நாடு முழுவதும் கரோனா நோய் தொற்று காரணமாக பல்வேறு கட்ட நோய் தடுப்பு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டுவருகிறது. இதையடுத்து பொதுமுடக்கத்தில் பல்வேறு கட்ட தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில், ராமேஸ்வரம் கோயிலில் தரிசானம் மேற்கொள்வதற்கு வெளிமாவட்ட மற்றும் வெளிமாநில சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கத் தெரிடங்கியுள்ளது.
ராமேஸ்வரத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள் வாகனங்கள், இதர வாகனங்களில் வரும் பயணிகள் முகக்கவசம் அணிந்து வருகிறார்களா, பாதுகாப்பு நெறிமுறைகளை கடைப்பிடிக்கிறார்களா என்று சுகாதாரத்துறை சார்பில் சோதனை நடத்தப்பட்டது. சுகாதாரத்துறை ஆய்வாளர் பாலா சுப்புரமணியம் தலைமையில் பாம்பன், தங்கச்சி மடம் பகுதியில் ஆய்வாளர்கள் இந்தச் சோதனைமேற்கொண்டனர்.
அப்போது முகக்கவசம் அணியாமல் வருபவர்களிடம், பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்காதவர்களிடமும் அபராதம் விதிக்கப்பட்டது. அத்துடன் அவர்களை எச்சரிக்கை செய்தும் அனுப்பப்பட்டனர்.
இதையும் படிங்க: அங்கொட லொக்காவுடன் தொடர்பா? - சிங்கள காவலர் பிரவின் குமாரிடம் சிபிசிஐடி தீவிர விசாரணை