கரோனா நிவாரண நிதியாக அனைத்து அட்டைதாரர்களுக்கும் 4 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. அதில், முதல் தவணையாக 2 ஆயிரம் ரூபாய் வருகின்ற 15ஆம் தேதி முதல் வழங்கப்படவுள்ளன.
இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்திலும் அதற்கான டோக்கன்கள் வழங்கும் பணிகள் நடக்கின்றன. கரோனா பரவல் காரணமாக அலுவலர்களே நேரடியாக வீட்டுக்குச் சென்று டோக்கன்களை வழங்கி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தமாக 3 லட்சத்து 75 ஆயிரத்து 186 குடும்ப அட்டைகள் உள்ளன. அவற்றில் 3️ லட்சத்து 74 ஆயிரத்து 738 குடும்ப அட்டைகள் அரிசி வைத்துள்ளனர். அனைத்து அட்டைதாரர்களும் நிவாரணம் பெறும் வகையில் டோக்கன்கள் கொடுக்கப்படுகின்றன.