஒரு நபருக்காக அமைக்கப்படும் திட்டம் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.

ks azhagiri
author img

By

Published : Jul 29, 2019, 11:21 PM IST


சேலத்தில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமாக செயல்பட்டுவரும் இரும்பாலையை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு பணிபுரியும் ஊழியர்களும், அரசியல் கட்சியினரும் தொடர்ந்து போராட்டம் நடத்திவருகின்றனர்.

இந்நிலையில், இன்று தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் சேலம் இரும்பாலையை தனியார்மயமாக்கும் கொள்கையைக் கைவிட வலியுறுத்தி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட இரும்பு ஆலை ஊழியர்கள், காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்ட இந்த போராட்டத்திற்கு, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை வகித்தார்.

உண்ணாவிரதப் போராட்டம்

போராட்டத்தில் பேசிய கே.எஸ்.அழகிரி, "சேலம் இரும்பாலை என்பது இந்தியாவின் மிகப்பெரிய ஒரு தொழில் நிறுவனமாக விளங்குகிறது. இந்த ஆலையை மத்திய பாஜக அரசு தனி ஒரு நபருக்கு தாரைவார்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

அதேபோன்று, சேலம்-சென்னை இடையிலான எட்டு வழி சாலை திட்டம் என்பது தனி ஒரு நபருக்காக அமைக்கப்படும் சாலையாகும். மேலும், கஞ்சமலை, திருவண்ணாமலை ஆகியவற்றில் உள்ள கனிம வளங்கங்ளை வெட்டி எடுத்து நேரடியாக சென்னை துறைமுகத்திற்கு கொண்டு செல்வதற்காக அமைக்கப்படும் முயற்சிக்கு இந்த சாலை உதவும்.

விவசாயத்தையும், விளைநிலங்களையும் அழித்து போடப்படும் இதுபோன்ற சாலைகளை எந்த ஒரு காலத்திலும் காங்கிரஸ் கட்சி ஆதரிக்காது" என்றார்.


சேலத்தில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமாக செயல்பட்டுவரும் இரும்பாலையை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு பணிபுரியும் ஊழியர்களும், அரசியல் கட்சியினரும் தொடர்ந்து போராட்டம் நடத்திவருகின்றனர்.

இந்நிலையில், இன்று தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் சேலம் இரும்பாலையை தனியார்மயமாக்கும் கொள்கையைக் கைவிட வலியுறுத்தி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட இரும்பு ஆலை ஊழியர்கள், காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்ட இந்த போராட்டத்திற்கு, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை வகித்தார்.

உண்ணாவிரதப் போராட்டம்

போராட்டத்தில் பேசிய கே.எஸ்.அழகிரி, "சேலம் இரும்பாலை என்பது இந்தியாவின் மிகப்பெரிய ஒரு தொழில் நிறுவனமாக விளங்குகிறது. இந்த ஆலையை மத்திய பாஜக அரசு தனி ஒரு நபருக்கு தாரைவார்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

அதேபோன்று, சேலம்-சென்னை இடையிலான எட்டு வழி சாலை திட்டம் என்பது தனி ஒரு நபருக்காக அமைக்கப்படும் சாலையாகும். மேலும், கஞ்சமலை, திருவண்ணாமலை ஆகியவற்றில் உள்ள கனிம வளங்கங்ளை வெட்டி எடுத்து நேரடியாக சென்னை துறைமுகத்திற்கு கொண்டு செல்வதற்காக அமைக்கப்படும் முயற்சிக்கு இந்த சாலை உதவும்.

விவசாயத்தையும், விளைநிலங்களையும் அழித்து போடப்படும் இதுபோன்ற சாலைகளை எந்த ஒரு காலத்திலும் காங்கிரஸ் கட்சி ஆதரிக்காது" என்றார்.

Intro:சேலம் இரும்பாலை தனியார் மயமாக்குவதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் மாபெரும் உண்ணாவிரதம்.


Body:சேலம் சென்னை இடையிலான 8வழி சாலை திட்டம் தனி ஒரு நபருக்காக அமைக்கப்படும் திட்டம் சேலத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி குற்றச்சாட்டு.

சேலத்தில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமாக செயல்பட்டு வரும் இரும்பாலை ஆலையை தனியார்மயமாக்கும் முடிவில் மத்திய பாஜக அரசு செயல்பட்டு வருகிறது மத்திய அரசின் இந்த முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊழியர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் இன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் சேலம் இரும்பாலை தனியார்மயமாக்கும் கொள்கையை கைவிட வலியுறுத்தி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

இந்தப் போராட்டத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி தலைமை ஏற்று உண்ணாவிரதப் போராட்டத்தை வழிநடத்தினார். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இரும்பு ஆலை ஊழியர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் என கலந்து கொண்டனர். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் சேலம் மாநகர மாவட்ட தலைவர் ஜெயபிரகாஷ் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தேவதாஸ் மற்றும் காங்கிரஸ் செயல் தலைவர் மோகன் குமாரமங்கலம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி கூறுகையில் சேலம் இரும்பாலை என்பது இந்தியாவின் மிகப்பெரிய ஒரு தொழில் நிறுவனமாக விளங்கி வரும் இந்த ஆலையை மத்திய பாஜக அரசு தனி ஒரு நபருக்கு தாரைவார்க்கும் முயற்சி ஈடுபட்டுள்ளது.
மேலும் சேலம் சென்னை இடையிலான 8வழி சாலை திட்டம் என்பது தனி ஒரு நபருக்காக அமைக்கப்படும் சாலை இந்த சாலை அமைப்பதற்கு ஓபிஎஸ், இபிஎஸ் இருவருமே ஆர்வம் காட்டுவது சேலத்தில் உள்ள கனிம வளங்கள் நிறைந்த கஞ்சமலை, திருவண்ணாமலையில் உள்ள மலைகள் அவற்றில் உள்ள தாது பொருட்களை வெட்டி எடுத்து நேரடியாக சென்னை துறைமுகத்திற்கு கொண்டு செல்வதற்காக அமைக்கப்படும் சாலை தான் 8 வழி சாலை ஆகவே இன்று 8 வழி சாலை எதிர்த்து தொடர்ந்து காங்கிரஸ் கட்சி போராடும். பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வருகின்ற திட்டத்தை நாங்கள் ஆதரிப்போம் தனி ஒரு மனிதனாக விவசாயத்தையும் விளைநிலங்களையும் அழித்து போடப்படும் சாலையை எந்த ஒரு காலகட்டத்திலும் காங்கிரஸ் கட்சி ஆதரிக்காது என்றார் மேலும் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி மிகப் பெரிய வெற்றியைப் பெறும் அந்த வெற்றியை இன்று எழுதிவைத்துக்கொள்ளுங்கள் அதிமுக கூட்டணி டெபாசிட் கூட பெறாது என்றார்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.