ETV Bharat / state

தமிழ்நாடு மீனவர்களின் 6 விசைப்படகுகளை நாட்டுடமையாக்கிய இலங்கை!

ராமநாதபுரம்: ராமேஸ்வரம் மீனவர்களுக்குச் சொந்தமான ஆறு விசைப்படகுகளை இலங்கை நீதிமன்றம் நாட்டுடமையாக்கியுள்ளது.

author img

By

Published : Aug 10, 2019, 10:14 AM IST

ராமநாதபுரம்

ராமேஸ்வரம், புதுக்கோட்டையிலிருந்து கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற ஜோஸ்வா, முருகேசன், மூர்த்தி, கந்தசாமி, அமுதன் உள்ளிட்ட மீனவர்கள் அனைவரும் படகுடன் இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டனர்.

பின்னர் இவர்கள் மீது மீன்பிடிக்க அத்துமீறி நுழைந்ததாக வழக்குப்பதிவு செய்த இலங்கை கடற்படையினர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தொடர்ந்து, ஐந்து மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் ஓராண்டு சிறை தண்டனை வழங்கியது.

இருப்பினும், சிறை தண்டனையை இரண்டு ஆண்டுகளுக்கு ஒத்திவைத்து மீனவர்கள் அனைவரையும் இந்தியாவிற்கு திருப்பியனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். மேலும் அவர், இந்த மீனவர்கள் மீண்டும் இலங்கை எல்லைக்குள் மீன்பிடித்தால் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் எனவும் எச்சரித்தார்.

படகின் உரிமையாளர்கள் உரிய ஆவணங்களுடன் நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 9ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டுமெனவும் இல்லையென்றால் படகுகள் நாட்டுடமையாக்கப்படும் என்றும் நீதிபதி எச்சரித்து வழக்கை ஒத்திவைத்தார்.

இந்நிலையில், நேற்று தமிழ்நாடு விசைப்படகு உரிமையாளர்கள் இலங்கை நீதிமன்றத்தில் ஆஜராகாததால் ஆறு விசைப்படகுகளையும் நாட்டுடமையாக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, அந்த ஆறு படகுகளும் நாட்டுடமையாக்கும் பணிகளில் அலுலவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

ராமேஸ்வரம், புதுக்கோட்டையிலிருந்து கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற ஜோஸ்வா, முருகேசன், மூர்த்தி, கந்தசாமி, அமுதன் உள்ளிட்ட மீனவர்கள் அனைவரும் படகுடன் இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டனர்.

பின்னர் இவர்கள் மீது மீன்பிடிக்க அத்துமீறி நுழைந்ததாக வழக்குப்பதிவு செய்த இலங்கை கடற்படையினர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தொடர்ந்து, ஐந்து மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் ஓராண்டு சிறை தண்டனை வழங்கியது.

இருப்பினும், சிறை தண்டனையை இரண்டு ஆண்டுகளுக்கு ஒத்திவைத்து மீனவர்கள் அனைவரையும் இந்தியாவிற்கு திருப்பியனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். மேலும் அவர், இந்த மீனவர்கள் மீண்டும் இலங்கை எல்லைக்குள் மீன்பிடித்தால் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் எனவும் எச்சரித்தார்.

படகின் உரிமையாளர்கள் உரிய ஆவணங்களுடன் நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 9ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டுமெனவும் இல்லையென்றால் படகுகள் நாட்டுடமையாக்கப்படும் என்றும் நீதிபதி எச்சரித்து வழக்கை ஒத்திவைத்தார்.

இந்நிலையில், நேற்று தமிழ்நாடு விசைப்படகு உரிமையாளர்கள் இலங்கை நீதிமன்றத்தில் ஆஜராகாததால் ஆறு விசைப்படகுகளையும் நாட்டுடமையாக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, அந்த ஆறு படகுகளும் நாட்டுடமையாக்கும் பணிகளில் அலுலவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Intro:இராமநாதபுரம்
ஆக்.9

தமிழக மீனவர்களின் 6 விசைப்படகுகளை நாட்டுமையாக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவு.Body:
ராமேசுவரத்தில் இருந்து கடந்த மார்ச் 24 அன்று கடலுக்குச் சென்ற ஜோஸ்வா, முருகேசன் ஆகியோருக்குச் சொந்தமான 2 விசைப்படகுகள், மார்ச் 26 அன்று புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்திலிருந்து கடலுக்குச் சென்று நெடுந்தீவு கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மாணிக்கம், மூர்த்தி, கந்தசாமி ஆகிய மூவருக்குச் சொந்தமான விசைப்படகுககள், ஏப்ரல் 8 அன்று தங்கச்சிமடத்தைச் சேர்ந்த அமுதன் என்பவருக்குச் சொந்தமான ஒரு விசைப்படகு என 6 படகுகளை கைப்பற்றி அதிலிருந்த 26 மீனவர்கள் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்



சிறைபிடிக்கப்பட்ட 26 மீனவர்கள் மீதும் இலங்கை கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன்பிடிக்கும் வெளிநாட்டுப் படகுகளுக்கும் அபராதம் மற்றும் தண்டனை விதிக்கும் புதிய சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் நீதிபதி அந்தோனிப்பிள்ளை யூட்சன் முன்னிலையில் வழக்கு நடைபெற்று வந்தது.

தொடர்ந்து ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடித்தல் மற்றும் இலங்கையில் தடை செய்யப்பட்ட இழுவைமடி மீன்பிடி முறையில் ஈடுபட்டது என்ற இரண்டு குற்றச்சாட்டுக்கள் மீனவர்கள் மீது வைக்கப்பட்டு 26 மீனவர்களுக்கும் இரண்டு குற்றங்களுக்கும் தனித்தனியே ஒரு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.



ஒவ்வொருக்கும் விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையையும் 2 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்டு மீனவர்கள் 26 பேரையும் உடனே நாடு கடத்த (இந்தியாவிற்கு திருப்பி அனுப்ப) நீதிபதி உத்தரவிட்டு மீனவர்கள் 26 பேரும் நாடு திரும்பி விட்டனர்.

அவ்வாறு நாடு கடத்தப்பட்ட இந்த மீனவர்கள் மீண்டும் இலங்கை எல்லைக்குள் மீன்பிடித்தால் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவிக்கவேண்டும் எனவும், மேலும் படகின் உரிமையாளர்கள் உரிய ஆவணங்களுடன் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் கூறி நீதிபதி யூட்சன் வழக்கை ஒத்திவைத்தார்

இந்நிலையில் வெள்ளிக்கிழமை தமிழக விசைப்படகு உரிமையாளர்கள் யாரும் ஆஜராகாததால் நீதிபதி யூட்சன் 6 விசைப்படகுகளையும் நாட்டுமையாக்க உத்தரவிட்டார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.