ETV Bharat / state

கிணற்றின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்ததில் பள்ளி மாணவன் உயிரிழப்பு! - உத்தரகோசமங்கை

ராமநாதபுரம்: கிணற்றின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்ததில், பள்ளி மாணவன் உடல் 8 மணி நேர மீட்பு பணிக்கு பின்பு சடலமாக மீட்கப்பட்டது. இச்சம்பவத்தால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மிகுந்த வேதனையில் ஆழ்ந்துள்ளனர்.

கிணற்றின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்ததில் பள்ளி மாணவன் உயிரிழப்பு!
கிணற்றின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்ததில் பள்ளி மாணவன் உயிரிழப்பு!
author img

By

Published : May 7, 2021, 11:09 AM IST

ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை அருகே உள்ள மல்லல் கிராமத்தில் வசித்து வருபவர் நாகராஜன், இவரது மகன் சுகனேஷ்(13) எட்டாம் வகுப்பு படித்து வந்தார். இவர் நேற்று (மே.6) மாலை சக நண்பர்களுடன் வீட்டின் அருகாமையில் உள்ள கண்மாய்க்கரையில் குளித்துவிட்டு அதன் அருகில் இருக்கக்கூடிய கிணற்றுப் பகுதியில் நின்று கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக விட்டு விட்டுப் பெய்து வரும் மழையால் கிணற்றின் பக்கவாட்டில் அமைக்கப்பட்டிருந்த நடைமேடை சுவர்கள் பலவீனமாக இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இது தெரியாமல் சிறுவர்கள் அந்த இடத்தில் நின்று கொண்டிருந்ததால் திடீரென பள்ளம் ஏற்பட்டு அதில் சுகனேஷ் 15 அடி பள்ளத்திற்குள் சிக்கிக் கொண்டுள்ளார்.

பள்ளி மாணவன் உடல் 8 மணி நேர மீட்பு பணிக்கு பின்பு சடலமாக மீட்பு!

இதனை அறிந்த சக நண்பர்கள் அந்த சிறுவனின் குடும்பத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளார்கள். அதன் பின் ராமநாதபுரம் மற்றும் உத்திரகோசமங்கை தீயணைப்புத் துறையினர் மற்றும் அரசு அலுவலர்கள் ஜேசிபி எந்திரத்தின் மூலம் பள்ளம் தோண்டி மீட்கும் பணியில் கடந்த 5 மணி நேரமாக ஈடுபட்டுவந்தனர்.

அதன் பின்பு பொக்லைன் இயந்திரம் மூலம் 3 மணி நேரம் மீட்புப் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு படைவீரர்கள் சிறுவனின் உடலைச் சடலமாக மீட்டனர். சிறுவனின் உடல் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, இது குறித்து விசாரணை செய்யப்படும் என ராமநாதபுரம் மாவட்ட சார் ஆட்சியர் சுகப் உத்ரா கிராம மக்களுக்கு வாக்குறுதி அளித்துள்ளார். மேலும் இந்த கண்மாய்க்குப் படித்துறை அமைத்துத் தரப்படும் என்றும் வாக்குறுதி அளித்துள்ளார்.

இதையும் படிங்க: திமுக அமைச்சர்களாக மாறிய முன்னாள் அதிமுகவினர்!

ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை அருகே உள்ள மல்லல் கிராமத்தில் வசித்து வருபவர் நாகராஜன், இவரது மகன் சுகனேஷ்(13) எட்டாம் வகுப்பு படித்து வந்தார். இவர் நேற்று (மே.6) மாலை சக நண்பர்களுடன் வீட்டின் அருகாமையில் உள்ள கண்மாய்க்கரையில் குளித்துவிட்டு அதன் அருகில் இருக்கக்கூடிய கிணற்றுப் பகுதியில் நின்று கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக விட்டு விட்டுப் பெய்து வரும் மழையால் கிணற்றின் பக்கவாட்டில் அமைக்கப்பட்டிருந்த நடைமேடை சுவர்கள் பலவீனமாக இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இது தெரியாமல் சிறுவர்கள் அந்த இடத்தில் நின்று கொண்டிருந்ததால் திடீரென பள்ளம் ஏற்பட்டு அதில் சுகனேஷ் 15 அடி பள்ளத்திற்குள் சிக்கிக் கொண்டுள்ளார்.

பள்ளி மாணவன் உடல் 8 மணி நேர மீட்பு பணிக்கு பின்பு சடலமாக மீட்பு!

இதனை அறிந்த சக நண்பர்கள் அந்த சிறுவனின் குடும்பத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளார்கள். அதன் பின் ராமநாதபுரம் மற்றும் உத்திரகோசமங்கை தீயணைப்புத் துறையினர் மற்றும் அரசு அலுவலர்கள் ஜேசிபி எந்திரத்தின் மூலம் பள்ளம் தோண்டி மீட்கும் பணியில் கடந்த 5 மணி நேரமாக ஈடுபட்டுவந்தனர்.

அதன் பின்பு பொக்லைன் இயந்திரம் மூலம் 3 மணி நேரம் மீட்புப் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு படைவீரர்கள் சிறுவனின் உடலைச் சடலமாக மீட்டனர். சிறுவனின் உடல் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, இது குறித்து விசாரணை செய்யப்படும் என ராமநாதபுரம் மாவட்ட சார் ஆட்சியர் சுகப் உத்ரா கிராம மக்களுக்கு வாக்குறுதி அளித்துள்ளார். மேலும் இந்த கண்மாய்க்குப் படித்துறை அமைத்துத் தரப்படும் என்றும் வாக்குறுதி அளித்துள்ளார்.

இதையும் படிங்க: திமுக அமைச்சர்களாக மாறிய முன்னாள் அதிமுகவினர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.