ETV Bharat / state

பெண்ணிடம் லஞ்சம் பெற்ற அரசு அலுவலர் - வைரல் வீடியோ - இளம்பெண்ணிடம் 300 லஞ்சம்,

ராமநாதபுரம்: முதுகுளத்தூரில் அரசு சார்பில் வழங்கப்படும் மானிய விலை இருசக்கர வாகனத்திற்கான விண்ணப்பம் பெறச் சென்ற இளம்பெண்ணிடம் ஊராட்சி அலுவலர் லஞ்சம் வாங்கும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகிவருகிறது.

bribe viral video
author img

By

Published : Oct 6, 2019, 8:34 AM IST

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகேயுள்ள புழுதிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பட்டதாரி இளம்பெண் ராஜலட்சுமி. இவர், தமிழ்நாடு அரசின் இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இருசக்கர வாகனம் பெறுவதற்கான விண்ணப்பத்தை முதுகுளத்தூர் ஊராட்சி முதல் நிலை உதவியாளர் மாரிமுத்துவிடம் கேட்டுள்ளார். அப்போது, மாரிமுத்து ராஜலெட்சுமியிடம் ரூ. 300 லஞ்சம் பெற முயன்றுள்ளார்.

லஞ்சம் பெறும் அரசு அலுவலரின் காணொலி

மேலும், 300 ரூபாய் தரவில்லை என்றால் 25 ஆயிரம் ரூபாய் மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்க முடியாது என்றும் அப்பெண்ணிடம் கூறியாதகத் தெரிகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ராஜலட்சுமி தனது, சகோதரர் உதவியுடன் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சென்று மாரிமுத்துவை சந்தித்து 300 ரூபாயை லஞ்சமாக கொடுத்துள்ளார்.

இந்நிலையில், ராஜலெட்சுமி, மாரிமுத்துவிடம் 300 ரூபாய் பணம் கொடுத்ததை அவரது சகோதரர் மறைமுகமாக வீடியோ எடுத்து வாட்ஸ்அப்பில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பரவியதையடுத்து, லஞ்சம் வாங்கிய மாரிமுத்து மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகேயுள்ள புழுதிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பட்டதாரி இளம்பெண் ராஜலட்சுமி. இவர், தமிழ்நாடு அரசின் இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இருசக்கர வாகனம் பெறுவதற்கான விண்ணப்பத்தை முதுகுளத்தூர் ஊராட்சி முதல் நிலை உதவியாளர் மாரிமுத்துவிடம் கேட்டுள்ளார். அப்போது, மாரிமுத்து ராஜலெட்சுமியிடம் ரூ. 300 லஞ்சம் பெற முயன்றுள்ளார்.

லஞ்சம் பெறும் அரசு அலுவலரின் காணொலி

மேலும், 300 ரூபாய் தரவில்லை என்றால் 25 ஆயிரம் ரூபாய் மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்க முடியாது என்றும் அப்பெண்ணிடம் கூறியாதகத் தெரிகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ராஜலட்சுமி தனது, சகோதரர் உதவியுடன் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சென்று மாரிமுத்துவை சந்தித்து 300 ரூபாயை லஞ்சமாக கொடுத்துள்ளார்.

இந்நிலையில், ராஜலெட்சுமி, மாரிமுத்துவிடம் 300 ரூபாய் பணம் கொடுத்ததை அவரது சகோதரர் மறைமுகமாக வீடியோ எடுத்து வாட்ஸ்அப்பில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பரவியதையடுத்து, லஞ்சம் வாங்கிய மாரிமுத்து மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

Intro:இராமநாதபுரம்
அக்.5

முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம்
மானிய விலை இருசக்கர வாகனம் விண்ணப்பம் பெற 300 லஞ்சம் கேட்ட அதிகாரி வைரல் வீடியோ.Body:இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் புழுதிக்குளம் ஊராட்சியை சேர்ந்த பட்டதாரி இளம்பெண் ராஜலட்சுமி தமிழக அரசின் இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ் ரூபாய் 25 ஆயிரம் மானிய விலையில் இருசக்கர வாகனம் பெற முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம் அலுவலகத்தின் அம்மா இருசக்கர வாகன திட்டத்தின் முதுநிலை உதவியாளர் மாரிமுத்து என்பவரிடம் அதற்கான விண்ணப்பத்தை கொடுக்கச் சென்றபோது பயனாளி ராஜலட்சுமியிடம் முதல் நிலை உதவியாளர் மாரிமுத்து என்பவர் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு 150 ரூபாய் தனக்கு 150 ரூபாய் என மொத்தம் 300 ரூபாய் லஞ்சமாக தர வேண்டுமென விண்ணப்பதாரரிடம் கேட்டுள்ளார் .இல்லை என்றால் மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்க இயலாது என கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த விண்ணப்பதாரர் ராஜலட்சுமி தனது சகோதரர் உதவியுடன் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சென்று 300 ரூபாய் லஞ்சம் கேட்ட மாரிமுத்துவிடம் அதற்கான பணத்தைக் கொடுத்தபோது லஞ்சம் பெறும் அதிகாரி மாரிமுத்துவை வீடியோ படம் எடுத்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியருக்கு வாட்ஸ் அப் சமூக வலைத்தளங்களிலும் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது . இந்த வீடியோ பதிவு தற்போது வைரலாக பரவி வருகிறது .Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.