ETV Bharat / state

குடிபோதையில் தம்பியை அரிவாளால் வெட்டிக் கொன்ற அண்ணன் - Younger brother killed by elder one in drunken mode at ramanathapuram

கமுதி அருகே குடிபோதையில் தம்பியை அரிவாளால் வெட்டிக்கொன்ற அண்ணனை, காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

தம்பியை அரிவாளால் வெட்டிக் கொன்ற அண்ணன்
தம்பியை அரிவாளால் வெட்டிக் கொன்ற அண்ணன்
author img

By

Published : Jul 18, 2021, 12:22 AM IST

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பம்மனேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவரின் இரண்டு மகன்கள் காந்தி, ராஜேஷ் ஆகியோர் ராமேஸ்வரத்தில் குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர். தற்போது, கரோனா ஊரடங்கு காரணமாக அவர்கள் சொந்த ஊரான பம்மனேந்தல் கிராமத்தில் கடந்த ஒரு ஆண்டாக வசிக்கின்றனர்.

இந்நிலையில், இன்று(ஜூலை.16) மதியம் 1 மணியளவில் குடிபோதையில் இருவருக்கும் இடையே தகராறு நடந்துள்ளது. அப்போது, ஒரு கட்டத்தில் அண்ணன் காந்தி, தம்பி ராஜேஷை அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடிள்ளார். இதில் படுகாயமடைந்த ராஜேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து கோவிலாங்குளம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கொலையாளி காந்தியை தேடி வருகின்றனர்.

காவல் துறையினர் நடத்திய முதல்கட்ட விசாரணையில், முதுகுளத்தூர் அருகே எட்டிசேரி அரசு டாஸ்மாக் கடையில் 300 மதுபாட்டில்களை கொள்ளையடித்து அதனை அண்ணன், தம்பி இருவரும் பங்கு பிரிப்பதில் தகராறு ஏற்பட்டு கொலை செய்திருக்கலாம் என்று தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: கணவருடன் தகராறு: செல் ஆயில் குடித்து இளம்பெண் தற்கொலை

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பம்மனேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவரின் இரண்டு மகன்கள் காந்தி, ராஜேஷ் ஆகியோர் ராமேஸ்வரத்தில் குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர். தற்போது, கரோனா ஊரடங்கு காரணமாக அவர்கள் சொந்த ஊரான பம்மனேந்தல் கிராமத்தில் கடந்த ஒரு ஆண்டாக வசிக்கின்றனர்.

இந்நிலையில், இன்று(ஜூலை.16) மதியம் 1 மணியளவில் குடிபோதையில் இருவருக்கும் இடையே தகராறு நடந்துள்ளது. அப்போது, ஒரு கட்டத்தில் அண்ணன் காந்தி, தம்பி ராஜேஷை அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடிள்ளார். இதில் படுகாயமடைந்த ராஜேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து கோவிலாங்குளம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கொலையாளி காந்தியை தேடி வருகின்றனர்.

காவல் துறையினர் நடத்திய முதல்கட்ட விசாரணையில், முதுகுளத்தூர் அருகே எட்டிசேரி அரசு டாஸ்மாக் கடையில் 300 மதுபாட்டில்களை கொள்ளையடித்து அதனை அண்ணன், தம்பி இருவரும் பங்கு பிரிப்பதில் தகராறு ஏற்பட்டு கொலை செய்திருக்கலாம் என்று தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: கணவருடன் தகராறு: செல் ஆயில் குடித்து இளம்பெண் தற்கொலை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.