ETV Bharat / state

தூக்கில் தொங்கிய சக மாணவனைக் காப்பாற்றிய பள்ளி மாணவன்: எஸ்பி பாராட்டு!

author img

By

Published : Nov 12, 2019, 11:32 PM IST

ராமநாதபுரம்: புளியமரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொள்ள முயன்ற சக மாணவனைக் காப்பாற்றிய பள்ளி மாணவனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் அழைத்துப் பாராட்டினார்.

ramanadhapuram sp appreciate the student who save the co student life

ராமநாதபுரம் மாவட்டம் பேரையூரையடுத்துள்ள உடையார்கூட்டம் கிராமத்தில் வசிக்கும் வடிவேலன் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் படித்து வருகிறார்.

வழக்கம்போல, நேற்று பள்ளி முடிந்துவிட்டு அப்பகுதியில் உள்ள புளியமரத்தின் அருகே சகமாணவர்களுடன் விளையாடிக் கொண்டிருக்கும்போது, வடிவேலனின் சக மாணவர் ஒருவர் அங்கிருந்த புளியமரத்தில் துணியை மாட்டி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொள்ள முயன்றுள்ளார்.

இதனைக்கண்ட மற்ற மாணவர்கள் பயந்து அங்கிருந்து ஓடியுள்ளனர். அப்போது, தூக்கில் தொங்கிய மாணவனைக் காப்பாற்றும் விதமாக, வடிவேலன் சமயோசிதமாக யோசித்து கழுத்தை துணி இறுக்காமலிருக்க, அந்த மாணவனின் வயிற்றைப் பிடித்து தூக்கி நிறுத்தி கூச்சலிட்டுள்ளார்.

தூக்கில் தொங்கிய சகமாணவனைக் காப்பாற்றிய பள்ளி மாணவனுக்கு ராமநாதபுரம் எஸ்பி பாராட்டு

இதன் பிறகு அருகிலிருந்தவர்கள் வந்து அச்சிறுவனை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் அளித்த சிகிச்சைக்குப் பின்பு, தற்போது அந்தச் சிறுவன் நலமாகவுள்ளார்.

சமயோசிதமாக யோசித்து மாணவனின் உயிரைக்காப்பாற்றிய வடிவேலன் குறித்து அறிந்த ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார், அவரை நேரில் அழைத்துப் பாராட்டி புத்தகம் ஒன்றை பரிசளித்தார்.

இதையும் படிங்க: ரூ. 1.74 லட்சம் பணத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆயுள் தண்டனை கைதிகளுக்கு பாராட்டு

ராமநாதபுரம் மாவட்டம் பேரையூரையடுத்துள்ள உடையார்கூட்டம் கிராமத்தில் வசிக்கும் வடிவேலன் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் படித்து வருகிறார்.

வழக்கம்போல, நேற்று பள்ளி முடிந்துவிட்டு அப்பகுதியில் உள்ள புளியமரத்தின் அருகே சகமாணவர்களுடன் விளையாடிக் கொண்டிருக்கும்போது, வடிவேலனின் சக மாணவர் ஒருவர் அங்கிருந்த புளியமரத்தில் துணியை மாட்டி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொள்ள முயன்றுள்ளார்.

இதனைக்கண்ட மற்ற மாணவர்கள் பயந்து அங்கிருந்து ஓடியுள்ளனர். அப்போது, தூக்கில் தொங்கிய மாணவனைக் காப்பாற்றும் விதமாக, வடிவேலன் சமயோசிதமாக யோசித்து கழுத்தை துணி இறுக்காமலிருக்க, அந்த மாணவனின் வயிற்றைப் பிடித்து தூக்கி நிறுத்தி கூச்சலிட்டுள்ளார்.

தூக்கில் தொங்கிய சகமாணவனைக் காப்பாற்றிய பள்ளி மாணவனுக்கு ராமநாதபுரம் எஸ்பி பாராட்டு

இதன் பிறகு அருகிலிருந்தவர்கள் வந்து அச்சிறுவனை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் அளித்த சிகிச்சைக்குப் பின்பு, தற்போது அந்தச் சிறுவன் நலமாகவுள்ளார்.

சமயோசிதமாக யோசித்து மாணவனின் உயிரைக்காப்பாற்றிய வடிவேலன் குறித்து அறிந்த ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார், அவரை நேரில் அழைத்துப் பாராட்டி புத்தகம் ஒன்றை பரிசளித்தார்.

இதையும் படிங்க: ரூ. 1.74 லட்சம் பணத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆயுள் தண்டனை கைதிகளுக்கு பாராட்டு

Intro:இராமநாதபுரம்
நவ.12
தற்கொலை செய்ய முயன்ற பள்ளிச் சிறுவனை காப்பாற்றி சிறுவனுக்கு இராமநாதபுரம் எஸ்பி பாராட்டி புத்தகம் பரிசு.Body:இராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்த பேரையூர் அருகே உள்ள கருங்குளம் பஞ்சாயத்து யூனியன் நடுநிலை பள்ளியில் படிக்கும் சிறுவர்கள் பள்ளி முடிந்து வீட்டுக்குச் சென்றனர். அப்போது எட்டாம் வகுப்பு படிக்கும் பள்ளிச் சிறுவன் மரத்தில் ஏறி தற்கொலை செய்து கொள்வதற்காக துணியில் தொங்கியதாக கூறப்படுகிறது. அதனை கண்ட வடிவேலன் என்ற சிறுவன மளமளவென மரத்தில் மீது ஏறி தற்கொலைக்கு முயன்ற சிறுவனை இடுப்பை பிடித்து தூக்கி, தூக்குமாட்டிய துணி கழுத்தை இறுக்குவதற்கு முன்பு தூக்கி நிறுத்தி விட்டு கூச்சலிட்டார், பின் அங்கிருந்தவர்கள் ஓடிவந்து மரத்தில் ஏறி சிறுவனை மீட்டனர். தொடர்ந்து அந்தச் சிறுவனை மதுரையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக எடுத்துச் சென்றுள்ளனர். இப்போது அந்த சிறுவன் உடல் நலம் உள்ளான்.

இந்த நிலையில் சமயோசிதமாக யோசித்து உடனடியாக மரத்தில் ஏறி கழுத்தில் தொங்கிய துணி கழுத்தை இறுக்குவதற்கு முன்பு வயிற்றை பிடித்து தூக்கி உயிர் இழப்பு ஏற்படாமல் தடுப்பதற்கு போராடிய சிறுவன் வடிவேலனை ராமநாதபுரம் எஸ்பி அருண்குமார் நேரில் அழைத்து பாராட்டி புத்தகம் பரிசாக வழங்கினார்.



Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.