ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்க செல்லும் தமிழ்நாடு மீனவர்களின் படகுகள் இலங்கை கடற்படையால் அவ்வப்போது சிறை பிடிக்கப்படுகின்றன. சிறைபிடிக்கப்படும் மீனவர்களின் படகுகள் உடனடியாக இலங்கையின் அரசுடமை ஆக்கும் வகையிலும், மேல் முறையீடுக்கு அனுமதி இல்லை என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த புதிய சட்டத்தால் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த சில மீனவர்களின் படகுகள் இலங்கையின் அரசுடமை ஆக்கப்பட்டன.
இலங்கை அரசின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து மீனவ பிரதிநிதிகள் கூட்டம் ராமேஸ்வரத்தில் நேற்று தலைவர் சகாயம் தலைமையில் நடைபெற்றது. இதில் இலங்கை அரசின் புதிய சட்டத்தை எதிர்த்தனர், அதேபோல் மீன்பிடித் தொழில் செய்யும் வகையில் மீன் உணவு அரவை நிறுவனங்களுக்கு மத்திய அரசு விதித்த ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டி காலவரையற்ற வேலை நிறுத்தத்தையும், 29ஆம் தேதி ரயில் மறியலில் ஈடுபட முடிவெடுத்து மீனவ பிரதிநிதிகள் அறிவித்தனர். அதைத் தொடர்ந்து இன்று ராமேஸ்வரத்தில் இருந்து கடலுக்குச் செல்லும் 500க்கும் மேற்பட்ட படகுகள் கரைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.