ETV Bharat / state

ரயில்வே வாரியத் தலைவர் வினோத்குமார் யாதவ் பாம்பனில் ஆய்வு!

author img

By

Published : Oct 29, 2019, 7:48 AM IST

ராமநாதபுரம்: ரயில்வே வாரியத் தலைவர் மற்றும் தென்னக ரயில்வேயின் முதன்மை மேலாளர் ஜான் தாமஸ் உள்ளிட்டோர் பாம்பன் பாலத்தை ஆய்வு செய்தனர்.

railway board head inspection in bamban bridge

ராமநாதபுரம் மாவட்டத்தையும் ராமேஸ்வரம் தீவையும் இணைக்கும் புதிய பாலம் ரூ. 240 கோடி செலவில் 2.5 கிலோ மீட்டர் கடல் மீது அமைக்கப்படவிருக்கிறது. அதன் முதற்கட்ட பணிகளாக மண் பரிசோதனை உள்ளிட்டவை நடைபெற்று வருகிறது.

இந்தச்சூழலில் ராமேஸ்வரத்திற்கு சுவாமி தரிசனத்திற்கு குடும்பத்துடன் வந்திருந்த ரயில்வே வாரியத் தலைவர் வினோத்குமார் யாதவ் பாம்பன் பாலத்தை ஆய்வு செய்தார்.

ரயில்வே வாரியத் தலைவர் வினோத்குமார் ஆய்வு

அந்த ஆய்வின் போது தென்னக ரயில்வேயின் முதன்மை மேலாளர் ஜான் தாமஸ் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர். பாலத்திற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் முதன்மை ரயில்வே வாரியத் தலைவரின் ஆய்வு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: 'மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்!' - மீன்வளத் துறை எச்சரிக்கை

ராமநாதபுரம் மாவட்டத்தையும் ராமேஸ்வரம் தீவையும் இணைக்கும் புதிய பாலம் ரூ. 240 கோடி செலவில் 2.5 கிலோ மீட்டர் கடல் மீது அமைக்கப்படவிருக்கிறது. அதன் முதற்கட்ட பணிகளாக மண் பரிசோதனை உள்ளிட்டவை நடைபெற்று வருகிறது.

இந்தச்சூழலில் ராமேஸ்வரத்திற்கு சுவாமி தரிசனத்திற்கு குடும்பத்துடன் வந்திருந்த ரயில்வே வாரியத் தலைவர் வினோத்குமார் யாதவ் பாம்பன் பாலத்தை ஆய்வு செய்தார்.

ரயில்வே வாரியத் தலைவர் வினோத்குமார் ஆய்வு

அந்த ஆய்வின் போது தென்னக ரயில்வேயின் முதன்மை மேலாளர் ஜான் தாமஸ் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர். பாலத்திற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் முதன்மை ரயில்வே வாரியத் தலைவரின் ஆய்வு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: 'மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்!' - மீன்வளத் துறை எச்சரிக்கை

Intro:இராமநாதபுரம்
அக்.27

இரயில்வே வாரியத் தலைவர் பாம்பனில் ஆய்வு.Body:இராமநாதபுரம் மாவட்டத்தையும் இராமேஸ்வரம் தீவையும் இணைக்கும் புதிய பாலம் கடல் நடுவில் 240 கோடி செலவில் 2.5 கிலோமீட்டர் கடல் மீது புதிய பாலம் அமைக்கும் பணி தொடங்கி முதற்கட்ட மண் பரிசோதனை உள்ளிட்டவை நடைபெற்று வருகிறது. இந்த பணியை எடுத்துள்ள ரெயில் விகாஸ் நிகாம் லிமிடெட் நிறுவனத்தின் திட்ட மேலாளர் கமலகர ரெட்டி, சிறிது நாட்களுக்கு முன் பாம்பன் பாலத்திற்கு அருகே புதிய அறையை திறந்து பின் புதிய பாலம் அமைய உள்ள இடத்தை நேரில் ஆய்வு செய்தார். அதனைத்தொடர்ந்து அவ்வப்போது இரயில்வே முக்கிய அதிகாரிகள் ஆய்வு செய்து வந்தனர். இந்நிலையில் நேற்று ரயில்வே வாரியத் தலைவர் வினோத் குமார் யாதவ்,
ராமேஸ்வரத்திற்கு சுவாமி தரிசனத்திற்கு குடும்பத்துடன் வந்திருந்தார்.
வினோத் குமார் யாதவ் மற்றும் தென்னக ரயில்வேயின் முதன்மை மேலாளர் ஜான் தாமஸ் உள்ளிட்ட அதிகாரிகள் சிறப்பு ரயிலில் சென்று பாம்பன் பாலத்தை ஆய்வு செய்தனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இராமேஸ்வரம் கோயிலில் சிறப்பு தரிசனம் செய்து தனுஷ்கோடி புறப்பட்டுச் சென்றார்.
பாலத்திற்கான பணிகள் துவங்கி நடைபெற்று வரும் நிலையில் முதன்மை ரயில்வே வாரியத் தலைவரின் ஆய்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.