ETV Bharat / state

பாரம்பரிய விளையாட்டில் பட்டையைக் கிளப்பிய அரசுப் பள்ளி மாணவர்கள்!

author img

By

Published : Nov 14, 2019, 11:02 PM IST

Updated : Nov 15, 2019, 1:32 AM IST

ராமநாதபுரம் : குழந்தைகள் தினத்தை முன்னிட்டு 20க்கும் மேற்பட்ட பாரம்பரிய விளையாட்டில் அரசு நடுநிலைப் பள்ளி மாணவர்கள் பட்டையைக் கிளப்பினர்.

middle-school-students-back-to-traditional-games

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த தினம் நாடு முழுவதும் குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது வளரும் குழந்தைகள் ஸ்மார்ட் போனுக்கு அடிமையாகி, அதில் பப்ஜி, கிரிக்கெட் உள்ளிட்ட கேம்களை வீட்டில் இருந்தே விளையாடி பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடுவதைத் தவிர்த்தனர்.

இதை நினைவூட்டி அதை மீட்டெடுக்கும் முயற்சியில், ராமநாதபுரம் நகர்ப் பகுதியில் உள்ள வள்ளல் பாரி நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு மறந்து போன 20க்கும் மேற்பட்ட பாரம்பரிய விளையாட்டுகளை விளையாட வைத்து, அதன் அறிவியல் நோக்கம் குறித்து மாணவர்களுக்கு ஆசிரியர்கள் விளக்கம் அளித்து அசத்தினார்கள்.

middle-school-students-back-to-traditional-games
பாரம்பரிய விளையாட்டை விளையாடும் மாணவர்கள்

இதில், பாரம்பரிய விளையாட்டுகளான பாண்டி, பல்லாங்குழி, நொண்டி, கில்லி, பச்சக் குதிரை, காவியம் மணிக்காவியம், கோலி குண்டு, உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பாரம்பரிய விளையாட்டுகளை எல்.கே.ஜி முதல் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் வரை, விளையாடி விளையாட்டின் நோக்கம் குறித்தும் அறிந்து மகிழ்ந்தனர்.

இதுகுறித்து, தலைமை ஆசிரியர் எஸ்தர் வேணி கூறும்போது, 'நிகழ்காலத்தில் வளரும் குழந்தைகள் நிகழ் கால தொழில் நுட்பத்தில் சிக்கி வெளிவராமல் தவிக்கின்றனர். அவர்களை வெளியில் கொண்டு வரும் முயற்சியாக நவம்பர் 14 குழந்தைகள் தினத்தையொட்டி, 20க்கும் மேற்பட்ட பாரம்பரிய விளையாட்டுகளை, மாணவர்களை விளையாட வைத்து அதன் அறிவியல் காரணத்தை விளக்கினோம்' என்றார்.

பாரம்பரிய விளையாட்டில் பட்டையைக் கிளப்பிய அரசுப் பள்ளி மாணவர்கள்

ஏழாம் வகுப்பு மாணவர் அமர்ஸியா கூறும்போது, 'இதுநாள் வரையில் டிவி, மொபைல், உள்ளிட்ட நவீன இயந்திரங்களில் பப்ஜி, மொபைல் கேம் விளையாடினோம். பாரம்பரிய விளையாட்டை ஒற்றுமையுடன் விளையாடி மகிழ்ந்தோம்' என்றார்.

இதையும் படிங்க:

தூக்கில் தொங்கிய சக மாணவனைக் காப்பாற்றிய பள்ளி மாணவன்: எஸ்பி பாராட்டு!

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த தினம் நாடு முழுவதும் குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது வளரும் குழந்தைகள் ஸ்மார்ட் போனுக்கு அடிமையாகி, அதில் பப்ஜி, கிரிக்கெட் உள்ளிட்ட கேம்களை வீட்டில் இருந்தே விளையாடி பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடுவதைத் தவிர்த்தனர்.

இதை நினைவூட்டி அதை மீட்டெடுக்கும் முயற்சியில், ராமநாதபுரம் நகர்ப் பகுதியில் உள்ள வள்ளல் பாரி நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு மறந்து போன 20க்கும் மேற்பட்ட பாரம்பரிய விளையாட்டுகளை விளையாட வைத்து, அதன் அறிவியல் நோக்கம் குறித்து மாணவர்களுக்கு ஆசிரியர்கள் விளக்கம் அளித்து அசத்தினார்கள்.

middle-school-students-back-to-traditional-games
பாரம்பரிய விளையாட்டை விளையாடும் மாணவர்கள்

இதில், பாரம்பரிய விளையாட்டுகளான பாண்டி, பல்லாங்குழி, நொண்டி, கில்லி, பச்சக் குதிரை, காவியம் மணிக்காவியம், கோலி குண்டு, உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பாரம்பரிய விளையாட்டுகளை எல்.கே.ஜி முதல் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் வரை, விளையாடி விளையாட்டின் நோக்கம் குறித்தும் அறிந்து மகிழ்ந்தனர்.

இதுகுறித்து, தலைமை ஆசிரியர் எஸ்தர் வேணி கூறும்போது, 'நிகழ்காலத்தில் வளரும் குழந்தைகள் நிகழ் கால தொழில் நுட்பத்தில் சிக்கி வெளிவராமல் தவிக்கின்றனர். அவர்களை வெளியில் கொண்டு வரும் முயற்சியாக நவம்பர் 14 குழந்தைகள் தினத்தையொட்டி, 20க்கும் மேற்பட்ட பாரம்பரிய விளையாட்டுகளை, மாணவர்களை விளையாட வைத்து அதன் அறிவியல் காரணத்தை விளக்கினோம்' என்றார்.

பாரம்பரிய விளையாட்டில் பட்டையைக் கிளப்பிய அரசுப் பள்ளி மாணவர்கள்

ஏழாம் வகுப்பு மாணவர் அமர்ஸியா கூறும்போது, 'இதுநாள் வரையில் டிவி, மொபைல், உள்ளிட்ட நவீன இயந்திரங்களில் பப்ஜி, மொபைல் கேம் விளையாடினோம். பாரம்பரிய விளையாட்டை ஒற்றுமையுடன் விளையாடி மகிழ்ந்தோம்' என்றார்.

இதையும் படிங்க:

தூக்கில் தொங்கிய சக மாணவனைக் காப்பாற்றிய பள்ளி மாணவன்: எஸ்பி பாராட்டு!

Intro:இராமநாதபுரம்


குழந்தைகள் தினத்தை முன்னிட்டு
20 மேற்பட்ட பாரம்பரிய விளையாட்டில் பட்டையை கிளப்பிய இராமநாதபுரம் அரசு நடுநிலை பள்ளி மாணவர்கள்.


Body:நாடு முழுவதும் மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த தினம் நாடு முழுவதும் குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில்
தற்போது வளரும் குழந்தைகள் ஸ்மார்ட் போன்னுக்கு அடிமையாகி அதில் பப் ஜீ,கிரிக்கெட் உள்ளிட்ட கேம்களை வீட்டில் இருந்தே விளையாடி பாரம்பரிய விளையட்டை விளையாடுவதை தவிர்த்தனர்.
இதை நினைவூட்டி அதை மீட்டெடுக்கும் முயற்சியில் இராமநாதபுரம் நகர் பகுதியில் உள்ள வள்ளல் பாரி நடுநிலை பள்ளியில் மாணவர்களுக்கு மறந்த போன 20க்கும் மேற்பட்ட பாரம்பரிய விளையாட்டுகளை விளையாட வைத்து அதன் அறிவியல் நோக்கம் குறித்து மாணவர்களுக்கு ஆசிரியர்கள்
விளக்கி அசத்தினர்.

இதில், பாரம்பரிய விளையாட்டுகளான பாண்டி, பல்லாங்குழி, நொண்டி, கில்லி,பச்சக் குதிரை, காவியம் மணிகாவியம், கோலி குண்டு, உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பாரம்பரிய விளையாட்டுகளை எல்.கே.ஜி முதல் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் வரை விளையாடி விளையாட்டின் நோக்கம் குறித்தும் அறிந்து மகிழ்ந்தனர்.


இது குறித்து
ஏழாம் வகுப்பு மாணவர் அமர்ஸியா கூறும் போது; இதுநாள் வரையில் டிவி, மொபைல், உள்ளிட்ட நவீன இயந்திரங்களில் பப்ஜீ, மொபைல் கேம் விளையாடினோம் இன்று பாரம்பரிய விளையாட்டை ஒற்றுமையுடன் விளையாடி மகிழ்ந்தோம் என்றார்.

தலைமை ஆசிரியர் எஸ்தர் வேணி கூறும்போது நிகழ்காலத்தில் வளரும் குழந்தைகள் நிகழ்கால தொழில்நுட்பத்தில் சிக்கித் வெளிவராமல் தவிக்கின்றனர். அவர்கள் வெளியில் கொண்டு வரும் முயற்சியாக நவம்பர் 14 குழந்தைகள் தினமான இன்று 20 மேற்பட்ட பாரம்பரிய விளையாட்டுகளை மாணவர்களை விளையாட வைத்து அதன் அறிவியல் காரணத்தை விளக்கினோம், இந்த விளையாட்டை வீட்டில் குழந்தைகள் விளையாட்டு பெற்றோர் ஒத்துழைப்பு வழங்க கேட்க உள்ளோம் என்றார்.

பேட்டி:

1.அமர்ஸியா
ஏழாம் வகுப்பு,

ஷஜா
ஆறாம் வகுப்பு,

எஸ்தர் வேணி
தலைமை ஆசிரியர்.


Conclusion:
Last Updated : Nov 15, 2019, 1:32 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.