ETV Bharat / state

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு துப்பாக்கி கொண்டு வந்தேனா? - கருணாஸ் பதில் - மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு துப்பாக்கி

ராமநாதபுரம்: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு துப்பாக்கியுடன் தான் வரவில்லை என எம்எல்ஏ கருணாஸ் தெரிவித்துள்ளார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கருணாஸ்
author img

By

Published : Aug 27, 2019, 12:01 PM IST

திருவாடனை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 15 பள்ளிகளுக்கு மடிக்கணினி வழங்குவதற்கு நேற்றைய தினம் எம்எல்ஏ கருணாஸ் ராமநாதபுரம் வந்திருந்தார். இதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த அவர், மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மாவட்ட ஆட்சியருக்கு அழைப்பு விடுத்தார். அப்போது அவர் இடுப்பில் கைத்துப்பாக்கி வைத்திருந்ததாக தகவல் பரவியது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கருணாஸ்

இதுகுறித்து கருணாஸ் தொலைபேசி வாயிலாக ஈடிவி பாரத் செய்தியாளரிடம் கூறியதாவது, ''என்னிடம் கைத்துப்பாக்கிக்கான உரிமம் உள்ளது. நேற்று நான் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு துப்பாக்கியுடன் வந்தேன் என்பது தவறான தகவல். இடுப்பில் வெறும் துப்பாக்கி உறை மட்டுமே இருந்தது. அதில் துப்பாக்கி இல்லை. மறாக காரில்தான் எப்போதும் துப்பாக்கி வைத்திருப்பேன் என்றார்.

திருவாடனை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 15 பள்ளிகளுக்கு மடிக்கணினி வழங்குவதற்கு நேற்றைய தினம் எம்எல்ஏ கருணாஸ் ராமநாதபுரம் வந்திருந்தார். இதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த அவர், மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மாவட்ட ஆட்சியருக்கு அழைப்பு விடுத்தார். அப்போது அவர் இடுப்பில் கைத்துப்பாக்கி வைத்திருந்ததாக தகவல் பரவியது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கருணாஸ்

இதுகுறித்து கருணாஸ் தொலைபேசி வாயிலாக ஈடிவி பாரத் செய்தியாளரிடம் கூறியதாவது, ''என்னிடம் கைத்துப்பாக்கிக்கான உரிமம் உள்ளது. நேற்று நான் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு துப்பாக்கியுடன் வந்தேன் என்பது தவறான தகவல். இடுப்பில் வெறும் துப்பாக்கி உறை மட்டுமே இருந்தது. அதில் துப்பாக்கி இல்லை. மறாக காரில்தான் எப்போதும் துப்பாக்கி வைத்திருப்பேன் என்றார்.

Intro:இராமநாதபுரம்
ஆக.27

ஆட்சியர் அலுவலகத்திற்கு
துப்பாகியுடன் வந்தேனா ஈடிவி பார்த்திற்கு கருணாஸ் அளித்த பதில்.
Body:ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் திருவாடானை தொகுதிக்கு உட்பட 15 பள்ளிகளுக்கு மடிக்கணினி வழங்குவதற்கு நேற்றைய தினம் இராமநாதபுரம் வந்திருந்தார். முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் வீர ராகவ ராவ் பேரிடர் மேலாண்மை மீட்பு உபகரணங்கள் வழங்கிக் கொண்டிருந்த போது திடீரென வந்தார். திருவாடானை எம்எல்ஏ கருணாஸ் தனது இடுப்பு பெல்ட்டில் பகுதியில் அரசு அனுமதி பெற்ற கைத்துப்பாக்கியுடன் வந்ததாக பரபரப்பு நிலவியது.

பின் மாவட்ட ஆட்சியரை தனது தொகுதியான திருவாடானை சட்டமன்ற தொகுதியில் அரசு விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சிகள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார்.
அதனைத் தொடர்ந்து சில நிமிடங்களில் ஆட்சியர் அலுவலகத்தை விட்டு வெளியேறினார்.

இது குறித்து கருணாஸ் தொலைபேசி வாயிலாக ஈடிவி பாரத்திடம் கூறியது என்னிடம் கைத்துப்பாகிக்கான உரிமம் உள்ளது. நேற்று நான் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு துப்பாக்கியுடன் வந்தேன் என்பது தவறான தகவல் என்றும் அதில் துப்பாக்கி இல்லை. வெறும் துப்பாக்கி உறை மட்டுமே இருந்தது என்றும் கூறினார். எப்பொழுதும் காரில் துப்பாக்கி வைத்திருப்பேன் என்றார்.
மேலும் நேற்றைய தினம் திருவாடனைக்கு உட்பட்ட 15 பள்ளிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டன எனவும் கூறினார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.