ETV Bharat / state

பயிர்காப்பீடு திட்டத்தில் மோசடி: அலுவலர்கள், விவசாயிகள் மீது நடவடிக்கை!

author img

By

Published : Oct 26, 2019, 2:08 PM IST

ராமநாதபுரம்: பயிர்காப்பீடு திட்டத்தில் விதிகளை மீறி பதிவு செய்த கிராம நிர்வாக அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், அதனால் பயனடைந்த விவசாயிகள் மீதும் காவல் துறையினரிடம் புகார் அளிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் தெரிவித்துள்ளார்.

Crop Insurance Scheme

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், விவசாயிகள் தங்கள் குறைகளை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தனர். அப்போது, மாவட்ட ஆட்சியர் வீரராகவ் ராவ் கூறுகையில், ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 900 கோடி ரூபாய்க்கு மேல் பயிர்காப்பீடு இழப்பீட்டுத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

2018–19ஆம் ஆண்டுக்கான இழப்பீட்டுத்தொகை முதல் தவணையாக ரூ.175.10 கோடிக்கு ஒப்புதல் பெறப்பட்டு ரூ.100 கோடி விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில், திருவாடானை ஒன்றியம் அஞ்சுக்கோட்டை கிராமத்தில் 100 ஏக்கர் பரப்பளவிற்கு விவசாய நிலங்கள் இருக்கும் நிலையில், 400 ஏக்கருக்கு பயிர்காப்பீடு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல், மாவட்டத்தில் பல இடங்களில் பயிர்காப்பீடு திட்டத்தில் விதிமுறைகளை மீறிப் பதிவு செய்து காப்பீடுத் தொகை பெற்றது குறித்து நிறைய புகார்கள் வந்துள்ளன. அதனடிப்படையில், பதிவிற்கு உதவிய கிராம நிர்வாக அலுவலர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இதனைத் தொடர்ந்து, காப்பீடு தொகை நிறுவனம் அளிக்கும் புகார் அடிப்படையில் சம்பந்தப்பட்ட விவசாயிகள் மீதும் காவல் துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டு சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆறாயிரத்து 350 பேரின் காப்பீடு குறித்து சந்தேகம் எழுந்துள்ளது. அதை விசாரித்துவருகிறோம் என மாவட்ட ஆட்சியர் கூறினார்.

இதையும் படிங்க: பள்ளிச் சத்துணவு திட்டத்தில் மாற்றமா? - சமூகநலத்துறை ஆலோசனை!

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், விவசாயிகள் தங்கள் குறைகளை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தனர். அப்போது, மாவட்ட ஆட்சியர் வீரராகவ் ராவ் கூறுகையில், ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 900 கோடி ரூபாய்க்கு மேல் பயிர்காப்பீடு இழப்பீட்டுத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

2018–19ஆம் ஆண்டுக்கான இழப்பீட்டுத்தொகை முதல் தவணையாக ரூ.175.10 கோடிக்கு ஒப்புதல் பெறப்பட்டு ரூ.100 கோடி விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில், திருவாடானை ஒன்றியம் அஞ்சுக்கோட்டை கிராமத்தில் 100 ஏக்கர் பரப்பளவிற்கு விவசாய நிலங்கள் இருக்கும் நிலையில், 400 ஏக்கருக்கு பயிர்காப்பீடு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல், மாவட்டத்தில் பல இடங்களில் பயிர்காப்பீடு திட்டத்தில் விதிமுறைகளை மீறிப் பதிவு செய்து காப்பீடுத் தொகை பெற்றது குறித்து நிறைய புகார்கள் வந்துள்ளன. அதனடிப்படையில், பதிவிற்கு உதவிய கிராம நிர்வாக அலுவலர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இதனைத் தொடர்ந்து, காப்பீடு தொகை நிறுவனம் அளிக்கும் புகார் அடிப்படையில் சம்பந்தப்பட்ட விவசாயிகள் மீதும் காவல் துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டு சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆறாயிரத்து 350 பேரின் காப்பீடு குறித்து சந்தேகம் எழுந்துள்ளது. அதை விசாரித்துவருகிறோம் என மாவட்ட ஆட்சியர் கூறினார்.

இதையும் படிங்க: பள்ளிச் சத்துணவு திட்டத்தில் மாற்றமா? - சமூகநலத்துறை ஆலோசனை!

Intro:
இராமநாதபுரம்,
அக்.26
இராமநாதபுரம் மாவட்டத்தில் பயிர்காப்பீடு திட்டத்தில் விதிகளை மீறி பதிவு செய்த கிராம நிர்வாகலுவலர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், பயனடைந்த விவசாயிகள் மீதும் போலீசில் புகார் அளிக்கப்படும் ஆட்சியர் வீர ராகவ ராவ்.Body:இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர் கூட்டம்
நேற்று நடைபெற்றது. இதிில் விவசாயிகள் தங்கள் குறைகளை ஆட்சியரிடம் விளக்கினர் பின்
பேசிய ஆட்சியர் வீரராகவ ராவ் கூறியது. இராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளுக்கு கடந்த இரண்டாண்டுகளில் மட்டும் 900 கோடி ரூபாய்க்கு மேல் விவசாயிகளுக்கு பயிர்காப்பீடு இழப்பீட்டுத்தொகை வழங்கப்பட்டுள்ளது. 2018–19ம் ஆண்டுக்கு இழப்பீட்டுத்தொகை முதல்தவணையாக ரூ.175.10 கோடிக்கு ஒப்புதல் பெறப்பட்டு ரூ.100 கோடி விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. திருவாடனை ஒன்றியம் அஞ்சுக்கோட்டை கிராமத்தில் 100 ஏக்கர் அளவிற்கு விவசாய பரப்பளவு இருக்கும் நிலையில், 400 ஏக்கருக்கு பயிர்காப்பீடு செய்யப்பட்டுள்ளது. இது போல் மாவட்டத்தில் பல இடங்களில் பயிர்காப்பீடு திட்டத்தில் விதிமுறைகளை மீறி பதிந்து காப்பீடுத் தொகை பெற்றது குறித்து நிறைய புகார்கள் வந்துள்ளன.


அதனடிப்படையில் பதிவதற்கு உதவிய வி.ஏ.ஓ.,க்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. காப்பீடு தொகை நிறுவனம் அளிக்கும் புகார் அடிப்படையில் சம்பந்தப்பட்ட விவசாயிகள் மீதும் போலீசில் புகார் அளிக்கப்பட்டு சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் 6,350 பேரின் காப்பீடு குறித்து சந்தேகம் எழுந்துள்ளது. அதை விசாரித்துவருகிறோம். என்றார்.
Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.