ETV Bharat / state

'காங்., திமுக கூட்டணிக்கு வாக்களிப்பது பயங்கரவாதிகளின் கையை வலுப்படுத்தும்!'

author img

By

Published : Apr 13, 2019, 11:56 PM IST

Updated : Apr 14, 2019, 7:36 AM IST

ராமநாதபுரம்: காங்., திமுக குடும்ப நலனில் மட்டுமே அக்கறை கொண்ட கட்சிகள் என்று ராமநாதபுரத்தில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் பிரதமர் மோடி விமர்சித்துப் பேசினார்.

மோடி

ராமநாதபுரம் தூத்துக்குடி, சிவகங்கை, திருநெல்வேலி பாஜக-அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பரப்புரைச் செய்ய மோடி தனி வானூர்தி மூலம் ராமநாதபுரம் வருகைதந்தார். அப்போது அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் ஆற்றிய உரையிலிருந்து சில முக்கியத் துளிகள்:

  • புனிதத் தலமான காசிக்கும் ராமேஸ்வரத்திற்குத் தொடர்பு உண்டு.
  • காசி மக்களவைத் தொகுதியின் உறுப்பினரான நான் இங்கு வந்திருக்கின்றேன்.
  • ராமநாதபுரம் எனக்கு ஏ.பி.ஜே.அப்துல் கலாமை நினைவுபடுத்துகிறது.
  • நாடு 2014இல் இருந்ததை விட வறுமை ஒழிப்பு, எரிவாயு இணைப்பு வழங்குவதில் வேகமாக வளர்ச்சி அடைந்து இருக்கிறது.
  • 2014ஆம் ஆண்டு 38 விழுக்காடு மட்டுமே இருந்த சுகாதாரம் தற்போது 98 விழுக்காடாக உயர்ந்துள்ளது.
  • மீண்டும் பாஜக அரசு மே23இல் பதவி ஏற்ற பிறகு நீர்வள மேலாண்மைக்குத் தனி அமைச்சகம் அமைக்கப்படும் அதன் மூல நீர்வளம் மேம்பட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
  • அதேபோல் மீனவர்களுக்குத் தனி அமைச்சகமும், கிஷான் கடன் அட்டை மூலம் விவசாயிகள் போன்று மீனவர்களுக்கு நிதி நேரடியாக வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
  • ராமேஸ்வரம் தனுஷ்கோடி இடையேயான ரயில் பாதை இரட்டை ரயில் பாதையாக மாற்றும் பணி நடைபெற்றுவருகிறது.
  • இஸ்ரோ விஞ்ஞானிகள் உதவியுடன் மீனவர்கள் எல்லைத் தாண்டி மீன்பிடிப்பதை அறிந்துகொள்ளும் கருவி சொந்த மொழியில் வழங்கப்பட உள்ளது.
  • காங்., துறைமுகக் கட்டுமானத்தில் அக்கறை செலுத்தவில்லை ஆனால் இந்த அரசு துறைமுகம் மூலம் நாட்டை வளர்ச்சி அடையச் செய்ய முடியும் என நம்புகிறோம்.
  • காங்கிரஸ் குடும்ப நலனில் மட்டுமே அக்கறை கொண்டு கட்சி. ஆனால் எங்களுக்கு நாட்டின் நலம்தான் முக்கியம்.
  • காங்கிரஸ், திமுக, முஸ்லிம் லீக் கட்சிகளுக்கு வாக்களித்தால் பயங்கரவாதிகளுக்குச் சாதகமான சூழ்நிலை உருவாவதோடு, அரசியலில் குற்றவாளிகள் அதிகம் இடம் பெறுவர். இவ்வாறு அவர் கூறினார்.

ராமநாதபுரம் தூத்துக்குடி, சிவகங்கை, திருநெல்வேலி பாஜக-அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பரப்புரைச் செய்ய மோடி தனி வானூர்தி மூலம் ராமநாதபுரம் வருகைதந்தார். அப்போது அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் ஆற்றிய உரையிலிருந்து சில முக்கியத் துளிகள்:

  • புனிதத் தலமான காசிக்கும் ராமேஸ்வரத்திற்குத் தொடர்பு உண்டு.
  • காசி மக்களவைத் தொகுதியின் உறுப்பினரான நான் இங்கு வந்திருக்கின்றேன்.
  • ராமநாதபுரம் எனக்கு ஏ.பி.ஜே.அப்துல் கலாமை நினைவுபடுத்துகிறது.
  • நாடு 2014இல் இருந்ததை விட வறுமை ஒழிப்பு, எரிவாயு இணைப்பு வழங்குவதில் வேகமாக வளர்ச்சி அடைந்து இருக்கிறது.
  • 2014ஆம் ஆண்டு 38 விழுக்காடு மட்டுமே இருந்த சுகாதாரம் தற்போது 98 விழுக்காடாக உயர்ந்துள்ளது.
  • மீண்டும் பாஜக அரசு மே23இல் பதவி ஏற்ற பிறகு நீர்வள மேலாண்மைக்குத் தனி அமைச்சகம் அமைக்கப்படும் அதன் மூல நீர்வளம் மேம்பட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
  • அதேபோல் மீனவர்களுக்குத் தனி அமைச்சகமும், கிஷான் கடன் அட்டை மூலம் விவசாயிகள் போன்று மீனவர்களுக்கு நிதி நேரடியாக வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
  • ராமேஸ்வரம் தனுஷ்கோடி இடையேயான ரயில் பாதை இரட்டை ரயில் பாதையாக மாற்றும் பணி நடைபெற்றுவருகிறது.
  • இஸ்ரோ விஞ்ஞானிகள் உதவியுடன் மீனவர்கள் எல்லைத் தாண்டி மீன்பிடிப்பதை அறிந்துகொள்ளும் கருவி சொந்த மொழியில் வழங்கப்பட உள்ளது.
  • காங்., துறைமுகக் கட்டுமானத்தில் அக்கறை செலுத்தவில்லை ஆனால் இந்த அரசு துறைமுகம் மூலம் நாட்டை வளர்ச்சி அடையச் செய்ய முடியும் என நம்புகிறோம்.
  • காங்கிரஸ் குடும்ப நலனில் மட்டுமே அக்கறை கொண்டு கட்சி. ஆனால் எங்களுக்கு நாட்டின் நலம்தான் முக்கியம்.
  • காங்கிரஸ், திமுக, முஸ்லிம் லீக் கட்சிகளுக்கு வாக்களித்தால் பயங்கரவாதிகளுக்குச் சாதகமான சூழ்நிலை உருவாவதோடு, அரசியலில் குற்றவாளிகள் அதிகம் இடம் பெறுவர். இவ்வாறு அவர் கூறினார்.
Intro:இராமநாதபுரம்
ஏப்ரல்.13
காங்கிரஸ், திமுக கூட்டணிக்கு வாக்களிப்பது பயங்கரவாதிகளின் கையை வலிமைபடுத்தும் பிரதமர் மோடி.


Body:இராமநாதபுரத்தில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாஜக, அதிமுக இராமநாதபுரம் தூத்துக்குடி, சிவகங்கை, திருநெல்வேலி வேட்பாளர்களும் பிரச்சாரம் செய்ய மோடி தனி ஹெலிகாப்டர் மூலம் இராமநாதபுரம் வருகை தந்தார். கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் ஆற்றிய உரையில் தெரிவித்ததாவது.

புனித தலமான காசிக்கும் இராமேஸ்வரத்திற்க்கு தொடர்பு உண்டு காசி நாடாளுமன்றத்தின் உறுப்பினரான நான் இங்கு வந்திருக்கின்றேன். இராமநாதபுரம் எனக்கு ஏ.பி.ஜெ.அப்துல் கலாமை நினைவு படுத்துகிறது. அவர் நாட்டிற்காக பல கனவுகளை கண்டார். மிஷன் சக்தி சோதனையில் வெற்றி பெற்றதை பார்த்திருந்தால் அவர் மகிழ்ச்சி அடைந்து இருப்பார்.
நாடு 2014ல் இருந்ததை விட வேகமாக வறுமை ஒழிப்பு, எரிவாயு இணைப்பு வழங்குவதில் வளர்ச்சி அடைந்து இருப்பதாக கூறினார்.
மேலும் 2014 ஆம் ஆண்டு சுகாதார 38 சதவீதம் மட்டுமே இருந்தது தற்போது அது 98 சதவீதமாக உயர்ந்துள்ளது.


இதன் மூலம் 50 கோடிக்கு மேலானவர்கள் பயனடைந்து உள்ளதாகவும் கூறினார்.

மீண்டும் மோடி அரசு மே23 பதவி ஏற்ற பிறகு நீர் வள மேலாண்மைக்கு தனி அமைச்சகம் அமைக்கப்படும் அதன் மூல நீர் வளம் மேம்பட நடவடிக்கைகள் எடுக்கப்படும் அதேபோல் மீனவர்களுக்கு தனி அமைச்சகமும், கிஷன் கிரெடிட் கார்டு மூலம் விவசாயிகள் போன்று நிதி நேரடியாக மீனவர்கள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

இராமேஸ்வரம் தனுஷ்கோடி இடையேயான இரயில் பாதை இரட்டை இரயில் பாதையாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது.

இஸ்ரோ விஞ்ஞானிகள் உதவியுடன் மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிதை அறிந்துகொள்ளும் கருவி சொந்த மொழியில் வழங்கப்பட உள்ளது.

காங்கிரஸ் துறைமுக கட்டுமானத்தில் அக்கறை செலுத்தவில்லை ஆனால் எங்க அரசு துறைமுகம் மூலம் நாட்டை வளர்ச்சி அடைய செய்ய முடியும் என நம்புகிறோம் என்றார்.

எங்களின் மூன்று முக்கிய குறிக்கோள் வளர்ச்சி, அனைவருக்கும் வளர்ச்சி அனைவருடனும் சேர்ந்த வளர்ச்சி, காங்கிரஸ் திமுக கூட்டணிக்கு தொலைநோக்கு பார்வை இல்லை என்றும் அவர்களின் ஒரே நோக்கம் மோடியை பதவியை விட்டு அகற்ற வேண்டும் என்பதுதான். அதேபோல் அவர்களை மூத்தலாக் விஷயத்தில் பெண்களுகளுக்கு எதிரான நிலைபாட்டை எடுத்தவகள் என்று குற்றம்சாட்டினார்.

காங்கிரஸ் குடும்ப நலனில் மட்டுமே அக்கறை கொண்டு கட்சி ஆனால் எங்களுக்கு நாட்டின் நலந்தான் முக்கியம் என்றார்.

காங்கிரஸ், திமுக, முஸ்லிம் லிக் கட்சிக்கு வாக்களித்தால் அதிக வரி குறைந்த வளர்ச்சியை நாடு அடைய அதோடு பயங்கரவாதிகளுக்கு சாதகமான சூழ்நிலை உருவாவதோடு அரசியலில் குற்றவாளிகள் அதிகம் இடம் பெறுவர் என்றார்.




Conclusion:
Last Updated : Apr 14, 2019, 7:36 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.