ETV Bharat / state

'கேரள வெள்ளத்திற்கு நிவாரணம் வழங்கிய முதலமைச்சர், நீலகிரியை கண்டுகொள்ளவில்லை' - ஆவேசமான நாஞ்சில் சம்பத்

ராமநாதபுரம்: கேரளா வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கிய முதலமைச்சர் பழனிசாமி, நீலகிரி மக்களை நேரில் சென்று பார்க்கவில்லை என்று நாஞ்சில் சம்பத் குற்றஞ்சாட்டியுள்ளார்.

author img

By

Published : Aug 15, 2019, 10:43 PM IST

nanjil sampath

ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி. பட்டிணத்தில் மறைந்த முன்னாள் திமுக தலைவர் மு. கருணாநிதியின் 96ஆவது பிறந்த நாள் விழா நடைபெற்றது. இதில் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினராக நாஞ்சில் சம்பத் அழைக்கப்பட்டு இருந்தார்.

கூட்டத்தில் பேசிய நவாஸ் கனி, "சிறுபான்மையினரை நசுக்கும் வேலையை மத்திய அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அதன் வெளிப்பாடாக முத்தலாக் தடை, என்ஐக்கு சிறப்பு அதிகாரம், காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து உள்ளிட்ட பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன" என்று குற்றம்சாட்டினார்.

பின் ஈடிவி பாரத்திற்கு நாஞ்சில் சம்பத் அளித்த பிரத்யேக பேட்டியில், " வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு பத்து லட்சத்திற்கும் மேல் நிவாரணப்பொருட்களை வழங்கிய முதலமைச்சர் பழனிசாமிக்கு, நீலகிரியில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்க்கக்கூட நேரம் இல்லை. ஆனால் அந்த மக்களை சந்தித்த திமுக தலைவர் ஸ்டாலினை விளம்பரத்திற்காக சென்றதாக கொச்சைப்படுத்தினார்" என்று காட்டமாக விமர்சித்தார்.

நாஞ்சில் சம்பத் பேட்டி

வேலூரில் திமுக, அதிமுக வாக்கு வித்தியாசம் குறைந்த அளவே இருந்தது என்ற கேள்விக்கு, "வேலூரில் அதிமுக 60 வாக்காளர்களுக்கு ஒரு கண்காணிப்பாளர் வைத்து காவல்துறையினர் உதவியோடு பணப்பட்டுவாடா செய்தது, அங்கு போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம், நடிகர் ரஜினிகாந்தின் ஆதரவு பெற்ற வேட்பாளர் என்றும், மேலும் அவர் வெற்றி பெற்றால் மோடி அமைச்சரவையில் பதவி கிடைக்கும் என்றும் மறைமுக பரப்புரை செய்யப்பட்டது. ஆனால் அதையும் தாண்டி திமுக வேலூரில் சிறப்பான வெற்றியைப் பெற்றது" என பெருமிதம் தெரிவித்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி. பட்டிணத்தில் மறைந்த முன்னாள் திமுக தலைவர் மு. கருணாநிதியின் 96ஆவது பிறந்த நாள் விழா நடைபெற்றது. இதில் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினராக நாஞ்சில் சம்பத் அழைக்கப்பட்டு இருந்தார்.

கூட்டத்தில் பேசிய நவாஸ் கனி, "சிறுபான்மையினரை நசுக்கும் வேலையை மத்திய அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அதன் வெளிப்பாடாக முத்தலாக் தடை, என்ஐக்கு சிறப்பு அதிகாரம், காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து உள்ளிட்ட பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன" என்று குற்றம்சாட்டினார்.

பின் ஈடிவி பாரத்திற்கு நாஞ்சில் சம்பத் அளித்த பிரத்யேக பேட்டியில், " வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு பத்து லட்சத்திற்கும் மேல் நிவாரணப்பொருட்களை வழங்கிய முதலமைச்சர் பழனிசாமிக்கு, நீலகிரியில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்க்கக்கூட நேரம் இல்லை. ஆனால் அந்த மக்களை சந்தித்த திமுக தலைவர் ஸ்டாலினை விளம்பரத்திற்காக சென்றதாக கொச்சைப்படுத்தினார்" என்று காட்டமாக விமர்சித்தார்.

நாஞ்சில் சம்பத் பேட்டி

வேலூரில் திமுக, அதிமுக வாக்கு வித்தியாசம் குறைந்த அளவே இருந்தது என்ற கேள்விக்கு, "வேலூரில் அதிமுக 60 வாக்காளர்களுக்கு ஒரு கண்காணிப்பாளர் வைத்து காவல்துறையினர் உதவியோடு பணப்பட்டுவாடா செய்தது, அங்கு போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம், நடிகர் ரஜினிகாந்தின் ஆதரவு பெற்ற வேட்பாளர் என்றும், மேலும் அவர் வெற்றி பெற்றால் மோடி அமைச்சரவையில் பதவி கிடைக்கும் என்றும் மறைமுக பரப்புரை செய்யப்பட்டது. ஆனால் அதையும் தாண்டி திமுக வேலூரில் சிறப்பான வெற்றியைப் பெற்றது" என பெருமிதம் தெரிவித்தார்.

Intro:இராமநாதபுரம்
ஆக்.15
வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் அதிமுக வாக்கு வங்கியில் ரஜினிக்கும் பங்கு உண்டு நாஞ்சில் சம்பத் சொல்லும் புதுக் கணக்கு.


Body:இராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி பட்டினத்தில் மறைந்த
முன்னாள் முதல்வரும்
திமுக தலைவருமான மு. கருணாநிதியின் 96வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. இதில் இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினராக நாஞ்சில் சம்பத் அழைக்கப்பட்டு இருந்தார்.

கூட்டத்தில் பேசி நவாஸ் கனி சிறுபான்மையினரை நசுக்கு வேலையை மத்திய அரசு தொடந்து ஈடுபட்டு வருகிறது. அதன் வெளிப்பாடே முத்தலாக், என்ஐக்கு சிறப்பு அதிகாரம், காஷ்மீரி சிறப்பு அந்தஸ்து ரத்து மசோதாக்கள் என குற்றம் சாட்டினார்.


பின் ஈடிவி பாரதிற்க்கு பிரத்தியேக பேட்டியளித்த நாஞ்சில் சம்பத் கூறியது, கோவை மாவட்ட நீலகிரியில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை பார்க்க முதல்வருக்கு நேரம் இல்லை. ஆனால் அங்கு சென்று பதிப்புகளை பார்த்து மக்களுக்கு ஆறுதல் கூற சென்ற திமுக தலைவர் ஸ்டாலினை விளம்பரத்திற்காக சென்றதாக கொச்சையாக விமர்சனம் செய்கிறார் என்றார்.
கேரள வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 10 லட்சத்திற்கும் நிவாரண பொருட்களை வழங்கியுள்ளார். ஆனால் இங்கு பாதிக்கப்பட்ட மக்களையே பார்க்க நேரமில்லாதவர்கள் கையில் ஆட்சி இருப்பதாக குற்றம்சாட்டினார் அதை அப்புறப்படுத்த நடக்கு போர் இதிலும் வெற்றி பெறுவோம் என்றார்.

வேலூரில் திமுக ,அதிமுக வாக்கு வித்தியாசம் குறைந்த அளவே இருந்தது என்று கேட்ட கேள்விக்கு
வேலூரில் நடைபெற்றது பொதுத் தேர்தல் அல்ல, அதும் இடைத்தேர்தல்

வேலூரில் அதிமுக 60 வாக்காளர்களுக்கு ஒரு கண்காணிப்பாளர் வைத்து காவல்துறை உதவியோடு பணப் பட்டுவாடா செய்தது. அங்கு போட்டியிட்டு அதிமுக வேட்பாளர் ஏ.வி சண்முக, நடிகர் ரஜினிகாந்தின் ஆதரவு பெற்ற வேட்பாளர் என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்தனர்.
மேலும் அவர் வெற்றி பெற்றால் மோடி அமைச்சரவையில் பதவி கிடைக்கும் என்று மறைமுக பிரச்சாரம் செய்தனர்.
இந்த இடைத் தேர்தலில்
ஆளும் அதிமுக வெல்லும் என்ற நியதியை தவிடுபொடியாக்கி ஸ்டாலின் பெற்ற வெற்றி அவர் பெற்ற வெற்றிகளில் மிகப்பெரிய என்றார்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.