ETV Bharat / state

பாம்பன் புதிய ரயில் பாலம் எப்போது பயன்பாட்டிற்கு வரும்? - இந்திய ரயில்வே வாரிய உறுப்பினர் அப்டேட்!

Pamban New Railway Bridge opening date: ராமேஸ்வரத்தில் கட்டப்பட்டு வரும் பாம்பன் புதிய ரயில் பாலம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என இந்திய ரயில்வே வாரிய உள்கட்டமைப்பு உறுப்பினர் ரூப் நாராயண் சுங்கர் தெரிவித்தார்.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 18, 2023, 7:06 AM IST

Pamban New Railway Bridge opening date
பாம்பன் புதிய ரயில் பாலம் எப்போது திறப்பு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம், ராமேஸ்வரம் தீவுப்பகுதியை இணைக்கும் வகையில் 1914ஆம் ஆண்டு கப்பல்கள் வந்து செல்ல ரயில் பாலம் அமைக்கப்பட்டது. தற்போது 106 ஆண்டுகள் கடந்து, அந்த பாலம் பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதால், அதற்கு ரூ.525 கோடி மதிப்பீட்டில் புதிய ரயில் பாலம் கட்டுமானப் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதே போன்று, ராமேஸ்வரத்தில் ரூ.90 கோடி மதிப்பீட்டில் புதிய ரயில் நிலையம் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், இந்திய ரயில்வே வாரிய உள்கட்டமைப்பு உறுப்பினர் ரூப் நாராயண் சுந்தர் மற்றும் அதிகாரிகள் ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமானப் பணிகள் குறித்து ஆய்வு செய்தனர். இதனைத் தொடர்ந்து, பாம்பனில் அமைக்கப்பட்டு வரும் புதிய ரயில் பாலப் பணிகளையும் ஆய்வு செய்தனர்.

அப்போது இரயில்வே வாரிய உள்கட்டமைப்பு உறுப்பினர் ரூப் நாராயண் சுங்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “பாம்பன் பழைய பாலம் சேதமடைந்த நிலையில், புதிய பாலம் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. தற்போது வரை 90 சதவீதம் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்த ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி அனைத்து பணிகளும் நிறைவடைந்து, பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கரில் ஓய்ந்த தேர்தல்.. வாக்குப்பதிவு நிலவரம் என்ன?

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம், ராமேஸ்வரம் தீவுப்பகுதியை இணைக்கும் வகையில் 1914ஆம் ஆண்டு கப்பல்கள் வந்து செல்ல ரயில் பாலம் அமைக்கப்பட்டது. தற்போது 106 ஆண்டுகள் கடந்து, அந்த பாலம் பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதால், அதற்கு ரூ.525 கோடி மதிப்பீட்டில் புதிய ரயில் பாலம் கட்டுமானப் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதே போன்று, ராமேஸ்வரத்தில் ரூ.90 கோடி மதிப்பீட்டில் புதிய ரயில் நிலையம் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், இந்திய ரயில்வே வாரிய உள்கட்டமைப்பு உறுப்பினர் ரூப் நாராயண் சுந்தர் மற்றும் அதிகாரிகள் ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமானப் பணிகள் குறித்து ஆய்வு செய்தனர். இதனைத் தொடர்ந்து, பாம்பனில் அமைக்கப்பட்டு வரும் புதிய ரயில் பாலப் பணிகளையும் ஆய்வு செய்தனர்.

அப்போது இரயில்வே வாரிய உள்கட்டமைப்பு உறுப்பினர் ரூப் நாராயண் சுங்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “பாம்பன் பழைய பாலம் சேதமடைந்த நிலையில், புதிய பாலம் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. தற்போது வரை 90 சதவீதம் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்த ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி அனைத்து பணிகளும் நிறைவடைந்து, பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கரில் ஓய்ந்த தேர்தல்.. வாக்குப்பதிவு நிலவரம் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.