ETV Bharat / state

ஓ.பி.எஸும் - ஈ.பி.எஸும் அதிமுகவின் இரண்டு கண்கள்

ராமநாதபுரம்: ஓ.பி.எஸும் - ஈ.பி.எஸும் அதிமுகவின் இரண்டு கண்கள் என அமைச்சர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.

author img

By

Published : Jun 9, 2019, 6:33 PM IST

அமைச்சர் மணிகண்டன்

ராமநாதபுரம் மாவட்டம்,ராமேஸ்வரத்தில் மாநில சுற்றுலாத் துறை சார்பில் ரூ. 2கோடி மதிப்பில் சாலைகள் அமைக்கப்படவுள்ளது. இந்தப் பணியை தொடங்கி வைக்க அமைச்சர் மணிகண்டன் ராமேஸ்வரம் வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, சாலை அமைக்கும் இந்தத் திட்டம் ஏற்கனவே திட்டமிடப்பட்டதாகும். தேர்தல் விதிமுறைகள் அமலில் இருந்ததால் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்தத் திட்டத்தை தவிர்த்து கூடுதலாக ரூ.5 கோடி செலவில் சாலைப்பணிகள், முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல்கலாம் பெயரில் கலை அறிவியல் கல்லூரி உள்ளிட்டவைகளும் தொடங்கப்படவுள்ளது என்றார்.

ஓ.பி.எஸும் - இ.பி.எஸும் அதிமுகவின் இரண்டு கண்கள்

இதைத்தொடர்ந்து அதிமுகவிற்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என எம்எல்ஏ ராஜன் செல்லப்பா கூறிய கருத்து தொடர்பாக செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, எம்எல்ஏ ராஜன் செல்லப்பா கூறியதற்கு கருத்து சொல்ல விரும்பவில்லை. ஏனெனில் அவர் கட்சியின் மூத்த உறுப்பினர். அதே நேரத்தில் ஓபிஎஸூம், ஈபிஎஸூம் அதிமுகவின் இருகண்கள் ஆவார்கள். அவர்களை பிரித்துப் பார்க்க விரும்பவில்லை என்றார்.

ராமநாதபுரம் மாவட்டம்,ராமேஸ்வரத்தில் மாநில சுற்றுலாத் துறை சார்பில் ரூ. 2கோடி மதிப்பில் சாலைகள் அமைக்கப்படவுள்ளது. இந்தப் பணியை தொடங்கி வைக்க அமைச்சர் மணிகண்டன் ராமேஸ்வரம் வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, சாலை அமைக்கும் இந்தத் திட்டம் ஏற்கனவே திட்டமிடப்பட்டதாகும். தேர்தல் விதிமுறைகள் அமலில் இருந்ததால் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்தத் திட்டத்தை தவிர்த்து கூடுதலாக ரூ.5 கோடி செலவில் சாலைப்பணிகள், முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல்கலாம் பெயரில் கலை அறிவியல் கல்லூரி உள்ளிட்டவைகளும் தொடங்கப்படவுள்ளது என்றார்.

ஓ.பி.எஸும் - இ.பி.எஸும் அதிமுகவின் இரண்டு கண்கள்

இதைத்தொடர்ந்து அதிமுகவிற்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என எம்எல்ஏ ராஜன் செல்லப்பா கூறிய கருத்து தொடர்பாக செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, எம்எல்ஏ ராஜன் செல்லப்பா கூறியதற்கு கருத்து சொல்ல விரும்பவில்லை. ஏனெனில் அவர் கட்சியின் மூத்த உறுப்பினர். அதே நேரத்தில் ஓபிஎஸூம், ஈபிஎஸூம் அதிமுகவின் இருகண்கள் ஆவார்கள். அவர்களை பிரித்துப் பார்க்க விரும்பவில்லை என்றார்.

இராமநாதபுரம்
ஜூன். 9

ஓ.பி.எஸும் -இ.பி.எஸும் அதிமுகவின் இரு கண்கள் அமைச்சர் மணிகண்டன் கருத்து.

 ராமேஸ்வரத்தில் சுற்றுலா வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.2 கோடி மதிப்பில் சாலைகள் போடப்பட உள்ளது. இப்பணியினை துவக்கி வைக்க அமைச்சர் மணிகண்டன் ராமேஸ்வரம் வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ராமேஸ்வரத்தில் சுற்றுலா வளர்ச்சி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. ஏற்கனவே திட்டமிடப்பட்ட ரூ.2 கோடி மதிப்பிலான சாலை பணிகள் தேர்தல் நடைமுறைகளால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது அப்பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இது தவிர மேலும் 5 கோடி மதிப்பீட்டில் சாலை பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
 மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல்கலாம் பெயரில் ராமேஸ்வரத்தில் கலை அறிவியல் கல்லூரி திறக்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். அதற்கான ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேவஸ்தானத்திற்கு சொந்தமான இடத்தில் இந்த கல்லூரியினை துவக்குவதற்கான பணிகள் நடந்து வருகிறது. இந்த கல்வி ஆண்டிலேயே கல்லூரி நிச்சயம் துவக்கபடும்.
  கட்சிக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா கூறியது குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை. ஏனெனில் அவர் கட்சியின் மூத்த உறுப்பினர். அதே நேரத்தில் அ.தி.மு.க-வின் இரு கண்களாக ஓ.பி.எஸ்-ம் இ.பி.எஸ்-ம் இணைந்து பணியாற்றி வருகின்றனர். அதில் ஒரு கண்ணை சுண்ணாம்பாகாவும், மறு கண்ணை வெண்ணையாகவும் வைத்து பார்க்க விரும்பவில்லை. மக்களின் மாறுபட்ட மன நிலையால் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி கிடைக்கவில்லை. ஆனாலும் சட்டமன்ற இடைத்தேர்தலில் பரமக்குடி உள்ளிட்ட  9 தொகுதிகளை வென்றிருக்கிறோம்'' என்றவரிடம்  'அமைச்சர் மணிகண்டனால் நான் எனது தொகுதிக்கு செல்ல முடியவில்லை' என திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ கருணாஸ் கூறியுள்ளது குறித்து கேட்டதற்கு அமைச்சர் மணிகண்டனோ, ''அப்படி ஒரு எம்.எல்.ஏ இருக்கிறாரா?'' என கேள்வி எழுப்பினார்.
 இந்நிகழ்ச்சியில், ராமேஸ்வரம் அ.தி.மு.க நிர்வாகிகள் கே.கே.அர்ச்சுனன், ஆர்.குணசேகரன், மகேந்திரன் மற்றும் பாலமுருகன், பசுமலை, முன்னாள் கவுன்சிலர் முனியசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.