ETV Bharat / state

காவி உடை அணிந்து சுற்றித் திரிந்த இஸ்லாமியர் - காவல்துறையினர் தீவிர விசாரணை

author img

By

Published : Sep 18, 2019, 11:51 AM IST

ராமநாதபுரம்: ஏர்வாடியில் இந்து சாமியார் போல் வேடமிட்டுச் சுற்றித் திரிந்து வந்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இஸ்லாமிய இளைஞர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அப்துல் வகாப்

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் இளைஞர் ஒருவர் காவி உடை அணிந்து கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாகச் சுற்றி திரிந்து வந்தார். அவர், பொருட்கள் வாங்கும் கடையில் உருது, மராத்தி, ஹிந்தி மொழிகளில் பேசி வந்தார். இதனால் சந்தேகமடைந்த கடை உரிமையாளர்கள், இது குறித்து காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து காவல்துறையினர் அந்த இளைஞரை காவல் நிலையித்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் பெயர் அப்துல் வகாப் என்றும் தந்தையின் பெயர் முனாப் எனவும், சொந்த ஊர் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ளதாகவும் கூறியதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

காவி உடையில் சுற்றி திரிந்த அப்துல் வகாப்
காவி உடையில் சுற்றித் திரிந்த அப்துல் வகாப்

இவர், சாமியார் உடையில் சுற்றித் திரிந்து இரவு நேரங்களில் தர்காவில் உறங்கி வந்துள்ளார். எதற்காகக் காவி உடை அணிந்திருந்தார், எப்படி தமிழ்நாட்டிற்கு வந்தார், ஒருவேளை தீவிரவாதியா என்பது குறித்துத் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் இளைஞர் ஒருவர் காவி உடை அணிந்து கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாகச் சுற்றி திரிந்து வந்தார். அவர், பொருட்கள் வாங்கும் கடையில் உருது, மராத்தி, ஹிந்தி மொழிகளில் பேசி வந்தார். இதனால் சந்தேகமடைந்த கடை உரிமையாளர்கள், இது குறித்து காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து காவல்துறையினர் அந்த இளைஞரை காவல் நிலையித்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் பெயர் அப்துல் வகாப் என்றும் தந்தையின் பெயர் முனாப் எனவும், சொந்த ஊர் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ளதாகவும் கூறியதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

காவி உடையில் சுற்றி திரிந்த அப்துல் வகாப்
காவி உடையில் சுற்றித் திரிந்த அப்துல் வகாப்

இவர், சாமியார் உடையில் சுற்றித் திரிந்து இரவு நேரங்களில் தர்காவில் உறங்கி வந்துள்ளார். எதற்காகக் காவி உடை அணிந்திருந்தார், எப்படி தமிழ்நாட்டிற்கு வந்தார், ஒருவேளை தீவிரவாதியா என்பது குறித்துத் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Intro:இராமநாதபுரம்
செப்.17

ஏர்வாடியில் சாமியார் வேடத்தில் சுற்றிய மகாராஷ்டிரா இளைஞர் காவல்துறை கைது செய்து தீவிர விசாரணை.Body:


ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் காவி உடை அணிநது சுற்றி திரிந்தார். அவர் பொருட்கள் வாங்கிய ஒவ்வொரு கடையிலும் உருது, மராத்தி, ஹிந்தி மொழிகளில் பேசி வந்தார். இதனால் சந்தேகமடைந்த கடை உரிமையாளர்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அவரை போலீஸ் ஸ்டேஷன் அழைத்துச் சென்றனர். விசாரணையில் மகாராஷ்டிரா , சங்லி, மிராஜ், குரு வார் பேட்டை, கிஷான் செளக் பகுதியைச் சேர்ந்த ஏ.வஹாப் ஏ.முனாப் பெபாரி (27) என தெரிந்தது.
இவரிடமிருந்து பறிமுதல் செய்த ஆதார் அட்டையில்
மகாராஷ்டிரா , சங்லி, மிராஜ், குரு வார் பேட்டை, கிஷான் செளக்
ஏ.வஹாப் ஏ.முனாப் பெபாரி எனவும், பான் கார்டில் பெபாரி
அப்துல் வஹாப் அப்துல் முனாப் அப்துல் முனாப் மூசா பெபாரி என ஆங்கிலத்தில் பெயரும், ஹிந்தியில் முகவரியும் அச்சிடப்பட்டு உள்ளது. முஸ்லிம் வாலிபரான இவர் காவி உடை அணிந்து கடந்த சில நாட்களாக தர்ஹா பகுதியில் சுற்றி திரிந்தது குறித்து ஏர்வாடி போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.