ETV Bharat / state

மணல் கொள்ளைக்கு எதிராக குரல் கொடுத்தவர் படுகொலை!

author img

By

Published : Jun 3, 2019, 8:37 AM IST

ராமநாதபுரம்: இளமனூரில் புரண்டி கண்மாயில் மணல் கொள்ளைக்கு எதிராக குரல் கொடுத்தவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

மோகன்

ராமநாதபுரம் மாவட்டம் மேலக்கோட்டை அருகேயுள்ள இளமனூரில் புரண்டி கண்மாயில் இருந்து மணலை திருடியவர்களுடன் இளமனூர் கிராமத்தைச் சேர்ந்த சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் மண் அள்ளுவதை நிறுத்திவிட்டு, அங்கிருந்து சென்றவர்கள் சிறிது நேரம் கழித்து இரண்டு காரில் ஆயுதங்களுடன் வந்து தங்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதில் இளமனூரைச் சேர்ந்த பரதன் என்பவரது மகன் மோகன் (45) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அதே பகுதியைச் சேர்ந்த லெட்சுமணன் (33), செல்வம் (32), சாத்தைய்யா (44), முருகேசன் (45) ஆகியோர் படுகாயமடைந்தனர். இவர்கள் அனைவரும் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவரும் நிலையில், உயிரிழந்த பரதனின் குடும்பத்தினர் கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் உடலை வாங்கமாட்டோம் என மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சாலை மறியலில் ஈடுபட்ட மோகனின் உறவினர்கள்

இதனால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக ராமநாதபுரம்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் ராமநாதபுரம் காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்துசென்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் மேலக்கோட்டை அருகேயுள்ள இளமனூரில் புரண்டி கண்மாயில் இருந்து மணலை திருடியவர்களுடன் இளமனூர் கிராமத்தைச் சேர்ந்த சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் மண் அள்ளுவதை நிறுத்திவிட்டு, அங்கிருந்து சென்றவர்கள் சிறிது நேரம் கழித்து இரண்டு காரில் ஆயுதங்களுடன் வந்து தங்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதில் இளமனூரைச் சேர்ந்த பரதன் என்பவரது மகன் மோகன் (45) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அதே பகுதியைச் சேர்ந்த லெட்சுமணன் (33), செல்வம் (32), சாத்தைய்யா (44), முருகேசன் (45) ஆகியோர் படுகாயமடைந்தனர். இவர்கள் அனைவரும் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவரும் நிலையில், உயிரிழந்த பரதனின் குடும்பத்தினர் கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் உடலை வாங்கமாட்டோம் என மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சாலை மறியலில் ஈடுபட்ட மோகனின் உறவினர்கள்

இதனால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக ராமநாதபுரம்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் ராமநாதபுரம் காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்துசென்றனர்.

இராமநாதபுரம்
ஜூன்.2

மணல் அள்ளுவதை தட்டிக் கேட்டவர் கொலை, 4  பேர் காயம் உறவினர்கள் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியல்.
 
இராமநாதபுரம் மாவட்டம் மேலக்கோட்டை அருகேயுள்ள இளமனுரில் புரண்டி கண்மாயில்  அளவுக்கு மீறி மணல் எடுப்பதாக கூறி மணல் அள்ளியவர்களுடன் இளமனுர் கிராமத்தை சேர்ந்த சிலர் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
 இதனால் மண் அள்ளியவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர். சிறிது நேரம் கழித்து இரண்டு  காரில் ஆயுதங்களுடன் வந்தவர்கள் இரும்பு கம்பி, அரிவாளால் தட்டிகேட்டவர்களை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் இளமனுரை சேர்ந்த பரதன் என்பவரது மகன் மோகன் 45, என்பவர் தண்ணீரில் மூழ்கடித்தது கொலை செய்துள்ளனர். மேலும் லெட்சுமணன் 33, செல்வம் 32, சாத்தைய்யா 44 முருகேசன் 45 அரிவாள், கம்பி கொண்டு தாக்கியுள்ளனர். அவர்கள் அனைவரும்
ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டுசிகிச்சை பெற்று வருகின்றனர். 
  மணல் அள்ளியது ஆளும்., கட்சியின் முக்கிய பிரமுகர் எனவும், கொலைக்கு காரணமாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் உடலை வாங்கமாட்டோம். என்று கூறி  இராமநாதபுரம் அரசு மருத்துவமனை முன்பு உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 1 மணி நேரத்திற்கு மேலாக  இராமநாதபுரம் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் காவல்துறையினர் வாகனங்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டனர். இராமநாதபுரம் காவல் துறை துணை கண்காணிப்பாளர் பேச்சு வார்த்தைக்கு பிறகு சாலை மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது. 
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.