ETV Bharat / state

பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவர் உயிரிழப்பு - கிராமத்தினர் முற்றுகை! - அரசு மேல்நிலை பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவர் பலி!!

ராமநாதபுரம்: உச்சிப்புளி அரசு மேல்நிலைபள்ளியில்  கார்த்தீஸ்வரன் என்ற மாணவர் எட்டாம் வகுப்பு பயின்று வருகிறார். வழக்கம் போல் இவர் மின்மோட்டார் ஆன் செய்த போது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

high-school-student-die-in-electrocute
author img

By

Published : Sep 4, 2019, 11:45 PM IST

ராமநாதபுரம் உச்சிப்புளி அரசு மேல்நிலைபள்ளியில் கார்த்தீஸ்வரன் என்ற மாணவர் எட்டாம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் தனது பள்ளியில் உள்ள மின் மோட்டாரை ஆன் செய்வது வழக்கம். இந்நிலையில் வழக்கம் போல் இவர் மின்மோட்டார் ஆன் செய்ய அருகில் உள்ள இரும்பு குழாயை எடுத்துள்ளார். அப்போது கார்த்தீஸ்வரன் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்தார். இதனை பார்த்த சக மாணவர்கள் ஆசிரியர்களிடம் தெரிவித்தனர்.

high-school-student-die-in-electrocute
சம்பவ இடத்தில் குவிந்த மக்கள்

அவர்கள் உடனடியாக மாணவரை உச்சிப்புளி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மாணவரை பரிசோதித்த மருத்துவர் ஐந்து நிமிடத்திற்கு முன்பாகவே மாணவர் இறந்துவிட்டதாக கூறினார்கள். பின் உயிரிழந்த மாணவரின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல்அறிந்த பெற்றோர்களும்,கிராம மக்களும் பள்ளியில் குவிந்து,ஆசிரியர்களை தாக்க முயன்றுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியதையடுத்து, அங்கு ராமேஸ்வரம் துணை காவல்துறை கண்காணிப்பாளர் மகேஷ் தலைமையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.

high-school-student-die-in-electrocute
உயிரழந்த மாணவர் கார்த்தீஸ்வரன்.

மேலும்,சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி நேரில் ஆய்வு செய்தார். அப்போது கார்த்தீஸ்வரன் உயிரிழப்புக்குக் காரணமான ஆசிரியர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நிர்வாகத்தை மொத்தமாக மாற்ற வேண்டும் என்றும் நிபந்தனை வைத்தனர். மேலும், உயிரிழந்த மாணவர் கார்த்தீஸ்வரன் தந்தை ரமேஷ் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து உச்சிப்புளி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரசு மேல்நிலைப் பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவர் கார்த்தீஸ்வரன் உயிரிழப்பு!

ராமநாதபுரம் உச்சிப்புளி அரசு மேல்நிலைபள்ளியில் கார்த்தீஸ்வரன் என்ற மாணவர் எட்டாம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் தனது பள்ளியில் உள்ள மின் மோட்டாரை ஆன் செய்வது வழக்கம். இந்நிலையில் வழக்கம் போல் இவர் மின்மோட்டார் ஆன் செய்ய அருகில் உள்ள இரும்பு குழாயை எடுத்துள்ளார். அப்போது கார்த்தீஸ்வரன் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்தார். இதனை பார்த்த சக மாணவர்கள் ஆசிரியர்களிடம் தெரிவித்தனர்.

high-school-student-die-in-electrocute
சம்பவ இடத்தில் குவிந்த மக்கள்

அவர்கள் உடனடியாக மாணவரை உச்சிப்புளி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மாணவரை பரிசோதித்த மருத்துவர் ஐந்து நிமிடத்திற்கு முன்பாகவே மாணவர் இறந்துவிட்டதாக கூறினார்கள். பின் உயிரிழந்த மாணவரின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல்அறிந்த பெற்றோர்களும்,கிராம மக்களும் பள்ளியில் குவிந்து,ஆசிரியர்களை தாக்க முயன்றுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியதையடுத்து, அங்கு ராமேஸ்வரம் துணை காவல்துறை கண்காணிப்பாளர் மகேஷ் தலைமையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.

high-school-student-die-in-electrocute
உயிரழந்த மாணவர் கார்த்தீஸ்வரன்.

மேலும்,சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி நேரில் ஆய்வு செய்தார். அப்போது கார்த்தீஸ்வரன் உயிரிழப்புக்குக் காரணமான ஆசிரியர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நிர்வாகத்தை மொத்தமாக மாற்ற வேண்டும் என்றும் நிபந்தனை வைத்தனர். மேலும், உயிரிழந்த மாணவர் கார்த்தீஸ்வரன் தந்தை ரமேஷ் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து உச்சிப்புளி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரசு மேல்நிலைப் பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவர் கார்த்தீஸ்வரன் உயிரிழப்பு!
Intro:ராமநாதபுரம் உச்சிப்புளி மின் அரசு மேல்நிலை பள்ளியில்
மின் மோட்டாரை ஆன் செய்தபொழுது மின்சாரம் தாக்கி எட்டாம் வகுப்பு மாணவர் பலி கிராம மக்கள் பள்ளியை முற்றுகையிட்டதால் பரபரப்பு.


Body:ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ள கல்கிணற்றுவலசை கிராமத்தில் உள்ள அரசு உயர் நிலைப்பள்ளியில் ரமேஷ் பாக்கியலட்சுமி தம்பதியின் மகன் கார்த்தீஸ்வரன் எட்டாம் வகுப்பு பயின்று வந்துள்ளார்.
தினசரி மாணவர் கார்த்தீஸ்வரன் மின் மோட்டாரை ஆன் செய்வது வழக்கமாக கொண்டுள்ளார் இந்நிலையில் இன்று வழக்கம் போல காலை மின்மோட்டாரை ஆன் செய்து அருகிலிருந்த இரும்பு குழாயில் கையை வைத்துள்ளார். இதில் மின்சாரம் தாக்கி நிகழ்விடத்திலேயே மாணவர் சரிந்து விழுந்துள்ளார். இதைக்கண்ட 2 மாணவர்கள் ஆசிரியரிடம் கூற ஆசிரியர் மற்றும் 2 மாணவர்கள் உச்சிப்புளி மருத்துவமனைக்கு கார்தீஸ்வரனை கொண்டு சென்றனர். அங்கு மாணவர் பரிசோதித்த மருத்துவர்கள் ஐந்து நிமிடத்திற்கு முன்பாகவே அவர் இறந்து விட்டதாக கூறியுள்ளனர். பின் ஆசிரியர் பெற்றோருக்கு தொலைபேசி வாயிலாக மாணவர் மயங்கி உள்ளதாக கூறி அழைத்துள்ளார்.
பிறகு மருத்துவமனை வந்த பின்பே இறந்த விஷயத்தை கூறியுள்ளார். மாணவர் கார்த்தீஸ்வரன் இறந்ததையடுத்து பள்ளியில் கிராம மக்கள் குவிந்தனர். மேலும் ஆசிரியரை தாக்க முயற்சி செய்ததால் பரபரப்பான சூழல் நிலவியது காவல்துறையினர் ஆசிரியர்களை மீட்டு பாதுகாப்பு அளித்தனர். இதனால் ராமேஸ்வரம் துணை காவல் துறை கண்காணிப்பாளர் மகேஷ் தலைமையில் 20க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர் நிகழ்விற்கு மாவட்ட கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி நேரில் ஆய்வு செய்தார் மக்கள் இதற்கு காரணமான ஆசிரியர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் நிர்வாகத்தை மொத்தமாக மாற்ற வேண்டும் என்று நிபந்தனை வைத்து வருகின்றனர்.
இறந்த மாணவர் கார்தீஸ்வாரன் தந்தை ரமேஷ் அளித்த புகார் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து உச்சிப்புளி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.