ETV Bharat / state

தேவர் ஜெயந்தி விழா: பாதுகாப்புக்காக 8,000 காவலர்கள் குவிப்பு! - முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா

ராமநாதபுரம்: தேவரின் 57ஆவது குருபூஜையை முன்னிட்டு பசும்பொன்னில் பாதுகாப்புப் பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், மாவட்டம் முழுவதும் எட்டாயிரம் காவல் துறையினர் பாதுகாப்புப் பணிக்காகக் குவிக்கப்பட்டுள்ளனர்.

Thevar Jayanthi
author img

By

Published : Oct 29, 2019, 7:14 PM IST

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடம் உள்ளது. நாளை தேவரின் 112ஆவது பிறந்தநாள் மட்டும் 57ஆவது குருபூஜை அரசு விழாவாகக் கொண்டாடப்படுகிறது. குருபூஜை நடைபெறுவதை ஒட்டி அங்கு மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா ஆகியோர் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர்.

தேவர் ஜெயந்தி விழா, குருபூஜைக்காக எட்டாயிரம் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். தேவர் நினைவிடம் வரும் வழியில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு முக்கியப் பகுதிகள் கண்காணிக்கப்பட்டுவருகின்றன. பொதுமக்களுக்கு இடையூறாகச் செயல்படுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

தேவர் ஜெயந்தி விழா பாதுகாப்புக்காக காவல் துறையினர் குவிப்பு

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் வெளியிட்ட அறிக்கையில், "தேவர் பூஜைக்காக உள்ளூர் வாசிகள், வெளி மாவட்டங்களிலிருந்து வரும் வாகனங்களுக்கு தனித்தனி வழி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த வழியைத்தான் பயன்படுத்த வேண்டும், வேறு பாதையில் வந்தால் அனுமதிக்கப்படாது. பசும்பொன்னில் முதலுதவி, தீயணைப்பு, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை: எஸ்.பி. நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடம் உள்ளது. நாளை தேவரின் 112ஆவது பிறந்தநாள் மட்டும் 57ஆவது குருபூஜை அரசு விழாவாகக் கொண்டாடப்படுகிறது. குருபூஜை நடைபெறுவதை ஒட்டி அங்கு மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா ஆகியோர் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர்.

தேவர் ஜெயந்தி விழா, குருபூஜைக்காக எட்டாயிரம் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். தேவர் நினைவிடம் வரும் வழியில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு முக்கியப் பகுதிகள் கண்காணிக்கப்பட்டுவருகின்றன. பொதுமக்களுக்கு இடையூறாகச் செயல்படுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

தேவர் ஜெயந்தி விழா பாதுகாப்புக்காக காவல் துறையினர் குவிப்பு

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் வெளியிட்ட அறிக்கையில், "தேவர் பூஜைக்காக உள்ளூர் வாசிகள், வெளி மாவட்டங்களிலிருந்து வரும் வாகனங்களுக்கு தனித்தனி வழி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த வழியைத்தான் பயன்படுத்த வேண்டும், வேறு பாதையில் வந்தால் அனுமதிக்கப்படாது. பசும்பொன்னில் முதலுதவி, தீயணைப்பு, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை: எஸ்.பி. நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

Intro:இராமநாதபுரம்
அக்.29
தேவரின் 57வது குருபூஜையை முன்னிட்டு பசும்பொன்னில் பாதுகாப்பு பணிகள் தீவிரம்,மாவட்டம் முழுவதும் 8000 ஆயிரம் போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.


Body:இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடம் உள்ளது.
நாளை தேவரின் 112வது பிறந்த நாள் மட்டும் 57வது குருபூஜை அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. பாதுகாப்பு பணி ஏடிஜிபி சட்டம்-ஒழுங்கு ஜெயந்த் முரளி தலைமையில் தென் மண்டல ஐஜி சண்முக ராஜேஸ்வரன் இராமநாதபுரம் டிஐஜி ரூபேஷ்குமார் மீணா மற்றும் ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீணா ஆகியோர் இன்று பசும்பொன்னில் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர் தேவர் குருபூஜை பாதுகாப்பு பணியில் மாவட்டம் முழுவதும் 8000 காவல்துறையினர் ஈடுபட உள்ளனர்.
பசும்பொன் தேவர் நினைவிடத்திற்கு வரும் வழியில் ஆங்காங்கே தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறை செய்துள்ளது.

அதுமட்டுமல்லாது சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு முக்கிய பகுதிகள் கண்காணிக்கப்படும், ஆளில்லா விமானம் மூலம் குரு பூஜைக்கு வருவோர் கண்காணிக்கப்படடுவர், பொதுமக்களுக்கு இடையூறாக செயல்படுவோர் காட்சிகளின் அடிப்படையில் உரிய நடவடிக்கை காவல்துறை சார்பாக எடுக்கப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். மாவட்ட நிர்வாக வெளி மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களுக்கு தனித்தனி வழியை ஒதுக்கியது. அந்த வழியைத்தான் பயன்படுத்த வேண்டும் வேறு பாதையில் வந்தால் அனுமதிக்கப்பட்டாது என்றும் மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் அறிக்கையில் தெரிவித்தார். மாவட்ட நிர்வாகம் சார்பாக பசும்பொன்னில் முதலுதவி,தீயணைப்பு குடிநீர்,கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.