ETV Bharat / state

அரக்கோணம் அருகே மின்சாரம் தாக்கி தந்தை, மகன் உயிரிழப்பு! - ranipet Father, son killed by electricity

ராணிப்பேட்டை : விவசாய நிலத்தில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் தவறிவிழுந்து தந்தை மகன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

father-son-killed-by-electricity-in-arakkonam
father-son-killed-by-electricity-in-arakkonam
author img

By

Published : Feb 26, 2021, 2:39 PM IST

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த கோணலம் பகுதியில் சந்திரன் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் திருவள்ளூர் மாவட்டம் ராமலிங்கா புரத்தைச் சேர்ந்த பாக்கியராஜ் (35) என்பவர் குடும்பத்துடன் தங்கி கூலிவேலை செய்து வருகிறார். இந்நிலையில் சந்திரன் நிலத்திற்கு அருகே உள்ள செல்வம் என்பவருக்கு சொந்தமான வயலின் அருகே உள்ள ஏரியில் மீன் பிடிப்பதற்காக பாக்கியராஜ் தனது மகன் அருண்குமாருடன் சென்றுள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக கால் தடுக்கி வயலில் விழுந்த பாக்கியராஜ் வயலில் அருகே அமைக்கப்பட்டிர்ந்த மின் வேலியில் பட்டு துடித்துள்ளர். இதனைக்கண்ட மகன் அருண்குமார் தந்தையை மீட்பதற்காக முயற்சி செய்யும்போது மின்சாரம் தாக்கி மகனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த அரக்கோணம் தாலுகா காவல் துறையினர் இரு உடல்களையும் மீட்டு உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் முதற்கட்ட விசாரணையில் செல்வம் என்பவர் தனது வயலில் பயிர்களை விலங்குகளிடம் இருந்து காப்பாற்றுவதற்காக சட்டவிரோதமாக வைத்த மின் வேலியில் சிக்கி தந்தை மகன் உயிரிழந்தது தெரியவந்தது.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த கோணலம் பகுதியில் சந்திரன் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் திருவள்ளூர் மாவட்டம் ராமலிங்கா புரத்தைச் சேர்ந்த பாக்கியராஜ் (35) என்பவர் குடும்பத்துடன் தங்கி கூலிவேலை செய்து வருகிறார். இந்நிலையில் சந்திரன் நிலத்திற்கு அருகே உள்ள செல்வம் என்பவருக்கு சொந்தமான வயலின் அருகே உள்ள ஏரியில் மீன் பிடிப்பதற்காக பாக்கியராஜ் தனது மகன் அருண்குமாருடன் சென்றுள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக கால் தடுக்கி வயலில் விழுந்த பாக்கியராஜ் வயலில் அருகே அமைக்கப்பட்டிர்ந்த மின் வேலியில் பட்டு துடித்துள்ளர். இதனைக்கண்ட மகன் அருண்குமார் தந்தையை மீட்பதற்காக முயற்சி செய்யும்போது மின்சாரம் தாக்கி மகனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த அரக்கோணம் தாலுகா காவல் துறையினர் இரு உடல்களையும் மீட்டு உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் முதற்கட்ட விசாரணையில் செல்வம் என்பவர் தனது வயலில் பயிர்களை விலங்குகளிடம் இருந்து காப்பாற்றுவதற்காக சட்டவிரோதமாக வைத்த மின் வேலியில் சிக்கி தந்தை மகன் உயிரிழந்தது தெரியவந்தது.

இதையும் படிங்க:

கட்சிகள் கவனிக்க: ’தேர்தல் அறிக்கையில் குழந்தைகள் உரிமை’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.