ETV Bharat / state

தனுஷ்கோடியில் 3 இலங்கை மீனவர்கள் கைது! - தனுஷ்கோடியில் இலங்கை மீனவர்கள் கைது

ராமநாதபுரம்: தனுஷ்கோடி அருகே படகுடன் வந்த மூன்று இலங்கை மீனவர்களை இந்திய கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

ramanathapuram-at-dhanushkodi-3-lankan-fishermen-arrested
தனுஷ்கோடியில் 3 இலங்கை மீனவர்கள் கைது!
author img

By

Published : Feb 16, 2020, 9:51 AM IST

ராமநாதபுரம் மாவட்டம், தனுஷ்கோடி அரிச்சல்முனை அருகே இந்திய கடற்படையின் ஹெலிகாப்டர் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கிடமான முறையில் சென்ற இலங்கையைச் சேர்ந்த பைபர் படகு கண்டனர்.

இதையடுத்து இந்திய கடற்படை வீரர்கள் படகையும், அதிலிருந்த மூவரையும் அரிச்சல்முனை கடல் பகுதிக்கு அழைத்து சென்றனர். பின்னர் ராமேஸ்வரம் கடற்படை முகாமின் கமாண்டர் ஏ.கே. தாஸ், படகில் இருந்த மூன்று பேரிடம் விசாரனை நடத்தியதில் மூவரும் இலங்கையில் உள்ள மன்னார் பகுதியைச் சேர்ந்த அலோசியஸ், அந்தோனி சுகந்த், சகாய வினிஸ்ரோ என்பது தெரியவந்தது.

தனுஷ்கோடியில் இந்திய கடற்படையினரால் கைதான 3 இலங்கை மீனவர்கள்.

மூவரும் திசை மாறி இந்தியப் பகுதிக்குள் வந்தனரா? அல்லது கடத்தல் பொருட்களுடன் இந்திய எல்லைக்குள் வந்தனரா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைதான மூன்று மீனவர்களும் விசாரணைக்கு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது.

இதையும் படிங்க: எல்லை தாண்டி மீன் பிடித்த 11 மீனவர்களை விடுவித்த இலங்கை நீதிமன்றம்

ராமநாதபுரம் மாவட்டம், தனுஷ்கோடி அரிச்சல்முனை அருகே இந்திய கடற்படையின் ஹெலிகாப்டர் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கிடமான முறையில் சென்ற இலங்கையைச் சேர்ந்த பைபர் படகு கண்டனர்.

இதையடுத்து இந்திய கடற்படை வீரர்கள் படகையும், அதிலிருந்த மூவரையும் அரிச்சல்முனை கடல் பகுதிக்கு அழைத்து சென்றனர். பின்னர் ராமேஸ்வரம் கடற்படை முகாமின் கமாண்டர் ஏ.கே. தாஸ், படகில் இருந்த மூன்று பேரிடம் விசாரனை நடத்தியதில் மூவரும் இலங்கையில் உள்ள மன்னார் பகுதியைச் சேர்ந்த அலோசியஸ், அந்தோனி சுகந்த், சகாய வினிஸ்ரோ என்பது தெரியவந்தது.

தனுஷ்கோடியில் இந்திய கடற்படையினரால் கைதான 3 இலங்கை மீனவர்கள்.

மூவரும் திசை மாறி இந்தியப் பகுதிக்குள் வந்தனரா? அல்லது கடத்தல் பொருட்களுடன் இந்திய எல்லைக்குள் வந்தனரா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைதான மூன்று மீனவர்களும் விசாரணைக்கு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது.

இதையும் படிங்க: எல்லை தாண்டி மீன் பிடித்த 11 மீனவர்களை விடுவித்த இலங்கை நீதிமன்றம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.