ETV Bharat / state

தேவர் ஜெயந்தி விழா:தலைவர்கள் பசும்பொன் பயணம்! - Elaborate security arrangements in place for Thevar Jayanthi

ராமநாதபுரம்: முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்க முதலமைச்சர், துணை முதலமைச்சர்,  மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பலர் நாளை பசும்பொன் கிராமத்துக்குச் செல்கின்றனர்.

Thevar Jayanthi
author img

By

Published : Oct 29, 2019, 9:53 PM IST

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடம் உள்ளது. நாளை தேவரின் 112ஆவது பிறந்த நாள் மட்டும் 57வது குருபூஜை அரசு விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

இதனையொட்டி, பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள தேவரின் நினைவிடத்தில், நாளை நடைபெறவுள்ள விழாவில் காலை 9 மணியளவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மலர் அஞ்சலி செலுத்த உள்ளனர். அதனைத்தொடர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்துகிறார். அதன்பின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், முக்கிய கட்சிகளின் பிரமுகர்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தவுள்ளனர்.

இதையடுத்து, பசும்பொன் கிராமம் முழுவதும் காவல்துறையின் முழு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. அங்கு 8 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். முக்கிய சந்திப்புகளில் கேமராக்கள் மூலம் கண்காணித்தும், ஆங்காங்கே தடுப்புகள் அமைத்தும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: தேவர் ஜெயந்தி விழா: பாதுகாப்புக்காக 8,000 காவலர்கள் குவிப்பு!

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடம் உள்ளது. நாளை தேவரின் 112ஆவது பிறந்த நாள் மட்டும் 57வது குருபூஜை அரசு விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

இதனையொட்டி, பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள தேவரின் நினைவிடத்தில், நாளை நடைபெறவுள்ள விழாவில் காலை 9 மணியளவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மலர் அஞ்சலி செலுத்த உள்ளனர். அதனைத்தொடர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்துகிறார். அதன்பின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், முக்கிய கட்சிகளின் பிரமுகர்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தவுள்ளனர்.

இதையடுத்து, பசும்பொன் கிராமம் முழுவதும் காவல்துறையின் முழு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. அங்கு 8 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். முக்கிய சந்திப்புகளில் கேமராக்கள் மூலம் கண்காணித்தும், ஆங்காங்கே தடுப்புகள் அமைத்தும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: தேவர் ஜெயந்தி விழா: பாதுகாப்புக்காக 8,000 காவலர்கள் குவிப்பு!

Intro:இராமநாதபுரம்
அக்.29

தேவரின் 57வது குருபூஜை விழாவில் முதல்வர், துணை முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் மற்றும் டிடிவி தினகரன் உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.


Body:இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்து உள்ள பசும்பொன்னில் நாளை முத்துராமலிங்கத் தேவரின் 112வது ஜெயந்தி மற்றும் 57வது குருபூஜை அரசு விழாவாக கொண்டாட பட உள்ளது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை ஏடிஜிபி ஜெயந்த் முரளி தலைமையில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
நாளை நடைபெற உள்ள விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் காலை 9 மணிக்கு நேரில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்துகின்றனர். அதைத் தொடர்ந்து திமுகவின் தலைவரும் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.கஸ்டாலின் மரியாதை செலுத்துகிறார். பின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மரியாதை செய்யவுள்ளார். மேலும் முக்கிய கட்சிகளின் பிரமுகர்களும் நேரில் வந்து மரியாதை செய்ய உள்ளனர் இதனால் பசும்பொன் கிராமம் முழுவதும் காவல்துறையின் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர். முக்கிய சந்திப்புகளில் கேமராக்கள் மூலம் கண்காணித்தும் ,ஆங்காங்கே தடுப்புகள் அமைத்து. காவல்துறையினர் பாதுகாப்பை அதிகரித்து உள்ளனர். மாவட்ட நிர்வாகம் சார்பாக அடிப்படை வசதிகள் உறுதி செய்யப்பட்டு வருகிறது.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.