ETV Bharat / state

அக்னித் தீர்த்த கடற்கரையில் புனித நீராட தடை

ஆவணி அமாவாசை நாளன்று, அக்னித் தீர்த்த கடற்கரையில், பக்தர்கள் புனித நீராட தடைவிதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

author img

By

Published : Sep 4, 2021, 9:08 AM IST

holy bathing  Agni Tirtha beach  rameshwaram Agni Tirtha beach  ramanathapuram rameshwaram Agni Tirtha beach  ramanathapuram news  ramanathapuram latest news  collector  ramanathapuram collector  ramanathapuram collector Chandrakala  collector ban to take holy bath on Agni Tirtha beach  ban to take holy bath  ராமநாதபுரம் செய்திகள்  ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர்  மாவட்ட ஆட்சியர்  ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா  புனித நீராட தடை  அக்னி தீர்த்த கடற்கரை  அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராட தடை  அம்மாவாசை  ஆவணி அம்மாவாசை  தடை
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா

ராமநாதபுரம்: தமிழ்நாட்டில் கரோனா வழிகாட்டு நெறிமுறைகள் முன்னதாக அறிவிக்கப்பட்டு கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் ஆகிய சமய வழிபாட்டுத் தலங்கள் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 30 அன்று கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள், ஒரே நேரத்தில் கூடி அக்னித் தீர்த்த கடலில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர். இது நோய்த்தொற்று இடருக்கு வித்திட்டதாகக் கூறப்படுகிறது.

அனுமதிக்குத் தடை

இதனைக் கருத்தில்கொண்டு, ஆவணி அமாவாசை நாளன்று, அக்னித் தீர்த்த கடற்கரைப் பகுதிகளில் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்ய பொதுமக்கள் கூட வாய்ப்பு உள்ளது. இதனால் தொற்று ஏற்படும் வாய்ப்புள்ளது.

எனவே வருகின்ற செப்டம்பர் 6ஆம் தேதி திங்கள்கிழமை ஆவணி அமாவாசை என்பதனால், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் வழிபடவும், அக்னித் தீர்த்தக்கரையில் பக்தர்கள் புனித நீராடவும் அனுமதி இல்லை என அம்மாவட்ட ஆட்சியர் சந்திரகலா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கரோனா மூன்றாம் அலை பரவலைத் தடுக்கும்பொருட்டு மக்கள் அனைவரும் மாவட்ட நிர்வாகத்தின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டுமெனவும் மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படிங்க: விலக்கு கேட்பதை விட்டு நீட் தேர்வு நடத்த அரசு ஒத்துழைக்க வேண்டும் - அண்ணாமலை

ராமநாதபுரம்: தமிழ்நாட்டில் கரோனா வழிகாட்டு நெறிமுறைகள் முன்னதாக அறிவிக்கப்பட்டு கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் ஆகிய சமய வழிபாட்டுத் தலங்கள் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 30 அன்று கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள், ஒரே நேரத்தில் கூடி அக்னித் தீர்த்த கடலில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர். இது நோய்த்தொற்று இடருக்கு வித்திட்டதாகக் கூறப்படுகிறது.

அனுமதிக்குத் தடை

இதனைக் கருத்தில்கொண்டு, ஆவணி அமாவாசை நாளன்று, அக்னித் தீர்த்த கடற்கரைப் பகுதிகளில் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்ய பொதுமக்கள் கூட வாய்ப்பு உள்ளது. இதனால் தொற்று ஏற்படும் வாய்ப்புள்ளது.

எனவே வருகின்ற செப்டம்பர் 6ஆம் தேதி திங்கள்கிழமை ஆவணி அமாவாசை என்பதனால், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் வழிபடவும், அக்னித் தீர்த்தக்கரையில் பக்தர்கள் புனித நீராடவும் அனுமதி இல்லை என அம்மாவட்ட ஆட்சியர் சந்திரகலா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கரோனா மூன்றாம் அலை பரவலைத் தடுக்கும்பொருட்டு மக்கள் அனைவரும் மாவட்ட நிர்வாகத்தின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டுமெனவும் மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படிங்க: விலக்கு கேட்பதை விட்டு நீட் தேர்வு நடத்த அரசு ஒத்துழைக்க வேண்டும் - அண்ணாமலை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.